Thursday, April 7, 2016

ஜோதிட நினைவூட்டல் எச்சரிக்கை!


26.2.16 அன்று விருச்சிகராசிக்குள் பெயர்ச்சியான செவ்வாய்,இம்முறை வக்கிரமடைவதால் 19.9.16 வரை அங்கேயே இருக்கப் போகிறார்;ஏற்கனவே,அதே விருச்சிகராசியில் சனிபகவான் இருப்பதாலும் இருவரும் ஒரே ராசியில் 19.9.16 வரை சஞ்சாரித்து வருவதாலும்,12 ராசிக்காரர்களும் இந்த 6 மாதத்தில் மன நிம்மதியிழக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது;
இந்த ஜோதிட அமைப்பினால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்தில் பாதிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கின்றோம்;


தினமும் 30 நிமிடம்(காலையிலும்,இரவிலும்) ஏதாவது ஒரு கடவுளின் பெயரை ஜபித்து வருவதால் இந்த யுத்தக் கிரகங்களின் பாதிப்பு நம்மை நெருங்காது;


தினமும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருபவர்களுக்கு 26.2.16 முதல் 19.9.16 வரை மன உறுதியோடு இருப்பார்கள்;


தினமும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்பவர்கள்,ஈசனின் அருட்பார்வையால் இந்த யுத்தக் கிரகப் பாதிப்பிலிருந்து தப்பிவிடுவர்;


தினமும் அன்னதானம் செய்பவர்கள் எப்போதும் நிம்மதியான மனநிலையில் வாழ்ந்து வருவர்;

தினமும் அண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் இந்த கிரகச்சேர்க்கையால் பாதிக்கப்படமாட்டார்கள்;

தினமும் மனவளக்கலை மன்றதியானம் அல்லது ஏதாவது ஒரு தியானம் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு வராது;

தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானம் செய்பவர்கள் யுத்தக்கிரகப் பாதிப்பிலிருந்து விலகி வாழ்வார்கள்;

தினமும் அன்னை அரசாலை(ஆதிவராகி)யின் 12 பெயர்களை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்து வருபவர்கள் வளமான வாழ்க்கையையும்,நிம்மதியான நாட்களையும் அனுபவிப்பார்கள்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி

இவைகள் தான் அந்த 12 பெயர்கள்;இவைகளை தினமும் ஜபிப்பதன் மூலமாக ஆதிவராகி என்ற மங்கள மகாகாளியின் அருளைப் பெறுவர்;

19.9.16 வரை அனைத்து ராசிக்காரர்களும் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்யவும்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்


No comments:

Post a Comment