Friday, April 15, 2016

அம்பிகையின் அருளைப் பரிபூரணமாகப் பெற




ஆடியில் வரும் மஹாவராஹி நவராத்திரி

புரட்டாசியில் வரும் சாரதா நவராத்திரி

மாசியில் வரும் ராஜ மாதங்கி நவராத்திரி

பங்குனியில் வரும் லலிதா நவராத்திரி 

என்று ஒவ்வொரு ஆண்டும் நான்கு நவராத்திரி விரதத்தை யார் மேற்கொள்ளுகிறார்களோ,அவர்களுக்கே அன்னை அம்பிகையின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்;

ஒரு தமிழ் வருடத்தில் நான்கே நான்கு நவராத்திரிகள் தான் இருக்கின்றன என்று எண்ணுவது தவறு;தமிழ் வருடங்கள் 60லும்,ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு விதமான நவராத்திரி விரதங்கள் இருக்கவேண்டும்;மொத்தம் 720 விதமான நவராத்திரி விரதங்கள் இருக்கின்றன;

தற்காலத்தில் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி விரதத்தை மட்டுமே நாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றோம்;


பூமியில் பிறக்கும் புல்,பூண்டு,பாக்டீரியா,வைரஸ்ஸில் இருந்து மனிதன் வரையிலும் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒன்பதுவிதமான உடல்கள் உண்டு;ஒன்பது சரீரங்களில் தான் நாம் மாறி மாறி உயிர் வாழ்ந்து வருகிறோம்;இதைக் குறிக்கும் விதமாகத்தான் நவராத்திரியில் ஒன்பதுவிதமான அலங்காரங்கள் அம்பிகைக்கு செய்து வழிபடுகிறோம்;



ஓம் அகத்தீசாய நமஹ

No comments:

Post a Comment