Friday, February 26, 2010

ருத்திராட்சத்தின் சக்தியால் நவக்கிரகங்களின் பாதிப்பைக் குறைக்க முடியும்


ருத்திராட்சத்தின் மகிமைகள்

சிவபெருமானின் மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணின் அம்சமாகக் கருதப்படுவது ருத்திராட்சமாகும்.ஒரு முகத்திலிருந்து 32 முகம் வரை ருத்ராட்சங்கள் கிடைக்கின்றன.இவை பெரும்பாலும் நேபாளத்திலிருந்தே நமக்கு வருகின்றன.சதுரகிரி,திரு அண்ணாமலை,பொதிகை மலையிலும் ஓரளவு கிடைக்கின்றது.

ஒருவருக்கு ருத்ராட்சம் அணியும் எண்ணம் வருவதற்கே அவர் பல பிறவிகளில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.ருத்ராட்சம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது.மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றில் புண் உருவாகிறது.அதன் அடையாளமாக வாயில் புண் உண்டாகிறது.வயிற்றிற்கும்,வாய்க்கும் இடைப்பட்ட கழுத்துப்பகுதியில் கட்டப்படும் ருத்ராட்சம் இந்த அதீத வெப்பத்தை உறிஞ்சிவிடுகிறது.தவிர, கண்திருஷ்டியிலிருந்து நம்மைக் காக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு.

பஞ்சபூதங்களை எதிர்கொள்ளும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.பஞ்சபூதங்களின் குறிப்பிட்ட விகிதச்சேர்க்கையே நவக்கிரகங்களாகும்.நவக்கிரகங்களின் செயல்பாடுகளால்தான் ஒருவர் கோயில் கட்டுவதும்,மற்றவர் விபச்சாரம் செய்வதும்,மற்றவர் கொலை செய்யப்படுவதும் காரணமாக அமைகிறது.நவக்கிரகங்களின் தூண்டலால் ஒருவர் தீயச் செயல் செய்யாமல் தடுக்கும் சக்தியும்,நவக்கிரகங்களின் பாதிப்பை 100% அளவு இல்லாவிட்டாலும் 70% அளவு குறைக்கும் சக்தி ருத்ராட்சத்திற்கு உண்டு.

2 comments:

  1. Mikka Nantri..
    Enakoru santhega..


    Naan Oru pen.Nan Ithai aniyalama.. Pls pathil Koorungal..

    ReplyDelete
  2. NAAN ORU PEN>> NAAN ITHAI ANIYALAMA>> PATHIL KURUNGAL

    ReplyDelete