Monday, January 4, 2010

தோப்புக்கரணம் போடுதல்:யோகாசன ஆரோக்கிய ரகசியம்

தோப்புக்கரணம் போடுதலும் ஒரு உடல்நலஅறிவியல்

விநாயகரின் முன்பாக நாம் தோப்புக்கரணம் போடுகிறோம் அல்லவா? இந்த தோப்புக்கரணமும் விஞ்ஞான விளக்கத்தை தன்னுள் அடக்கியுள்ளது என்பதை மேல்நாடுகள் நீண்டகால ஆய்வுகளால் கண்டறிந்துள்ளன.அங்கு ,Super Brain Power of Yoga என்ற பெயரில் பிரபலமடைந்துவருகின்றது.

அதென்ன தோப்புக்கரணம்?
வலக்கையை முன்வைத்து வலக்கையால் இடப்புறத்திலும்,இடக்கையால் வலப்புறத்திலும் மண்டையில் மூன்று முறை குட்டுக்கள் இட வேண்டும்.
வலக்கையால் இடதுகாதையும்,இடக்கையால் வலதுகாதையும் பிடித்துக்கொண்டு மூன்றுமுறை தோப்புக்கரணமிடவேண்டும்
அதன் பிறகு,விநாயரின் மந்திரம் ஏதாவது ஒன்றை மூன்று முறை அல்லது மூன்றின் மடங்காக ஜபிக்க வேண்டும்.

தோப்புக்கரணம் என்ற வார்த்தை தோர்பிக்கரணம் என்ற மூலச்சொல்லில் இருந்து மருவியது.
நன்றி:பசுத்தாய்,பக்கம் 17,டிசம்பர் 2009.

No comments:

Post a Comment