Thursday, April 7, 2016

நாமும் நமது ஊரில் இயற்கை உணவுக்கான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க இவர்களை நாடுவோமா?

சமைக்காத உணவு சாப்பிட்டு வந்த நமது முன்னோர்கள் பல ஆண்டுகளாக ஆரோக்கியமாக (நோய்கள் இன்றி) வாழ்ந்து வந்துள்ளனர்;

இதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து மருத்துவமுறையாக மாற்றியுள்ளனர் நமது முன்னோர்கள்;அதுதான் இயற்கை மருத்துவம்;

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இயற்கை மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர்;

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தலைமைத் தபால் நிலையம் அருகில் அமைந்திருப்பது தாய் வழி இயற்கை மருத்துவக் கடை ஒன்று திரு.மாறன் ஜி அவர்கள் தலைமையில் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கிவருகின்றது;

சிவகாசியில் இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்குவதோடு,இயற்கை உணவுகளை தினமும் விற்பனை செய்தும் வருகின்றனர்;

தவிர,இயற்கை விவசாயத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி பரப்பிய திரு.கோ.நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலால் இவர்கள் சிற்பி வாழ்வியல் மையம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்;

இந்த சிற்பி வாழ்வியல் மையமானது இயற்கை உணவுகளை எப்படித் தயாரிப்பது? எப்படி ஒரு ஊரில் இயற்கை உணவுகளை வர்த்தக ரீதியில் தயாரிப்பது,விழிப்புணர்ச்சியை உருவாக்குவது,சந்தைப்படுத்துவது,விற்பனை செய்வது என்பதைப் பற்றி பயிற்சி முகாம்கள் மூலமும்,நேரடி உதவி மூலமாகவும் பயிற்றுவித்து வருகின்றனர்;

நாமும் நமது ஊரில் இயற்கை உணவுக்கான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க இவர்களை நாடுவோமா?

சர்க்கரை நோய்,மூட்டுவலி,முதுகு வலி,ஆஸ்த்மா,புற்று நோய் என்று எந்த நோயாக இருந்தாலும் இயற்கை உணவுகள் மூலமாக முழுமையாக குணப்படுத்த முடியும்;
ஒருமுறை நேரடியாகச் சென்று(முன் அனுமதி பெற்றுத்தான்) மருத்துவ ஆலோசனை பெறவும்;

திரு.மாறன் ஜி அவர்களின் செல் எண் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்;


பாரம்பரியம் காப்போம்;ஆரோக்கியமாக வாழ்வோம்;

No comments:

Post a Comment