
கடகராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்
தன்னுடைய தெளிவான மனநிலையை நம்பியே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் கடக ராசிக்காரர்களே!
சென்ற 26.6.2009 ஆம் தேதியுடன் தங்களுக்கு ஏழரைச்சனி நீங்கிவிட்டது.ஆனாலும்,ஒரு நிலையான வேலை அல்லது வருமானம் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருப்பீர்கள்.இந்நிலையானது 2010 ஆம் ஆண்டு தீபாவளி வரை தொடரும்.இதுவரை ஏதாவது ஒரு வழிமுறையில் தங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும்.ஆனால்,உங்களது வாழ்க்கைப்பயணத்தை சுலபமாகக் கொண்டு செலுத்தக்கூடியதாக இராது.
2010 ஆம் ஆண்டு தீபாவளிக்குப்பிறகு,தங்களது கல்வித்தகுதி,வேலைத்திறன்,திறமை, சமார்த்தியம், தனி சாமர்த்தியம் இவற்றைப்பொறுத்து மிகச்சிறந்த வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்.அப்படி அமைந்த பின்னர்,தாங்களே நினைத்தாலும் அந்த வேலை அல்லது தொழிலை விட்டு விலக முடியாது.
இதே நிலைதான்,அஷ்டமச்சனி நிறைவடைந்த மகர ராசிக்காரர்களுக்கும்!!!
No comments:
Post a Comment