Showing posts with label சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி?. Show all posts
Showing posts with label சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி?. Show all posts

Thursday, September 15, 2011

சைவமுறைப்படி விபூதி தயாரிப்பது எப்படி?





பசுவின் சாணத்தை உருண்டையாகப்பிடித்து வெயிலில் 3 அல்லது 4 நாட்கள் உலர்த்த வேண்டும்;உலர்ந்த உருண்டைகளை மூடக்கூடிய அளவுக்கு நெல் உமியைக் குவித்து தீக்கனல் இட வேண்டும்.இதற்குப் பெயர்தான் புடம் போடுதல்!!!மூன்று அல்லது நான்கு நாட்களுக்குப் பிறகு அவை நன்றாக நீர்த்து இருக்கும்.உமியும்,சாணியும் சாம்பலாகி இருக்கும்.உமிச்சாம்பலை நீக்கிவிட்டு,நீறு இருக்கும் சாணி உருண்டைகளை எடுத்து துணியினால் வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.இதுவே சைவ முறையிலான விபூதி அல்லது திருநீறு ஆகும்.



எந்தப் பொருளையும் நெருப்பிலிட்டுச் சுட்டால் கருமை நிறமாக மாறும்(சங்கு மட்டும் விதிவிலக்கு);ஆனால்,கருப்பு நிறமான சாணி/சாணம் உருண்டையை நெருப்பிலிட்டு எரித்தால் அது வெண்மை நிறமாக மாறிவிடுகிறது.



இந்தியா,தமிழ்நாடு,விருதுநகர் மாவட்டம்,ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் கே.பி.எஸ்.செல்வக்குமார் என்பவர்27.1.2010 முதல் சைவமுறைப்படி(மேற்கூறிய முறைப்படி) விபூதி தயாரித்து,ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஸ்ரீவைத்தியநாதசுவாமி திருக்கோவிலுக்கு (மாதம் ஒன்றுக்கு 18 கிலோ)வழங்கி வருகிறார்.



இந்த சைவ விபூதியை நாமும் விலைக்கு வாங்கலாம்.ரூ.150/-செலுத்தினால்,(ஓராண்டுக்கு) மாதம் தோறும் விபூதி கூரியரில் பெற்றுக்கொள்ளலாம்.வெளிநாட்டு அன்பர்கள் இவரது செல் போனில் பேசி எவ்வளவு என்பதை உறுதி செய்துகொண்டு,பெற்றுக்கொள்ளலாம்.



K.P.S.செல்வக்குமார்,இந்து கலாச்சார விரிவாக்க மையம்,கே.பி.எஸ்.நகை மாளிகை,47,நேதாஜி ரோடு,ஸ்ரீவில்லிபுத்தூர்-626125.விருதுநகர் மாவட்டம்,தமிழ்நாடு,இந்தியா.போன்:04563-261274. செல் எண்:94428 40524.