Sunday, July 19, 2009

உங்கள் ஆழ்மனச்க்தியைப்பயன்படுத்துங்கள்.நீங்களும் சாதனையாளர் ஆகுங்கள்


உங்கள் ஆழ்மனத்தின் சக்தியை அறிந்துகொள்ளுங்கள்:
அதைப் பயன் படுத்தி உங்களை ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ளுங்கள்

அண்டத்தில் இருப்பதே பிண்டத்திலும் என்பது சித்தர் பாடிய பாடல் வரி.அண்டம் என்பது பிரபஞ்சம்! பிண்டம் என்பது நம் ஒவ்வொருவரின் மனித உடல்!!!

இந்த பிரபஞ்சத்தில் ஏராளமான சக்திகள் உள்ளன.அவற்றில், ஒன்று காஸ்மிக் சக்தி.இதைப் பயன்படுத்தி நமது நியாயமான ஆசைகளை நம் ஒவ்வொருவராலும் நிறைவேற்றிக்கொள்ளமுடியும்.இந்த காஸ்மிக் சக்தியைப்பயன்படுத்திக் கொள்வதற்கு நாம் நமது ஆழ்மனத்தை நமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்.
ஆழ்மனதை நமது கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர நாம் தினமும் தியானம் இருமுறை செய்துவர வேண்டும்.காலையில் எழுந்து குளித்துத் தயாரானதும்,இரவில் தூங்கும் முன்பாகவும் 15 நிமிடம்வரை நாம் தியானம் செய்துவரவேண்டும்.

ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் தியானத்தை தமிழ்நாட்டில் பலர் கற்றுத்தருகிறார்கள்.அதில் ஒருவர் தான் டாக்டர் விஜயலஷ்மி பந்தையன் அவர்கள்.இந்த டாக்டர் ஆல்பா மைண்டு பவர் என்ற பெயரில் தியானப்பயிற்சிகளை தமிழ்நாடு உள்பட பாரததேசமெங்கும் நடத்திவருகிறார்.இந்த தியானப்பயிற்சியில் நமது ஆழ்மனதின் சக்திகளைப்பற்றி விளக்குகிறார்.அதன்பிறகு அந்த ஆழ்மனதின் சக்தியை எப்படி பயன்படுத்துவது? என்பதைப்பற்றி விளக்குகிறார்.www.alphamindpower.net என்பது இவரது தமிழ் இணையதளமாகும்.

மனக்காட்சியின் மூலம் விரும்புவதை அடைவதுஎப்படி? இதுதான் ஆழ்மனத்தைப்பயன்படுத்தும் சுலப வழிமுறை.இதற்கு ஆங்கிலத்தில் கிரியேட்டிவ் விசுவலிசேசன் என்று பெயர்.இதை தமிழில் படக்காட்சியாகக் கற்பனை செய்துபார்த்தல் எனக்கூறலாம்.இதை அறிவியல் பூர்வமாக கண்டுபிடித்து நெறிப்படுத்தியவர் ஜோஸ் சில்வா என்ற ஆங்கிலேயர் ஆவார்.
இன்று இதை ஐரோப்பா.அமெரிக்கா கண்டங்களில் எப்படி கற்பனை செய்து பார்ப்பது? என்பதற்கு தனிப்பயிற்சி வகுப்புகள்(workshops)நடத்திக்கொண்டே இருக்கின்றனர்.இதனால்தான் மேலை நாட்டினர் பலகோடிரூபாய்கள் சம்பாதித்துக்கொண்டே இருக்கின்றனர்.(நேர்மையான வழிமுறையில்)

இதுபற்றி சில முக்கிய ஆங்கிலபுத்தகங்களை இங்கு பரிந்துரைக்கிறேன்.
1.Mind Power
2.Creative Visuvalization
3.Power of Your Sub conscious Mind
4.Silva Mindpower-written by jose silva
தமிழில் கண்ணதாசன் பதிப்பகம் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளது
ஆழ்மனதின் சக்திகள்.
இதுதவிர, அதே கண்ணதாசன் பதிப்பகம் மனம் தரும் பணம் என்ற புத்தகமும் வெளியிட்டுள்ளது.இதில் ஆழ்மனதின் சக்திகள் என்ற பெயரில் ஒரு தனி தலைப்பில் விளக்கம் கொடுத்துள்ளது.இவற்றைப் படித்தாலே, ஆழ்மனதின் சக்தியை ஓரளவு புரிந்துகொள்ளலாம்.

இந்த க்ரியேட்டிவ் விசுவலிசேசனை எப்படி பயன்படுத்துவது என்பதற்கு ஒரு பயிற்சி வகுப்பு 16.8.2009 ஞாயிற்றுக்கிழமையன்று ஈரோட்டில் பஸ்நிலையம் எதிர்புறம் உள்ள ஆஸ்கார் ஹோட்டலில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

30.7.2009க்குள் இதற்கான கட்டணம் ரூ.150/-ஐ செலுத்துபவர்களுக்கு ரூ.180/-மதிப்புள்ள சுயமுன்னேற்ற டிவிடி இலவசமாம்.
முன்பதிவு செய்ய தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண்கள்:சி.ஆர்.செலின்,சென்னை
0-9381019353,0-9380584271.

இந்த பயிற்சி வகுப்பை நடத்துவது பிரபல மனோதத்துவ நிபுணர்:சி.ஆர்.செலின் அவர்கள்.

No comments:

Post a Comment