Sunday, July 19, 2009

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

எனது அனுபவத்தில் சில ஜோதிட உண்மைகள்

மேஷம் மற்றும் விருச்சிக ராசியில்பிறந்தவர்கள் ஆழ்ந்த பாசத்துடன் இருப்பார்கள்.அதே சமயம் கடும் கோபத்துடன் இருப்பார்கள்.இவர்கள் யாரை நேசிக்கிறார்களோ அவர்களிடம் மட்டுமே கோபத்தைக்காட்டுவார்கள்.இவர்கள் நிறைய ஜோக் அடிப்பார்கள்.பேச்சில் இவர்களிடம் தோற்றுத்தான் போகவேண்டும்.இவர்களிடம் ரகசியம் சிறிதும் தங்காது.

ரிஷபம் மற்றும் துலாம் ராசியில்பிறந்தவர்கள் தன்னை அழகுபடுத்திக்கொள்வதிலும் தன்னலத்திலும் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்.எப்போதும் ஜாலியாக இருப்பதை இவர்கள் விரும்புவார்கள்.

மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் பிடிவாதகுணத்துடன் இருப்பார்கள்.இதில் புனர்பூசத்தில் பிறந்தவர்களுக்கு ஓரளவு நற்குணங்கள் இருக்கும்.

கடக ராசியில் பிறந்தவர்கள் இந்த உலகை ஆளப்பிறந்தவர்கள்.இதில் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களிடம் நாம் ஒவ்வொருவரும் நிறைய கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது.இவர்களுக்கு ரிஷபராசியின் குணங்கள் நிறைய இருக்கும்.

சிம்மராசியினர் அதிகாரம் செய்வதிலும்,சிறந்த நிர்வாகத்திறமையும் கொண்டவர்கள்.இவர்களுக்கு எப்போதும் மேஷ விருச்சிக கும்ப ராசியினர் பக்க பலமாக இருப்பார்கள்.

கன்னிராசியில் அஸ்தம் நட்சத்திரத்தில்பிறந்தவர்கள் போல சுயநல சொரூபிகள் இந்த உலகத்திலேயே கிடையாது.மற்ற நட்சத்திரங்களான உத்திரம், சித்திரையில் பிறந்தவர்கள் ஆணெனில் பெண்ணாலும் பெணெனில் ஆணாலும் எப்போதும் நன்மை உண்டு.

தனுசு ராசியில் பிறந்தவர்கள் முற்பிறவிகளில் செய்த புண்ணியத்தை அனுபவிக்கப்பிறந்தவர்கள்.மாநிறமாகவும் ஓரளவு குண்டாகவும் இருப்பார்கள்.சாமர்த்தியமாக பேசுவதில் திறமைசாலிகள்.

மகரம்,கும்பம் ராசியில் பிறந்தவர்கள் தர்மம் நீதி நியாயம் இவற்றிற்காக தன் குடும்பம் , வேலை, தொழில் என அனைத்தையும் இழக்கத்தயாராக இருப்பார்கள்.இவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தை அனுபவிக்கப்பிறந்துள்ளனர்.
உலகின் 100 கோடீஸ்வரர்களில் 80 பேர் மகரராசியில் பிறந்திருப்பர்.
கும்பராசி அகத்தியமகரிஷி பிறந்த ராசியாகும்.கோபுரகலசத்திற்குள் என்ன இருக்கும்? யாருக்கும் தெரியாது.அதுபோல இந்த ராசியினர் என்ன நினைக்கிறார்கள் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியாது.இவர்கள் மற்றவர்களை ஆழம் பார்ப்பதில் வல்லவர்கள்.இவர்களுக்கு எங்கும் எப்போதும் புகழ் உண்டு.

மீனராசியில் பிறந்தவர்களும் புண்ணியாத்மாக்களே! இவர்களிடம் சிக்கனத்தை எதிர்பார்க்கக்கூடாது.


மேஷத்திற்கும் கன்னிக்கும் ஆகாது.விருச்சிகத்துக்கும் கடகத்துக்கும் ஆகாது.
ரிஷபத்துக்கும் மேஷத்துக்கும் ஒரளவே சரிப்படும்.

கடகத்துக்கும் கன்னிக்கும் சூப்பராக ஒத்துப்போகும்.
இவையெல்லாம் பொதுப்பலன்களே!

பிறந்த ஜாதகம் தான் ஒருவரின் அத்தனை சுபாவத்தையும் விளக்கும்.
ஒரு ஜாதகம் பற்றிய முழுவிபரங்களை திறமையான ஜோதிடரால் கூற 2 மணிநேரம் ஆகும்.நான் எப்போதும் ஒரு ஜாதகத்தின் முழுப்பலனைக்கூற குறைந்தது 2 மணிநேரம் எடுத்துக்கொள்கிறேன்.
சாஸ்திரத்தை வாழ்நாளின் கடைசிவிநாடி வரை அட்சரம் பிசகாமல் பின்பற்றுபவர்கள் நிறைய சாதிக்கிறார்கள்।உதாரணமாக நாயக்கர்கள், பிராம்மணர்கள்,கேரளாவில் நம்பூதிரிகள்,ஈழவா; கர்நாடகத்தில் ஒக்கலிகர்கள்;ராஜஸ்தானில் ஜாட்டுகள்,ராஜபுத்திரர்கள்,ஆந்திராவில் க்ஷ்த்திரியகுல ராஜீக்கள் என சொல்லலாம்.
மற்ற ஜாதிமக்களிடமும் இதுபற்றி தற்காலத்தில் நிறைய விழிப்புணர்ச்சி வந்திருக்கிறது.
ஆனால், ஒரு ஜோதிட யோசனையை கடைசிவரைப் பின்பற்றாமலிருந்து ஜோதிடம் பொய் எனக்கூறும்போது மனசு வலிக்கிறது।

ஒரு திறமையான ஜோதிடர் ஒரு மனிதனுக்கு மந்திரிக்குச் சமம்।இன்றைய காலகட்டத்தில் தமிழக முதல்வர் மு।கருணாநிதி முதல் எங்கள் ஊர் தாசில்தார் அலுவலகப்பியூன் வரை ஜோதிட ஆலோசனை இல்லாமல் எந்தவொரு முக்கிய முடிவும் எடுப்பதில்லை.





5 comments:

  1. send me about my feature
    date of birth
    10-08-1978
    Thula rasi
    Swathi star

    ReplyDelete
  2. மரியாதைக்குரிய ஜோதிடர் அவர்களுக்கு,

    தாங்கள் ஏதேனும் புத்தகம் வெளியிட்டு இருக்கிறீர்களா? எனக்கு ஜோதிடத்தின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டுள்ளது. ஆதலால் அதனை படித்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன். தாங்கள் புத்தகம் எழுதி இருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தங்களேன்.

    நன்றியுடன்,
    முருகன் அடிமை

    muruganadimaisaravanan@gmail.com

    ReplyDelete
  3. I LOST ALL MY HOPE IN MY LIFE. I DONT KNOW WHY I AM LIVING. BUT I HAVE GREAT PRINCIPLE IN MIND, i.e ., Just to accept the things given by the GOD. i have no one expect God .

    my birth day

    24 th July 1979.
    3.50 pm.
    tuesday. No moon day.
    cancer, Poosam.

    my id : harib_r@yahoo.com

    ReplyDelete
  4. send me about my feature
    date of birth
    25-04-1979 13:43

    mail id: semselvan79@rediffamil.com

    ReplyDelete