Tuesday, February 2, 2010

நாகம் வழிபட்ட சிவலிங்கம்:கும்பகோணம் அருகே சூரியக்கிரகணத்தன்று நிகழ்ந்த அதிசயம்

சூரியக் கிரகணத்தன்று தஞ்சாவூரில் நிகழ்ந்த ஒரு அதிசயம்


?ui=2&view=att&th=12655852d4367bbb&attid=0.1&disp=attd&realattid=ii_12655852d4367bbb&zw




?ui=2&view=att&th=1265585b067e6c51&attid=0.1&disp=attd&realattid=ii_1265585b067e6c51&zw




?ui=2&view=att&th=1265593582e1215a&attid=0.1&disp=attd&realattid=ii_1265593582e1215a&zw




?ui=2&view=att&th=1265585d6e744401&attid=0.1&disp=attd&realattid=ii_1265585d6e744401&zw




?ui=2&view=att&th=126558de638d689d&attid=0.1&disp=attd&realattid=ii_126558de638d689d&zw




?ui=2&view=att&th=12655858da735601&attid=0.1&disp=attd&realattid=ii_12655858da735601&zw


?ui=2&view=att&th=126558555603aab3&attid=0.1&disp=attd&realattid=ii_126558555603aab3&zw






தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள
தேப்பெருமாநல்லூரில் அருள்மிகு வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத
ஸ்வாமி திருக்கோயில் உள்ளது.இங்கு சென்ற சூரியக்கிரகணத்தன்று
நடந்த ஒரு சம்பவம் நிஜமான அதிசயமாகும்.

சுமார் 108 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வரும் சூரியக்கிரகணம்
15.1.2010 வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்தது.அன்று,இங்குள்ள மூலவரின்
அருகில் உள்ள ஐந்து வில்வ மரங்களில் ஒன்றில் ஒரு பாம்பு ஏறி
வில்வ இலை ஒன்றை எடுத்துக்கொண்டு,கீழே இறங்கி விஸ்வநாதர்
உள்ள கர்ப்பக்கிரகத்தை நோக்கிச் சென்றது.
இதற்குள் விஷயம் பரவி,அக்ரஹாரத்திலும் அக்கம்பக்கத்திலும் உள்ள
பக்தர்கள் திரளாகக் குழுமிவிட்டனர்.பக்தர்கள் கூட்டத்தைக் கண்டவுடன்
வாயில் வில்வ இலையுடன் எங்களை நோக்கிச் சீறிய படி வந்தது.
அதன் பிறகு, வில்வ இலையை வாயில் பிடித்தபடி ஊர்ந்து,அபிஷேகத்
தீர்த்தங்கள் வெளியேறும் துவாரம் வழியாக (கோமுகம்) உள்ளே புகுந்தது.
மிகச்சரியாக, சிவன் கருவறைக்குச் செல்லும் கோமுகத்தில் நுழைந்ததுதான்
ஆச்சரியம்.
ஆவுடையாரின் மீது ஏறி லிங்கபாணத்தின் மேல் வில்வ இலையை வைத்தது.
இதைப்பார்த்துப் பரவசப்பட்டனர் பக்தர்கள்.இச்சம்பவம் அனைத்தும்
காலை 9.30 மணி முதல் 11.00 மணிக்குள் நடந்துவிட்டது.

இந்த திருக்கோவில் தல புராணத்திலேயே சர்ப்பங்கள் இங்கு வந்து வழிபட்டதாக
கூறப்பட்டுள்ளன.(இந்த வரிகளை டைப் அடிக்கும்போது கெவுளி சப்தமிட்டது)
கயிலை மலையிலிருந்து அனந்தன், கார்கோடகன்,வாசுகி,சங்கபாலன்,குளிகன்,
மகாபத்மன்,தக்ஷன் ஆகிய ஏழு வகையான சர்ப்பங்களும், ராகுவும் கேதுவும்
கூட இந்த ஆலய சிவனை பூஜை செய்துள்ளன என்கின்றன புராணங்கள்.

நாகம் விஸ்வநாதரை வில்வ இலையைக் கொண்டு பூஜை செய்தது,
வெள்ளிக்கிழமை காலை ராகு கால வேளையில் நடந்திருக்கிறது.

வில்வ மரத்தில் முட்கள் நிறைய இருக்கும்.பாம்பின் தோல் மிக மிருதுவாக
இருக்கும்.அந்த முட்கள் கீறாமல் வில்வ இலையைப் பறித்து அது சிவலிங்கத்தை
பூஜித்தது என்றால், அது மனித அறிவின் எல்லைக்கு அப்பாற்பட்டு நடக்கக்
கூடிய அதிசயங்களில் ஒன்றுதான்.
நன்றி:திரி சக்தி பக்கம் 10 டூ 13,வெளியீடு பிப்ரவரி 1 - 15.

இந்தப்புத்தகம்
தற்போது எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.நாகம் சிவலிங்கத்தின் மீது
வில்வ இலையை அர்ச்சித்தவாறு எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஸ்டிக்கராக
இலவச இணைப்பாக தந்துள்ளனர்.

13.2.2010 வரை கடைகளில் கிடைக்கும்.வாங்கிப்
பாருங்கள்.புகைப்படத்தை வீட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.


திரிசக்திக்கு இணைய தளம் இல்லை.எனவே,இணையத்தில் இது கிடைக்காது.புகைப்படங்களை எமக்கு திரு.சுவாமிநாதன் பழனிவேலு என்ற ஆன்மீகக்கடல் அன்பர் அனுப்பியிருக்கிறார்.அவருக்கு நன்றிகள்!!!

No comments:

Post a Comment