Wednesday, September 7, 2011

ஆன்மீகக்கடல் வாசகர்களுக்கு ஒரு தெய்வீக வேண்டுகோள்





















தமிழ்நாட்டில் 38,000 புராதனமான கோவில்கள் இருக்கின்றன.இவைகளில் சைவ மற்றும் வைஷ்ணவ கோயில்களும்,பிற கோவில்களும் உண்டு.ஆன்மீக ஆராய்ச்சியாளரும்,நமது ஆன்மீக வழிகாட்டியுமாகிய சிவதிரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் நோக்கங்களில் ஒன்றான ஓம்சிவசிவஓம் பரப்பதலை உலகம் முழுவதும் விரிவுபடுத்திட ஆசைப்படுகிறேன்.இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தின் சக்தியை ஆன்மீகக்கடல் வாசகர்களில் பலர் ஜபித்து உணர்ந்திருப்பீர்கள்.(வைஷ்ணவ வாசகர்கள் ஓம்ஹரிஹரிஓம் என ஜபிக்கவும்)



தமிழ்நாடு மாநிலத்தில் ஏழு கோடி தமிழர்கள் வாழ்ந்துவருகிறார்கள்.தமிழ்நாடு தவிர,பிற மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும் சுமார் 3 கோடித்தமிழர்கள் வாழ்ந்துவர,ஆக தமிழர்களின் எண்ணிக்கை 10,00,00,000(பத்து கோடி)பேர்களாகும்.இவர்கள் அனைவருக்கும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் பரவ ஆன்மீகக்கடல் ஆசைப்படுகிறது.இந்த புனிதமான சிவத்தொண்டினைச் செயல்படுத்திட விரும்பும் ஆன்மீகக்கடல் வாசகர்கள் மூன்று விதங்களில் செயல்படமுடியும்.




1.உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயங்களில் பிரதோஷ நாட்களில் மாலை 4.00 மணி முதல் 7.00 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை நோட்டீஸாக அச்சடித்து விநியோகிக்கலாம்.(அச்சடிக்க இயலாதவர்கள் aanmigakkadal@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்ளவும்.)இப்படி ஐந்து ஆண்டுகள் வரை ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் விநியோகிக்க வேண்டும்.உங்கள் சொந்த விருப்பத்தின் பெயரில் இதை நீங்களாக மனமுவந்து செய்துவருக!!!



2.ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் அச்சடிக்க அன்பளிப்பு அனுப்பலாம்.1000, 2000, 5000, 10,000 50,000 எண்ணிக்கையில் அச்சடிக்க அன்பளிப்பு தரலாம்.(அல்லது) உங்கள் ஊரிலேயே உங்கள் நேரடி மேற்பார்வையில் அச்சடித்து,ஆன்மீகக்கடல் முகவரிக்கு அனுப்பலாம்.



3.வெளிமாநிலம்,வெளி நாடுகளில் இருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து,உங்கள் பகுதியில் அச்சடித்து விநியோகிக்கலாம்.



4.தமிழ் மொழியுடன் ஆங்கிலம்,மலையாளம்,இந்தி,பிரெஞ்சு,ரஷ்யன்,சைனம்,ஸ்பானிஷ்,டச்சு என உலகின் எந்த மொழியாக இருந்தாலும் அவற்றில் பின்வரும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்யும் வழிமுறையை மொழிபெயர்த்து எமக்கு மின் அஞ்சல் அனுப்பலாம்.இதன் மூலமாக உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 700 கோடி மனிதர்களில் 100 கோடி மனிதர்களுக்கு ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்பிட முயலுவோமே!(பேராசைதான்.ஆன்மீகக்கடலின் ஆன்மீகப் பேராசை)



5.அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் பல அழிவுகள் மனிதர்களைத் தாக்க இருப்பதால்,அவற்றை தடுக்கும் சக்தி ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்திற்கு உண்டு.எனவே,இணையம் வழியாகவும்,நேரடியாகவும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தைப் பரப்புவோம்.எல்லோரும் ருத்ர அம்சமாக மாறுவோம்.



ஓம்சிவசிவஓம்





2 comments: