Tuesday, January 26, 2010

நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்: நவபிருந்தாவனம் பற்றிய முழுமையான முதல் தமிழ் புத்தகம்


ஆன்மீகத் தேடல் இருப்பவர்களுக்கு ஒரு சிறந்த புத்தகம்

ஆந்திரமாநிலத்தில் இருக்கும் நவபிருந்தாவனம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இங்கு ஒரு முறை சென்றுவந்த உடனே உங்களது நீண்ட காலப்பிரச்னைகள்
தீர்ந்துவிடுகின்றன.இதில் திருமணத்தடை,நீண்டகால நோய்கள்,வழக்குகள்,
நிலத் தகராறு,மாந்திரீகக் கோளாறுகள்,எதிரிகளால் நிம்மதியின்மை,
வேலைவாய்ப்புக்கு ஏங்குதல் என சகல விதமான பிரச்னைகளும்
தீர்ந்து வருகின்றன.


நான் கேள்விப்பட்டவரையிலும்,திருச்சியிலிருந்து வட தமிழ்நாடு மாநிலம்
முழுவதும் பல ஊர்களில் சுற்றுலாவாக ஏராளமானவர்கள் சென்று
நவபிருந்தாவனங்களில் உறைந்து நிற்கும் நவ மகான்களைத் தரிசித்து
சர்வ நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆனால்,அங்கு எப்படி போவது? எவ்வளவு நாள் தங்குவது?
எந்த விதத்தில் வழிபடுவது? என இரண்டு ஆண்டுகளாக ஆராய்ந்து
முழுமையாக ஒருவர் இதுபற்றி ஒரு தமிழ் புத்தகம் எழுதியுள்ளார்.
அப்படி எழுதியவர் அம்மன் சத்தியநாதன் அவர்கள்.

இந்தப் புத்தகத்தின்பெயர் நவநிதி நல்கும் நவபிருந்தாவனம்,ரூ.90/-
பக்கங்கள் 264.
புத்தகம் வெளியிட்டவர்: அருள்மிகு அம்மன் பதிப்பகம்
மிகச் சிறந்த நூல்கள் வெளியிடுவோர்
16/116,T.P.கோவில் தெரு,
'திருமலா ஃப்ளாட்ஸ்'(ஸ்ரீராகவேந்திர மடம் எதிரில்)
திருவல்லிக்கேணி,சென்னை-600 005.
தொலைபேசி எண்கள்:42663545,42663546.
புத்தகம் கிடைக்குமிடம்: தமிழகத்தின் எல்லா புத்தகக் கடைகள்

1 comment:

  1. திருவைந்தெழுத்து – திருமூலர்.
    திருவம்பலம் விளங்கச் சக்கரம் அமைத்து. குறுக்கே ஆறு கோடுகள் நேடுக்கே ஆறு கோடுகள் அமையுமாறு கீரவேண்டும். இதிலைமையும் அறைகள் இருபத்தைந்திலும் சிவாயநம என்னும் திருவைந்தெழுத்தை அமைத்து, உள்ளத்தில் ஓதி வழிபடவேண்டும்.
    http://www.tamilkadal.com/?p=1250

    ReplyDelete