Tuesday, September 8, 2009

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சிப்பலன்கள்(மூலம்,பூராடம்)

அபூர்வ செவ்வாய்பெயர்ச்சிப்பலன்கள்:

மூலம்: அழகான உடலமைப்பு கொண்டவரும், கல்வியில் ஊக்கமும், நன்றியை உடனே மறப்பவரும், காரியம் சாதிப்பதில் சாமர்த்தியமும், எதிரியை வெல்லும் குணமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை : உடலில் இனம் புரியாத அசதியும், வார்த்தையில் நிலையற்ற தன்மையும், குழந்தைகளுக்கு வைத்தியச் செலவும் ஏற்படும்.நிலம் ,வீடு போன்றவற்றை விற்பனை செய்வது நடைபெறும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை : தொழில், உத்யோகம் போன்றவற்றில் இருந்த அலைச்சல்கள் நீங்கி வருமானம் பெறுவீர்கள்.சிலர் தொழில் நிலைகளை மாற்றி அமைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.மனைவியின் சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடனுதவிகள் பெறுவீர்கள்.இளைய சகோதரர் சகோதரிகளால் உதவிகளும்,வருமானங்களும் கிடைக்கும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை :குடும்பத்தில் இருந்துவந்த பிரச்னைகள் நீங்கி மகிழ்ச்சி பொங்கும்.சிலருக்கு தொழில் நிலைகளில் சராசரிக்கும் அதிகமான லாபங்கள் கிடைக்கும்.வேலைபார்ப்பவர்கள் நிலுவைத் தொகையைப் பெறுவார்கள்.பதவி உயர்வை எதிர்பார்த்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.தங்களுக்கு விருப்பமில்லாத, எதிர்பாராத இடத்திற்கு மாற்றங்கள் ஏற்படும்.மனைவியின் வார்த்தைகளை மிகுந்த சிரமத்தோடு சகித்துக்கொள்ள வேண்டும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை :தாயாருக்கு உடல்நிலைக்கோளாறும், கடன் தாரர்களுடைய தொந்தரவும், தங்களுடைய வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடும் ஏற்படும்.புதிய ஆண்/பெண் நட்பு கிட்டும்.வாகனங்களில் பயணிக்கும்போது கவனம்!!!

பூராடம் : கல்வியில் திறமையும், பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மையும், தாயை சிறு வயதில் இழந்தவரும், பிடிவாத குணம் உள்ளவரும், உரக்கப்பேசுபவரும், தைரியசாலியும், சுயகாரியங்களில் வேகமானவரும் ஆகிய தாங்கள் . . .
7.10.2009 முதல் 16.11.2009 வரை ;பூமியால் லாபமும், குழந்தைகளால் சந்தோஷமான செய்திகளும், சுபகாரிய செலவுகளும், வாக்குவாதமில்லாத மகிழ்ச்சியான காலகட்டமும் குடும்பத்தில் அமையும்.கனவுத் தொல்லை நீங்கும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை : கணவன் மனைவி உறவு இனிமை சேர்க்கும்.தொழில் நிலையில் சில மாற்றங்கள் இருக்கும்.உத்யோக நிலையில் பணிமாறுதல் உண்டு.முதலீடு இல்லாமல் முகமை(ஏஜன்சி)ப்பணி செய்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நல்ல வருவாய் உண்டாகும்.

23.12.2009 முதல் 13.3.2010 வரை : எதிர்பாராத பணமழை பொழியும்.வார்த்தையில் அடக்கம் தேவை.குழந்தைகள் வழியில் சுபச்செலவுகள் உண்டாகும்.இடம்,வீடு,வாகனம்- இவற்றில் முதலீடு செய்வீர்கள்.தங்கள் உடலில் விஷப்பிராணிகள் தீண்டாவண்ணம் பார்த்துக்கொள்ளவும்.உணவில் கவனம் செலுத்த வேண்டும்.புதிய நட்புகள் தோன்றும்.தொடையில் மச்சம் உள்ளவரான தாங்கள் இதயம்,வயிறு சார்ந்த நோய்களுக்கான அறிகுறி தெரிந்தால் தக்க மருத்துவரை ஆலோசிக்கவும்.
13.3.2010 முதல் 15.5.2010 வரை : ஒவ்வொரு செயலிலும் மிக கவனமாக நடந்து கொள்ளுங்கள்.வாக்குறுதி எவருக்கும் தராதீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.சளி,நரம்பு,ரத்தம் சார்ந்த நோய்கள் வருவதற்கான அறிகுறிகள் தெரியும்.குளிர்ச்சியான, சூடான ஆகாரங்களை தவிர்க்கவும்.இருப்பிடத்தில் பல்வேறு பிரச்னைகள் தோன்றி மறையும்.

No comments:

Post a Comment