Saturday, August 27, 2011

ஆவணி மாத அமாவாசை(28.8.11)ஐப் பயன்படுத்துவோம்


ஆவணி மாத அமாவாசை(28.8.11)ஐப் பயன்படுத்துவோம்

நவக்கிரகங்களில் முதன்மையானவர்;எட்டுக்கிரகங்களை இயங்க வைப்பவர்;மனிதனின் மூளையை இயக்குபவர் சூரியன் எனப்படும் ரவி ஆவார்.அவர் ஆட்சி பெறுவது சிம்ம ராசியில்! ஆட்சி பெறும்(பலம் பெறும்) மாதம் இந்த ஆவணி மாதம்.இந்த ஆவணியில் நாளை அமாவாசை வருகிறது.

ஓம்சிவசிவஓம் நாளைக் காலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிக்க ஆரம்பிக்க,தொய்வில்லாமல் ஆயுள் முழுவதும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியும்.

பல நாட்கள்/பல மாதங்கள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தவர்கள்,ஏதாவது சிலபல காரணங்களால் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் நிறுத்தியவர்களும் நாளை தொடர ஆரம்பிக்கலாம்;இனி தடங்கல் வராது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்ய ஆரம்பிக்க மிகவும் ஏற்ற நாள் நாளை 28.8.2011 ஞாயிற்றுக்கிழமைஆகும்.ஞாயிறும் அமாவாசையும்,சூரிய பலமும் சேர்ந்து வரும் அரிய அற்புதமான நாள் நாளை என்பதால்,இந்த நாளில் சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டைத் துவக்கலாம்.துவக்கும் காலம் நாளை இராகு கால நேரமாகிய மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான காலம் ஆகும்.
நவக்கிரகங்களில் சூரியன் என்னும் ரவியின் பிராண தேவதை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.எனவே, நாளை மிக அரிய நாளாகும்.ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஒரிஜினல் புகைப்படம் இது வரை ஆன்மீகக்கடல் மூலமாக வாங்காத வாசகர்கள் செய்ய வேண்டியது,நாளை ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் மூல மந்திரத்தினை மாலை 4.30 முதல் 6.00 மணி வரை 330 தடவை உங்கள் வீட்டுப்பூஜை அறையில் ஜபிக்கலாம்.

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment