Saturday, July 4, 2009

ஒரே தமிழ் மாதத்தில் மூன்று கிரகணங்கள்:உணர்த்துவது என்ன?




வரப்போகும் மூன்று கிரகணங்கள்:குறிப்பால் உணர்த்துவது அழிவுகளையா? யதார்த்தமான நிகழ்வுகளா?

7.7.2009 அன்று சந்திரகிரகணமும்

22.7.2209 அன்று சூரிய கிரகணமும்

6.8.2009 அன்று மீண்டும் இன்னொரு சந்திரகிரகணமும் வரப்போகிறது.

இந்த மாதிரி தொடர்ந்து ஒரே தமிழ் மாதத்தில் தொடர்ச்சியாக மூன்று கிரணங்கள் வந்தால் அதைத் தொடர்ந்து போர், வேகமாக பரவும் நோயால் மனித மரணங்கள்,கடல் சீற்றம் என இதற்கு முன்பு வந்திருக்கிறது.
இதனால் மனித உடல்களிலும் மாற்றம் ஏற்படும்.

கடந்த நூற்றாண்டில் 1913 ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் 1946 ஜீன் 29 ஆம் தேதி வரை ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்கள் என்ற கணக்கில் 18 முறை ஏற்பட்டுள்ளது.

முற்கால இதிகாசங்களில் ஆராய்ந்து பார்த்தால் இந்து இதிகாசமான மகாபாரதத்தில் மட்டும் இது பற்றி குறிப்பு உள்ளது.

ஒரே மாதத்தில் மூன்று கிரகணங்கள் வந்த பின்பே மகாபாரதப்போர் குருஷேத்திரத்தில் துவங்கியிருக்கிறது.

மகாபாரதப்போர் நிகழ்ந்துமுடிந்து 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரே மாதத்தில் 3 கிரகணங்கள் வந்ததால் துவாரகா கடல்கோள் ஏற்பட்டு
அழிந்தது.

அதற்கும் முற்காலத்தில் இலங்கைக்கு தெற்கே இருந்த குமரிக்கண்டம் இதனால் தான் அழிந்தது.அப்போது தன் மக்களைக் காப்பாற்ற ஒரு பாண்டிய மன்னன் மிக பெரும் மனித இடப்பெயர்ச்சி செய்தான் என பழங்கால இலக்கியங்கள் கூறுகின்றன.

கூர்ந்து கவனியுங்கள்.1913லும் 1941லும் தொடர்ந்த மூன்று கிரகணங்கள் நிகழ்ந்த பின்பே உலகப்போர்கள் நிகழ்ந்துள்ளன.

இதுபற்றி விரிவாக ‘வரலாறு திரும்புமா?’ என்ற தலைப்பில் டி.கே.ஹரி, ஹேமா ஹரி சென்னைத் தம்பதியினர் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளனர்.
மேலே இருப்பது சூரிய கிரகணம், கீழே இருப்பது சந்திரகிரகணம்.

No comments:

Post a Comment