Friday, February 19, 2010

கிர்லிக் கேமிராவின் மகிமைகளை விண்வெளியில் காட்டினால். . .


கிர்லிக் கேமிராவின் மகிமைகள்

சோவியத் யூனியன் வல்லரசாக இருந்தபோது கம்யூனிஸக்கொள்கை அதன் முகமாக இருந்துவந்தது.அப்போது,மனிதனின் சக்தியே மகத்தான சக்தி என்பதை நிரூபிக்கும் விதமாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அதில் ஒன்றுதான் மன சக்தியைப் பயன்படுத்துதல்.

ஒரு ஜீனியஸ் தனது மூளையின் சக்தியில் 1 % மட்டுமே பயன்படுத்துகிறான் என்பதை சோவியத் கம்யூனிஸ்டுகளின் ஆராய்ச்சிமுடிவுகள் தெரிவித்தன.ஒரு மனிதன் தனது முழு மனசக்தியைப் பயன்படுத்தினால், ஒரே வருடத்தில் 12 பட்டங்களை (டிகிரி) முடிக்க முடியும்.40 வெவ்வேறு மொழிகளை கற்று அந்தந்த வட்டார மொழிக்காரர்களைப்போல பேசமுடியும்.ஆனால், தேவையற்ற கவலை,அர்த்தமற்ற பயம் போன்றவற்றால் தனது மனசக்தியின் தன்மையை உணருவதில்லை.
இந்த மனசக்தியைப் பயன்படுத்துவதன் உச்சமாக அவர்கள் கண்டுபிடித்ததுதான் கிர்லிக் கேமிரா.இந்த கேமிரா ஒன்றின் விலை சுமார் ரூ.40 லட்சமாகும்.இந்தக்கேமிராவின் மூலம் எடுக்கப்படும் புகைப்படம் ஒன்றின் விலை ரூ.5000/-ஆகும்.

இந்த கிர்லிக் கேமிராவின் மூலமாக ஒரு மனிதனின் முகத்தை காலையில் எடுத்தால் அவனது தலையைச் சுற்றிலும் ஆரஞ்சு நிற ஒளிவட்டம் தெரியும்.அந்த மனிதனின் சுறுசுறுப்பான மனநிலையைத் தெரிவிக்கிறது.மதியம் வயலட் நிறம் தெரியும்.சுறுசுறுப்பின் உச்சத்தை அது காட்டுகிறது.மாலையில் ஒரு மனிதனின் முகத்தை புகைப்படம் எடுத்தால் அடர்ந்த கறுப்பு நிறம் தெரியும்.இது அந்த மனிதனின் அசதியைக் காட்டுகிறது.
இந்த கிர்லிக் கேமிராவினால்,இந்தியாவில் புத்த பகவான் தியானம் செய்த கயாவில் உள்ள போதி மரத்தை ஒரு புகைப்படம் எடுத்தனர்.அந்த புகைப்படத்தில் ஒரு துறவி தியானம் செய்வது போன்ற அவுட் லைன் தெரிந்தது.

எனது ஆலோசனை என்ன வெனில், இன்று பல செயற்கைக்கோள்கள் பூமியை 24 மணி நேரமும் சுற்றிவந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றன.இந்த செயற்கைக்கோள்களின் கேமிராக்களுடன் இந்த கிர்லிக் கேமிராக்களை இணைத்து பூமியில் மெக்கா, ஜெருசலம், சதுரகிரி, அண்ணாமலை,இமயமலை, திருக்கையிலாயத்தை ஒரு வருடம் முழுக்க புகைப்படம் எடுத்தால், இந்த சம்பவம் மனித வரலாற்றில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கி விடும் என்பது சந்தேகமே இல்லை;
மேலே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு கிர்லியன் கேமிராவால் எடுக்கப்பட்ட ரெய்கி சக்தியைக் காட்டும் புகைப்படம்

1 comment:

  1. நல்ல ஐடியா! இதனால் பல சக்திமிக்க ஸ்தலங்களை நம்மால் அடையாளம் செய்ய முடியும்.

    ReplyDelete