Wednesday, December 21, 2011

விஜயபாரதம் கேள்வி பதில்கள்



9.12.11 இதழிலிருந்து;
?: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் மாட்டுவாரா?
!! ஸ்பெக்ட்ரம் வழக்கை சி.பி.ஐ.தான் விசாரிக்கிறது.சி.பி.ஐ.யில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் குடுமி உள்துறை அமைச்சகத்தில் தான் இருக்கிறது.உள் துறை அமைச்சரே ப.சிதம்பரம்தான்.இப்போது சொல்லுங்கள்.மாட்டுவாரா. . .மாட்ட மாட்டாரா?

? சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டுள்ள காலத்தில் அமாவாசை தர்ப்பணம்,மாத தர்ப்பணம்,சூரிய சந்திர கிரகணங்களுக்கான தர்ப்பணம் செய்திடலாமா/
!! பம்பை நதிக்கரையில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் ஏழு தலைமுறையினர் வாழ்க்கையில் வளம் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.தர்ப்பணம் செய்யலாம்.ஆனால்,இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக்கூடாது.
23.12.11 இதழிலிருந்து:
?:ஓடும் ரயிலில் ஒரு பெண்ணை கீழே தள்ளி கற்பழித்த கோவிந்தசாமிக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை அளித்தது பற்றி?
!!: பெயர்தான் கோவிந்தசாமியே தவிர,அவர் ஒரு கிறிஸ்தவர்.அவரை வழக்கிலிருந்து காப்பாற்ற பாதிரிகள் தீவிர முயற்சிகள் செய்தனர் என்று தான் செய்திகள் கசிகின்றன.
?: ஆங்கிலப் புத்தாண்டு அன்று கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை நடைபெறுவது சாஸ்திரப்படி சரியாகுமா?
!!: நள்ளிரவில் கோவில் கதவுகளைத் திறந்து வழிபாடு செய்வது நமது சாஸ்திரத்திற்கு விரோதமானது.சிவராத்திரி,வைகுண்ட ஏகாதசி மட்டும் விதிவிலக்கானது.
?:நதிமூலம்,ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்கிறார்களே,ஏன்?
!!: சில இடங்களில் சமையல் தயாராகும் இடத்தைப் பார்த்தால்,பிறகு சாப்பிடவே மனசு வராது.அதுபோல, ஒரு நதியின் உற்பத்தி ஸ்தானத்தையும், ஒரு மகானின் ஆரம்ப கால வாழ்வையும் பார்க்கக்  கூடாது என்பார்கள்.பார்த்தால் இருக்கிற நம்பிக்கையும் குறைந்துவிடும்.

25.11.11 இதழிலிருந்து:
?:பரதனாரே! சரஸ்வதி நதி இப்போ இருக்கா?
!!: சரஸ்வதி நதி பற்றி பல ஆராய்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.தற்போது பூமிக்கடியில் அந்தர் வாஹினியாகப் பாய்கிறது என்கிறார்கள்.ஹிமாலயத்தில் துவங்கி பிரயாகையில் கங்கையுடன் கலந்துவிடுகிறது.

?:திருநெல்வேலி மேயர் விஜிலா சத்யானந்த பதவியேற்புக்கு வரும்போது அவர் கையில் பைபிள் இருந்ததாமே?
!!:இதெல்லாம் பரதனாரிடம் கேள்வி கேட்டு என்ன லாபம்? இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்.

No comments:

Post a Comment