Saturday, February 13, 2010

அருணாச்சலப்பிரதேச மக்களின் தேசபக்திக்கு நாம் ஆதரவு தருவோம்

ருணாச்சலப்பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது.இந்த அடாவடியை எதிர்த்து அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் சீனப்பொருட்களை பிப்ரவரி 8,2010 முதல் விற்கக்கூடாது என அருணாச்சலப்பிரதேச மாணவர்கள் கூட்டமைப்பு,வர்த்தகர்களுக்கும் மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே போல்,ஏற்கனவே உள்ள சீனப் பொருட்களையும் அகற்ற அவகாசமும் கொடுத்துள்ளனர்.இதற்கு அருணாச்சலப்பிரதேச மாநில மக்களிடம் ஆதரவு பெருகி வருகிறது.
ஆதாரம்:புதிய தலைமுறை , பக்கம்2,வெளியீடு 18.2.2010.

ஆன்மீகக்கடலின் கருத்து: அருணாச்சலப்பிரதேச மக்களின் இந்த செயலுக்கு ஆதரவாக தமிழ்நாடு மாநிலம் மற்றும் இந்தியா முழுவதும் சீனப்பொருட்களை நாம் புறக்கணிக்க வேண்டும்.
நம்மில் பெரும்பாலானவர்கள் சீன மொபைல் செட்டைப் பயன்படுத்திவருகிறோம்.அவற்றை வெகுவிரைவில் நமது பயன்பாட்டிலிருந்து நீக்கிவிட வேண்டும்.சீனாவின் மறைமுக ஆதரவில் செயல்படும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையும் நாம் எதிர்க்க வேண்டும்.

No comments:

Post a Comment