Tuesday, February 2, 2010

கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா?


கி.பி.2012 ஆம் ஆண்டில் உலகம் அழியுமா?

நிபுரு என்ற கிரகம் 3600 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனையும் பூமியையும்
கடக்கும்.அந்தக் கிரகம் ஏறக்குறைய உஷ்ணத்திலும் வீரியத்திலும் இன்னொரு
சூரியனைப்போல் இருக்கும்.அந்தக்கிரகம் தனது சுற்றுப்பாதையில் பூமியைக்
கடக்கும்போது,பூமி தனது சுழற்சியை மூன்று நாட்களுக்கு நிறுத்திவிடும்.இதன்
காரணமாக,அந்த நாட்களில் நாம் சூரியனைப் பார்க்க முடியாது.அதே சமயம்,
பூமியில் நிலநடுக்கம்,ஆழிப்பேரலை என்ற சுனாமி போன்ற இயற்கைப்பேரழிவுகள்
நிகழும்.

அடுத்த வருடம் அதாவது இந்த நிபுரு கிரகத்தை நாம் வெறும் கண்ணாலேயே
பார்க்க முடியும்.21.12.2012 ஆம் தேதிதான் நிபுரு கிரகம் 3600 ஆண்டுக்கு
ஒரு முறை சூரியனையும் பூமியையும் கடக்க இருக்கும் தினம்.

கி.பி.1985 ஆம் ஆண்டில் ஒரு மகான் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள
பாதாளப்பொன்னியம்மன் கோவிலில் பிரசங்கம் செய்தார்.அவர் சொன்னது:
"கடவுள் பக்தி குறைந்து, பூமியில் தான,தர்ம காரியங்கள் அற்றுப்போய், கடலில்
ராட்சத அலைகள்(ஆழிப்பேரலை என்ற சுனாமி) 2012 ஆம் ஆண்டில்
தோன்றும்.சென்னை கடற்கரையை ஒட்டிய பகுதிகளை சுமார் 25 கி.மீ.தூரம்
கடல் கபளீகரம் செய்துவிடும்.
இதைத் தடுக்க நாம் செய்ய வேண்டியது என்ன?
எல்லோரும் இறை நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.முதியோர்களை
முறையாகப் பராமரிக்க வேண்டும். தான தர்ம காரியங்களை தொடர்ந்து செய்து
ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.இதன் மூலம் இந்தப் பேரழிவிலிருந்து
தமிழ்நாட்டைக் காப்பாற்றலாம்.

ஜோதிடரீதியாக 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் என்ன விதமான
அழிவுகளை பூமி சந்திக்கும்?
ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன் கூறுவது என்ன வென்றால்,2011 ஆகஸ்டு
மாதம் சனி பகவான் செவ்வாயின் நட்சத்திரமான சித்திரையில் சஞ்சாரம்
செய்கிறார்.இது சனிக்கு ஆகாததால்,பூமிக்கு நிறைய பாதிப்பு வரலாம்.
15.10.2011 சனி வக்கிரத்தால் பூகம்பமும்,ஆழிப்பேரலை என்ற சுனாமியும்
ஏற்படக்கூடும்.
21.12.2011 இல் சனி கன்னியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சியாகிறார்.
இதனால் தெற்காசிய நாடுகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம்.குறிப்பாக,இந்தியாவுக்கு
அதிக பாதிப்பு இருக்கும்.இயற்கை வளங்கள் அழியும்.பண்பாடு காலாச்சார
மாற்றங்கள் ஏற்படும்.இந்தியாவின் ஒரு பகுதி முழுமையாகப்பாதிப்படைந்து,
இந்தியாவின் மீது போர் திணிக்கப்படும்.மகாராஷ்டிரா,கோவா,தமிழ்நாடு அதிக
உயிர்ச்சேதங்களையும்,பொருட்சேதங்களையும் சந்திக்கும்.ஆக,
2011 இன் இறுதியில் இதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகி,2012 இல்
இயற்கைப்பேரழிவுகள் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
நன்றி:திரிசக்தி பக்கம் 14 டூ17,பிப்ரவரி 1 - 15,2010.

3 comments:

  1. நிபுரு கிரகம் ஒரு கட்டுகதைன்னு எப்பவோ நிருபணம் ஆயிடுச்சு. பூமியை அடுத்த 4 ஆண்டுகளுக்குள் மோதுவதாக இருந்தால் அது இந்நேரம் வெறும் கண்களுக்கே தெரியும். கட்டுகதைகளை நம்பாதீர்கள்.

    ReplyDelete
  2. is it possible or impossible......we cant find out ...i want say this .....just spend ur suffient money to poor....help peoples ...respect ur elders...enjoy ur life....as a human beeing we cant stay in the earth for long time....dont worry...be happy

    ReplyDelete
  3. உலகம் அழிந்தாலும் இல்லாவிட்டாலும், மனிதர்களே ஜாதியின் பெயரால்அடித்துக்கொண்டு அழிந்துவிடுவார்கள்.

    ReplyDelete