Tuesday, September 1, 2009

அபூர்வ செவ்வாய்ப்பெயர்ச்சி பலன்கள் (மகம்,பூரம்)

அபூர்வ செவ்வாய் பெயர்ச்சி

மகம் : சிவந்த கண்களும் சாஸ்திர ஆராய்ச்சியும் மந்த குணமும், யாவருக்கும் அதிக செலவு செய்பவரும், பிறரை வசீகரிக்கும் முகமும் கொண்டவரே!
7.10.2009 முதல் 16.11.2009 வரை: சுப விரையங்கள் ஏற்படும்.தூக்கமின்றி தவித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நிம்மதியாக தூங்கத் துவங்கும் காலம் இது.தங்களுடைய செயலாலும் வார்த்தைகளாலும் இது வரை ஏற்பட்டிருந்த சிக்கல்கள் நீங்கும்.குடும்பத்தில் வாதம் செய்யக்கூடாது.அசட்டு தைரியம் வரும்.நெருங்கிய நண்பர்கள் மற்றும் தாயாரின் உதவி கிட்டும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை:மூத்த சகோதர சகோதரியால் நன்மை உண்டு.சிலர் வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.கூட்டுத் தொழில் வாய்ப்பு ஏற்படும்.பதவி உயர்வு ஏற்படும்.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: வெளிநாட்டு தொடர்புகள் மூலம் லாபமுண்டு. கேட்ட இடங்களில் கடன் கிடைக்கும். இல்லத்தில் திருமணம் முதலான சுபகாரியங்கள் நடைபெறும்.நட்பு, வாகனப்பயணத்தில் கவனம் தேவை.வாக்குறுதி தராதீர்.சனி புக்தி நடப்பவர்கள் வாக்குறுதி தரக்கூடாது.
13.3.2010 முதல் 15.5.2010 வரை:கோபம் குறைக்கவும். விவேகம் மிகத் தேவை. பூர்வீகசொத்துக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.சிலர் பூர்வீகசொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்.

பூரம் : புத்திசாதுர்யம் கொண்டவரே! தைரியமும் சிறந்த வியாபார யுக்திகளை கையாள்பவரே! உடலில் காய வடு கொண்டவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை: இனி விரையச் செலவுகள் குறையும். பலமுறை முயற்சி எடுத்து தாமதப்பட்ட வர்த்தக திட்டங்கள் வெற்றி பெறும்.பூர்வீக சொத்து சார்ந்த பேச்சுவார்த்தை ஏற்படும்.தொழில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.பயம் வரும்.

16.11.2009 முதல் 23.12.2009 வரை: புதிய பதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் எல்லோரிடமும் அனுசரித்துப் போகவும். மனைவி,குழந்தை உடல் நலத்தில் அதிஅக்கறை தேவை.
23.12.2009 முதல் 13.3.2010 வரை: தம்பதியரிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.சக பாலினரால் மகிழ்ச்சி கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கடும் முயற்சிக்குப் பிறகு கிடைக்கும். இடம் வீடு ஆதாயத்துடன் விற்பனை செய்வீர்.

13.3.2010 முதல் 15.5.2010 வரை: மனைவியால் குடும்பத்தில் நிம்மதி குறையும்.கருத்து வேறுபாடு ஏற்படும்.
உத்திரம்: நன்றி மறவாதவரே! பிறரிடம் இனிய வார்த்தை பேசுபவரே!

7.10.2009 முதல் 16.11.2009 வரை: குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் திகழும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து கடன் கிடைக்கும்.இளைய சகோதரத்தால் செலவு ஏற்படும்.
16.11.2009 முதல் 23.12.2009 வரை: இருப்பிட மாற்றம் ஏற்படும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.தொழில் ரீதியாகபுதிய முயற்சி எடுப்பீர்கள்.தந்தை வழியில் செலவு வந்து நீங்கும்.தங்கள் குழந்தைகளுக்கு காயங்கள் ஏற்படும். நிதானம் பேச்சில் தேவை.கால் பாதங்களுக்கு வைத்திய செலவு உண்டு.

23.12.2009 முதல் 13.3.2010 வரை: திடீர் சுப நிகழ்ச்சி நடக்கும்.வீடு மனையால் ஆதாயம் உண்டு. தம்பதி நெருக்கம் அதிகரிக்கும்.சனி மற்றும் குருதிசை நடப்பவர்களுக்கு சுபச்செய்தி உண்டு.ஏஜன்சி தொழில் செய்பவர்களுக்கு அதிக லாபம் உண்டு.

13.3.2010 முதல் 15.5.2010 வரை : வீட்டுப்பெரியவர்கள் சிவலோகப் பதவியடைவார்கள்.பூர்வீக சொத்துப்பிரச்னை தலைதூக்கும்.

No comments:

Post a Comment