Thursday, January 28, 2010

இயக்குநர் பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்

இயக்குநர் பாலாவுக்கு ஒரு வேண்டுகோள்

நேற்று ஒரு தமிழ் தினசரி நாளிதழ் தமிழ் திரைப்பட இயக்குநர்
பாலாவைப் பேட்டிகண்டது:

கேள்வி:நான் கடவுள் படத்திற்கு மத்திய அரசு விருது வழங்கியதற்காக
கடவுளுக்கு நன்றி சொல்வீர்களா?
இயக்குநர் பாலாவின் பதில்: நடிகர்கள் நடிகைகள் கஷ்டப்பட்டு நடித்தார்கள்;.................................
.......இல்லாத கடவுளுக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்.

நமது வேண்டுகோள்:இயக்குநர் பாலா அவர்களே! உயிருக்குப் போராடும்
ஒரு நோயாளியைக் காப்பாற்றும் டாக்டரையே நாம் 'டாக்டர் நீங்க
கடவுள் மாதிரி காப்பாத்திட்டீங்க' எனக் கூறுகிறோம்.
உங்கள் திறமைக்குத் தான் மத்திய அரசின் விருது கிடைத்தது என
நாங்கள் பெருமைப்படுகிறோம்.(உங்களுக்கு விருது கிடைத்தால் நாங்கள்
ஏன் பெருமைப்பட வேண்டும் என்றா நாங்கள் நினைக்கிறோம்?!)

உங்களை இந்த உலகத்திற்குத் தந்தார்களே உங்கள் அம்மாவும் அப்பாவும்
அவர்கள் உங்களுக்கு கடவுளாகத் தெரிய வில்லையா?அவர்களுக்கு
நன்றி சொல்லலாமே!

கடவுள் இல்லை எனக்கூறிய தமிழ் நடிகர்கள் திரையுலகிலிருந்தே காணாமல் போனதை மறந்துவிட்டீர்களா?

No comments:

Post a Comment