Monday, September 5, 2011

துலாம் சனிப்பெயர்ச்சி (30.11.2011 முதல் ஜீன் 2014 வரை)என்ன செய்யும்?









காலச் சக்கரத்தை சிவபெருமானின் அம்சமாகிய பைரவர் இயக்கிவருகிறார்.அப்படி இயக்குவதன்மூலமாக நவக்கிரகங்கள் தத்தம் கடமைகளைச் செய்து வருகின்றன.ஒரு நாளில் சந்திரன்(குறைந்த பட்சம் 19 மணி நேரத்தில் அதிக பட்சம் 36 மணி நேரத்தில்) ஒரு நட்சத்திரத்தையும்,சராசரியாக மூன்று நாட்களில் ஒரு ராசியையும்,ஒரு மாதத்திற்குள்(குறைந்த பட்சம் 28 நாட்கள்,அதிக பட்சம் 32 நாட்கள்) ஒரு ராசியை சூரியனும் கடக்கின்றார்கள்.



இதே காலகட்டத்திற்குள் புதனும்(20 முதல் 30 நாட்களுக்குள்),சுக்கிரனும்(25 முதல் 35 நாட்களுக்குள்) ஒரு ராசியைக் கடக்கின்றார்கள்.45 நாட்களுக்கு ஒரு முறை செவ்வாய் ஒரு ராசியைக் கடக்கிறார்;ஒரு வருடத்துக்கு ஒரு ராசியை குரு பகவான் கடக்கிறார்;ஒன்றரை வருடத்துக்கு ஒரு ராசியை ஒரே நேரத்தில் இராகுவும்,கேதுவும் எதிர்க்கடிகாரச் சுற்றில் கடக்கிறார்கள்;இரண்டரை ஆண்டுகளில்(30 மாதங்கள்=900 நாட்கள்)ஒரு ராசியை சனி கடக்கிறார்;



26.6.2008 முதல் 30.11.2011 சனிபகவான் கன்னிராசியைக் கடந்து கொண்டிருக்கிறார்.இந்த கன்னிச்சனியானது சிம்மராசிக்கு ஏழரைச்சனியில் பாதச்சனியாகவும்,கன்னிராசிக்கு (ஏழரைச்சனியில் நடுப்பகுதியாகவும்)ஜன்மச்சனியாகவும்,துலாம் ராசிக்கு விரையச்சனியாக(ஏழரைச்சனியில் முதல் பகுதியாகவும்)வும்,கும்பராசிக்கு அஷ்டமச்சனியாகவும்,மிதுனராசிக்கு அர்த்தாஷ்டமச்சனியாகவும்(அஷ்டமச்சனியில் பாதி தொல்லை தரும் விதமாகவும்) பரிணமித்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.



ஒரே குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்கள் கும்பராசி,கன்னிராசி,சிம்மராசி,துலாம் ராசியினராக இருந்தால் கடந்த இரண்டரை ஆண்டுகள் அந்த குடும்பத்தாருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளாக நகர்ந்திருக்கும்;(அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தை நேற்று நான் சந்தித்தேன்;பாவம் அவர்களுக்கு ஜோதிடரீதியாக ஆறுதல் சொல்வதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது)



30.11.2011 முதல் சனி துலாம் ராசிக்குள் நுழைகிறார்.இதன் மூலமாக சிம்மராசிக்கு ஏழரைச்சனி முழுமையாக நீங்குகிறது.கன்னிராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி நீங்குகிறது.துலாம் ராசிக்கு கடுமையான கஷ்டகாலமான ஜன்மச்சனி ஆரம்பம்!கும்பராசிக்கு அஷ்டமச்சனி நீங்கி,அவர்களுக்கு விரைவான நற்பலன்கள் படுவேகமாக வரத்துவங்கும்.மீனராசிக்கு அஷ்டமச்சனி ஆரம்பம்.



ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்கு சனி பெயர்ச்சி ஆகுவதற்கு ஆறு மாதம் முன்பிருந்தே,அடுத்த ராசியிலிருக்கும் பலன்களைத் தரத் துவங்குவார்.ஆமாம்!30.5.2011 முதலே துலாம் ராசிக்கு ஜன்மச்சனியின் பலன்களும்,மீன ராசிக்கு அஷ்டமச்சனியின் பலன்களும்,விருச்சிக ராசிக்கு விரையச்சனியின் பலன்களும்,கடகராசிக்கு அர்த்த அஷ்டமச்சனியின் பலன்களும்(அஷ்டமச்சனியின் பாதி பலன்கள்) ஆரம்பமாகியிருக்கும்.





எனவே,இந்த ராசியினர்,சனியின் தாக்குதலில் இருந்து தப்பிக்க(சனி எங்கே தாக்குதல் நடத்துகிறார்?இது வரை நாம் இந்த ஜன்மத்தில் செய்த பாவபுண்ணியத்துக்கேற்றவாறு நமக்கு நிம்மதியையோ,சிரமங்களையோ தருகிறார்.நாம் தான் அவர் மீது பழி சுமத்துகிறோம்)

விநாயகர் வழிபாடு செய்யக்கூடாது;சிவ வழிபாடு செய்யக்கூடாது;இந்த இரண்டு வழிபாட்டினாலும் சனியின் தாக்கத்தைக் குறைப்பது கடினமே!

பதிலாக,ஆஞ்சநேயர் வழிபாடு அல்லது பைரவர் வழிபாடு செய்து வர வேண்டும்.அடுத்த இரண்டரை ஆண்டுகள்(30.11.2011 முதல் ஜீலை 2014 வரை) துலாம்,மீனம் ராசிக்காரர்களுக்கு ஒரு நாள் என்பது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்;பொறுமையைச் சோதிக்கும் விதமான தினசரி சம்பவங்கள் நடைபெறும்.எதற்கெடுத்தாலும் எரிச்சலே மிஞ்சும்.



மேஷம்,கடகம்,விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு கவனக்குறைவு ஒரு தினசரிப்பிரச்னைகளை உருவாக்கிடும்.எனவே,கவனமாக ஒவ்வொரு செயலையும் செய்வது அவசியம்.



30.11.2011க்குள் கடகராசியினர் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழிலை கண்டிப்பாக பெற்றுவிடுவார்கள்.



இழந்த மரியாதை,பிரிந்த உறவுகள்,ஏமாந்த சம்பவங்கள் மூலமாக வாழ்க்கையைப் புரிந்துகொண்டிருக்கும் கடகம் கும்பம் மற்றும் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகள் படிப்படியான முன்னேற்றம் மட்டுமே கைகூடத்துவங்கும்.



எனவே, பைரவர் சன்னதி இருக்கும் பழமையான சிவாலயங்களில் சனிக்கிழமை வரும் இராகு கால நேரமாகிய காலை 9 முதல் 10.30 வரை பைரவ அஷ்டகம் வாசிக்க வேண்டும்.பைரவருக்கு தயிர்ச்சாதம் அல்லது உளுந்துவடை அல்லது சாதத்துடன் கலந்து வெல்லம் நிவேதனமாகப் படைக்க வேண்டும்.இதை துலாம்,மீனம்,கடகம் ராசிக்காரர்கள் ஜீலை 2014 வரை விடாமல் செய்துவர வேண்டும்.அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்திட வேண்டும்.இல்லாவிடில் நிம்மதியிழந்து தற்கொலை செய்யும் எண்ணம் அடிக்கடி தலைதூக்கும்;எச்சரிக்கை!!!

ஓம்சிவசிவஓம்











3 comments:

  1. DEAR SIR
    WHAT ABOUT MAKARAM RASI?
    THIS SANI PEYARCHI IS GOOD OR BAD FOR MAKARAM RASI?
    please reply sir...

    with regards
    R.SARA

    ReplyDelete
  2. naan thulam. sani aarambathile nadakakooda mudiyamal kastapatu ippo moonavathu varudam 80% sugamahiyiruken...enakoru aaruthal sollungal.
    k.naga

    ReplyDelete
  3. துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். வேலை யில்லாம கஷ்டப்பட்டுடிருக்கோம். நவம்- நல்ல காலம் ஆரம்பிக்குதுனு சொன்னாங்க. நீங்க வேர, இனிமேல்தான் கஷ்டம்னா.? முடியாது பா.
    என்ன கொடும சார் இது.?

    ReplyDelete