Saturday, February 13, 2010

ஜோதிட & ஆன்மீகக் குறிப்புகள்

ஜோதிட மற்றும் ஆன்மீகக்குறிப்புகள்

1.பயம் நீங்கவும், பதினாறுவகை செல்வ வளமும் ஏற்படவும்:
குறைந்தது 13 முறைஉங்கள் ஊரில் உள்ள பழமையான சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு செய்யவும்.

2.வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படாமல் இருக்க ,பயணம் செய்யும்போது ‘ஹரிஓம்’ என ஜபித்துக்கொண்டே செல்ல வேண்டும்.
மிதிவண்டி,டூ வீலர்,கார்,விமானம்,கப்பல்,(எதிர்காலத்தில் ராக்கெட்/ஸ்பேஸ் பஸ்) என எந்த வாகனத்தில் பயணித்தாலும்,ஹரிஓம் என ஜபித்துக்கொண்டே இருந்தால்,நாம் பயணிக்கும்/ஓட்டும் வாகனம் விபத்திற்குள்ளாகாது.

3.இரவில் கெட்ட கனவு அல்லது கொடூரக் கனவு கண்டு திடுக்கிட்டு எழுந்துவிட்டீர்களா?
அப்படி கனவு கண்டு அதுபோல நிஜத்தில் நடந்துவிடும் என அஞ்சுகிறீர்களா?
ஸ்ரீகோவிந்த ஜெய் கோவிந்தா ஜெய ஜெய மகா கோவிந்தா நமஹா என 9 இன் மடங்குகளில் ஜபித்துவிட்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தால் நீங்கள் பயப்பட்டது பொய்யாகிவிடும்.

4.செய்வினை தோஷம் நீங்கிட:
கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலிருந்து 17 கி.மீ.தூரத்தில் சோட்டானிக்கரை பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது.இங்கு சென்றுவந்தால் செய்வினை தோஷம் நீங்கும்.

5.வியாபாரத்தில் செல்வ வளம் பெருக:
இலட்சுமி கணபதியின் மந்திரம் கீழே தரப்பட்டுள்ளது.இதை தினமும் வியாபார நிலையத்தில் ஜபிக்க வேண்டும்.
“ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய
கணபதியே வரவரத ஸர்வஜனம்மே
வசமானய ஸ்வாஹ”.

இதுதவிர,விநாயகருக்கு தினமும் கற்கண்டு,பழமும் ‘லகு நைவேத்தியம்’ செய்துவர வேண்டும்.இப்படி செய்தால், வியாபாரத்தில் செல்வ வளம் பெருகும்.

6.வருமானம் பெருக உதவும் சிவ மந்திரம்:

வந்தூக ஸ்ந்நிபம் தேவம் த்ரிநேத்ரம்
வந்த்ரசேகரம், த்ரிசூல தாரிணம்
வந்தே சாருஹாசம் சுநிர்மலம்
கபால தாரிணம் தேவம் வரதாய
ஹஸ்தகம்,உமயா ஸஹிதம் சம்பும்
த்யாயேத் ஸோமேச்வரம் சதா

ஹ்ரீம் ஓம் நம: சிவாய ஹ்ரீம்

7.களவு போன பொருளைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவும் மந்திரம் கார்த்த வீர்யார்ஜீன மந்திரம் ஆகும்.

நன்றி: ஜோதிட அரசு, பிப்ரவரி 2010.ஜோதிட விழிப்புணர்வு மாத இதழ்.

No comments:

Post a Comment