Thursday, February 11, 2010

வைஷ்ணவத்துறவியின் ஆதங்கம்

கொடுங்கோலன் ராஜபக்ச, திருப்பதி வழிபாடு: ஆந்திர முதல்வர் பலி! இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம்: வைணவ துறவியின் ஆதங்கம்

மனித அரக்கன் மகிந்த ராஜபக்ச இரண்டு முறை திருப்பதி வந்தார். முதல் முறை ஆந்திர முதல்வர் பலி. இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார். இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும். இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி கூறியுள்ளார்.

அந்த வைணவ துறவி தெரிவித்திருப்பதாவது:-
உலகின் கொடும் அரக்கன்! இனப் படுகொலை நடத்தி பல இலட்சக்கணக்கான மக்களை கொன்ற கம்ப்யூட்டர் கால கொடுங்கோலன் மகிந்த ராஜபக்ச! இந்த அரக்கனுக்கு உதவி செய்த இந்திய பார்ப்பனியம், அமெரிக்க மற்றும் சீனாக்காரர்கள்.
மகிந்த ராஜபக்ச இரண்டு முறை இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலில் வந்து சாமி கும்பிட்டு போனார். முதல் முறை வந்தார். இறுதி யுத்தக் கட்ட காலங்களில், ஹெலிகொப்டர் விபத்தில் இறந்து போனார் ஆந்திர முதலமைச்சர்.
இரண்டாவது முறை வந்து திருப்பதி ஏழு மலையானை வணங்கி விட்டு போனார் மனித அரக்கன் மகிந்த ராஜபக்ச. இன்று பற்றி எரிகிறது ஆந்திர மாநிலம் முழுதும்.
ஆந்திர வரலாற்றில் இது போன்று ஒரு பெரிய போராட்டாம் நடந்தது கிடையாது. அந்த அளவிற்கு மிகப் பெரும் உலகப் பாவி இந்த மகிந்த ராஜபக்ச. தமிழர்களின் எல்லை தெய்வமான ஏழு மலையான் பொறுத்துக் கொள்ளவில்லை. இந்த சண்டாளன் தனது சன்னிதானத்திற்கு வந்து சாமி கும்பிட்டதை..அனுமதி வழங்கிய ஆந்திர அரசுக்கு தகுந்த தண்டனையை வழங்கி இருக்கிறது திருப்பதியின் ஏழுமலையான்! இன்னும் என்னென்ன நடக்குமோ என்று பெயர் குறிப்பிட விரும்பாத வைணவ துறவி கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில்,
இவர்கள் என்ன பரிகாரம் பண்ணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. இந்தப் பாவியின் வருகையினால் இந்தியாவிற்கு மிகப் பெரும் அழிவு நடக்கப் போகிறது என்று கவலை தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் இந்த அளவிற்கு பாதிப்படைந்து, எனது ஐம்பது வருட காலத்தில் பார்த்தது இல்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment