Tuesday, April 12, 2016

மனிதக் கடிக்கு தமிழ் மருந்து


நாய் முதலான மிருகங்கள் மனிதனைக் கடித்தால்,அதற்கு சித்த மருத்துவம்,அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம்,அரேபியாவில் உதித்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் யுனானி மருத்துவம்,சீனாவின் மருத்துவமுறையான அக்யூபஞ்சர் என சகல மருத்துவமுறைகளிலும் சிகிச்சையும்,மருந்துகளும் இருக்கின்றன;

ஆனால்,மனிதன் கடித்துவிட்டால்,அதற்குரிய மருத்துவம் இயற்கை மருத்துவத்தில் மட்டுமே இருக்கின்றது;

சிறு குழந்தைகள் விபரம் அறியாமல் கோபத்தில் கடித்து வைத்தாலும்,சண்டையின் போது எதிரி பற்களால் கடித்துவிட்டாலும் அது ஆபத்துமிக்கதாக மாறலாம்;பல் பட்ட இடங்களில் தொடர்ந்து வலியும்,துன்பமும் இருந்தால் மனிதக்கடி கொடியதாக இருப்பதாக உணரலாம்;

சில சமயங்களில் பல் பட்ட இடத்தில் சீழ் பிடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன;இதற்கு மருத்துவசிகிச்சை எடுத்தே ஆகவேண்டும்;இல்லாவிடில் நிலைமை மோசமாகிவிடலாம்;

கொல்லன் கொணங்கிழங்கு என்ற ஒருவகைக் கிழங்கை அரைத்து பாலில் சாப்பிடுவார்கள்;வலி நீங்கும்வரை புளியும் காரமும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

நன்றி:தினத்தந்தி சிறுவர் தங்கமலர் பக்கம் 5,வெளியீடு 29.1.16


No comments:

Post a Comment