Saturday, September 26, 2009

இந்தியா எப்போது வல்லரசாகும்?


ன்னி சனிப்பெயர்ச்சி;உலக அரங்கில் என்ன நடக்கும்?
ஜோதிடரீதியான கணிப்புகளின் தொகுப்பு

நமது நாடான பாரதத்தின் சுதந்திர ராசி கடகம்.
நம்ம பங்காளி அமெரிக்காவின் சுதந்திர ராசி கும்பம்.
நம்ம பக்கத்து வீடு இலங்கையின் சுதந்திர ராசி விருச்சிகம்.

நம்முடைய நாட்டுக்கு ஏழரைச் சனி இன்று அடியோடு விலகி விட்டது.
இதுவரை நடந்தது என்ன?
அணுசக்தி ஒப்பந்தம் என்ற பெயரில் நம்முடைய மூச்சை நெரிப்பதில் தீவிரமாக இருந்தது இந்த உலகம்.
நம்ம இன்னொரு பங்காளி சீனா ரொம்பத் தான் சேட்டை செய்து வருகிறது.நமது நாட்டின் எல்லைக்குள் சுமார் 2கி.மீட்டர் தூரம் வரை ஊடுருவி, நமது நிலப்பகுதியில் உள்ள மலைப்பகுதிகளில் சீனா எழுதி வைத்துவிட்டுச் செல்கிறது.சீன ட்ரக்குகள் நமது நாட்டின் எல்லைப்பகுதியில் எல்லைதாண்டி உள்ளே வந்து ஊர் சுற்றிவிட்டு போய்க்கொண்டிருந்தன.
பாகிஸ்தான் வழக்கம் போல தீவிரவாதத்தை நம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்துகொண்டிருக்கிறது.
அமெரிக்கா ஏகப்பட்ட ஒப்பந்தங்களை ரெடி செய்து நம் தோள் மீது ஏறி உட்காரவும்,நிரந்தரமாகவே இருக்கவும் வழிகளை ஆராய்ந்து அத்தனையையும் செய்யத் தயாராக விட்டது.
குட்டித்தீவு இலங்கையில் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மனிதத்தன்மையுள்ள எவராலும் ஜீரணிக்கவே முடியாமல் இருந்து வருகின்றன.
லிபியா அதிபர் சீனாவுக்கு ஆதரவாக ஐ.நா.சபையில் நம்மையும்,நம்முடைய மதிப்பையும் குறைக்கும்விதமாக நேற்றுத்தான் பேசினார்.
நம் நாட்டில் அரசியலில் மட்டும் முதுகெலும்பற்ற தன்மை நிலவுகிறது.அதன் தொடர்விளைவால்,விலைவாசி பன்றிகாய்ச்சல் வேகத்தில் உயர்ந்துவருகிறது;மக்கள் பாவம் கடும் உழைப்பு உழைத்தே எந்த கஷ்டத்துக்கும் தன்னை பழக்கப்படுத்திவிட்டனர்.

இந்நிலையில், 26.9.2009 ஆன இன்று சனிபகவான் சிம்மராசியை விட்டு கன்னிராசிக்குச் செல்கிறார்.ஆக,கடக ராசிக்காரர்களுக்கு முழு நிம்மதி ஆரம்பம்.
கடகராசிக்காரர்கள் இன்று முதல் இழந்த அனைத்தையும் திரும்பப் பெறுவார்கள்.
நம் நாட்டில் நவம்பர் 2009 மாதத்தில் தேசபக்தி நிறைந்த ஒரு மாவீரன் பிரபலமடைவான்.அவனை அரசியல் நயவஞ்சகத்தையும் மீறி எல்லா அரசியல் கட்சிகளும் ஆதரித்தே ஆகக்கூடிய சூழ்நிலை உருவாகப்போகிறது.

அந்த மாவீரன் வடபாரதத்தில் பிறந்து,தென்பாரதத்தைச் சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சியை முடித்துவிட்டான்.நமது தேசத்தின் சகல சாபக்கேடுகளையும் சர்வநாசமாக்கப்போகிறான்.சீனாவுக்கு நாம் மதிப்பு புரியும்.அதற்குள் அது தனது எண்ணங்களின் வலிமையை அனுபவிக்கும்.

இந்துமதம் மீண்டும் புது எழுச்சி பெறப்போகிறது.அது வெறும் எழுச்சி அல்ல; பிள்ளையார் பால் குடித்த கதை போல அல்லாமல் சுனாமி போல பொங்கியெழுந்து வரப்போகிறது.
அதிகாரத்தில் இருந்து கொண்டு இந்துதர்மத்துக்கு செய்த செய்துவரும் கேடுகள் அனைத்தும் திடீரென வெளிவரப்போகிறது.இவ்வளவு அக்கிரம் நிறைந்தவர்களையா நாம் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்தோம்?என ஒட்டு மொத்த இந்துதேச மக்களும்,நம் நாட்டின் முஸ்லீம் மக்களும்,சீக்கிய மக்களும் திடீர் விழிப்புணர்ச்சி பெறுவார்கள்.

அயோத்தியில் இராமர் கோவில் கட்டும்வேலை ஆரம்பமாகும்.அரசியல் ட்ரெண்டு அடியோடு மாறிப்போகும்.

அந்த தேசபக்தி நிறைந்த மாவீரன் கி.பி.2011 ஆம் ஆண்டுக்குள் நம் நாட்டின் உயர்பதவியைக் கைப்பற்றுவான்.அவன் சர்வாதிகாரியாக மாறுவான்.இதன் விளைவாக அரசியல் ரீதியாக நமது இன்றைய தேசியத் தலைவர்கள் செய்த அனைத்து தவறுகளும் உடனே சரி செய்யப்படும்.
தனது வம்சாவளி மக்களைக்கூட காப்பாற்றாமல் இருந்தது எவ்வளவு பெரியதவறு? என்பதை டிசம்பர் 2009க்குள்ளாகவே நமது தேசியத்தலைவர்கள் உணருவார்கள்.செய்த தவறுக்குப் பரிகாரம் தேடத்துவங்குவார்கள்.சுயச்சார்பின் அடையாளமாக மறைந்து வாழ்ந்த மாவீரன் சுயமாகவேதனது மக்களையும்,நாட்டையும் காப்பாற்றுவான்.அம்மாவீரனுக்கு நமது பாரதம் வெளிப்படையாகவும்,நேரடியாகவும் உதவிசெய்யும்.

திருக்கையிலாய மலை திரும்பவும் நமது நாட்டின் அங்கமாகும்.அது எப்போதும் நமது நாட்டின் மணிமகுடமாக இருக்கிறது. உலக சமாதானப்புறாவின் சமாதான மனப்பான்மையால் இதுவரை ஆக்கிரமிப்பில் இருக்கிறது.நம்மை உலகத்தின் தலைமையை ஏற்கச் சொல்லி இன்றைய வல்லரசு நாடுகள் கெஞ்சத் துவங்கும்.அதற்கான தகுதியை நாம் கி.பி.2002 ஆம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.

அமெரிக்கா கும்பராசி,சதய நட்சத்திரம் அல்லவா? அந்த
நாட்டுக்கு அஷ்டமச்சனி ஆரம்பமாகிறது.ஏழரைச் சனி தரும் பலனை வெறும் இரண்டே வருடங்களில் தண்டனையாக அமெரிக்கா அனுபவிக்கும்.இதுவரை 125 வங்கிகள் தான் திவால் ஆகின.இனி.. .ஆடிய ஆட்டம் என்ன? பேசிய வார்த்தை என்ன?
இந்தியாவின் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியின் பிறந்த ராசி கன்னி.பிறந்த நட்சத்திரம் அஸ்தம்.அடுத்த இரண்டரை ஆண்டுகளில் அதன் தலையில் சனிபகவான் உட்காருகிறார்.இந்த உலகத்திலேயே தன்னைப் பற்றி மட்டுமே ஒரு நாளுக்கு 25 மணி நேரம் கவலைப்படும் ஒரே ஆத்மா அது அஸ்த நட்சத்திரக்காரர்கள் மட்டுமே!

நமது நாட்டின் சுயகவுரவத்தை விட தனது சுயநலமே பெரிது என காங்கிரஸ் இருந்தது இதுவரை நம்பி வந்தது.அது எப்பேர்ப்பட்ட தவறு என்பதை ஜன்மச்சனி பகவான் காங்கிரஸ் கட்சிக்கு புரிய வைப்பார்.

ஆக, உலகம் அமைதியை நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருக்கிறது.

நமது சனாதன தர்மம் ஐந்து கண்டங்களிலும் அடுத்த மூன்று நூற்றாண்டுகளில் பரவி இந்த பூமியே இந்து பூமியாக மாறத்துவங்கும்.
சுதந்திரத்தின் அருமையையும், வ.வே.சிதம்பரம் பிள்ளை,புலித்தேவன்,கோபாலகிருஷ்ணகோகலே,பாரதியார்,அரவிந்தர்,ஜெய்ஹிந்த் செண்பகராமன்,நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்,மகாத்மா காந்திஜி,மாவீரன் வாஞ்சிநாதன்,வ.வே.சுப்பிரமணிய அய்யர்,கர்ம வீரர் காமராஜர்,பகத்சிங்,வினாயக தாமோதர சாவர்க்கர்,அன்னிபெசன் ட் அம்மையார்,சுவாமி விவேகானந்தர்,சுவாமி தயானந்த சரஸ்வதி,பங்கிம் சந்திர சட்டர்ஜி,திருப்பூர் குமரன் என பல லட்சக்கணக்கான இந்தியசுதந்திரப்போராட்ட வீரர்கள் சிந்திய ரத்தம்,செய்த தியாகங்கள், இழந்த குடும்பம்,சொத்துக்கள் அனைத்தும் அலைகடலென அனைத்து இந்துதேச மக்களுக்கும் புரியத்துவங்கும்.

யாராக இருந்தாலும் கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாதவன், ஒரு போதும் ஒரு நாளும் உருப்படப்போவதில்லை.

பிரபலமான குஷ்வந்த் சிங்ஜோக் இது :
அமெரிக்கா ஏன் உலக வல்லரசாக இன்னும் இருக்கிறது?

ஏன் எனில், அது உலகத்தில் உள்ள எல்லா நாட்டு உள் விவகாரங்களிலும் தலையிட்டுக்கொண்டே இருக்கிறது.அதனால்,அது உலக வல்லரசாக இன்னும் இருக்கிறது.

சரி! எல்லாவித வளங்களும்,திறமைகளும், சந்தர்ப்பங்களும் அமைந்தும் ஏன் இந்தியா இன்னும் வல்லரசாகவில்லை?

ஏன் எனில், இந்தியா தனது உள் நாட்டு விவகாரங்களில் கூட சிறிதும் (காங்கிரஸ் கட்சியை நினைவூட்டுகிறதா?) தலையிடுவதில்லை.

இன்று முதல் இந்த ஜோக் பொய்யாக்கப்படும்.
இந்த பரந்த பூமியில் இறைவனால் நேரடியாக ஆசிர்வாதிக்கப்பட்ட நாடு என ஒன்று இருக்குமானால் அது நமது பாரதம் மட்டுமே!

சரி! நமது நாடு வல்லரசாக நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டியது என்ன?

அவரவர் தனது வேலையை ஒவ்வொரு நாளும் இன்னும் பொறுப்புணர்ச்சியோடு செய்தால் போதும்.அதன் செயல் தொடர்ச்சியால் இந்த உலகம் இருக்கும் வரை நமது பாரதம் மட்டுமே வல்லரசாக இருக்கும்.

ஜெய் ஹிந்த்!

2 comments:

  1. Will the man who is going to rule india is from RSS?

    ReplyDelete
  2. இருக்கலாம்.இல்லாமலும் இருக்கலாம்
    இப்படிக்கு
    ஆன்மீகக்கடல்

    ReplyDelete