Friday, July 3, 2009

உலக அரசியலில் அடுத்து என்ன?-3


உலக அரசியலில் அடுத்து என்ன?-3

இந்த நிலையில்,இந்துக்கள் புனித திருத்தலமான திருக்கையிலாயம்-மானசரோவர் இமயமலையில் இருக்கிறது.இதன் ஆன்மீகப்பிம்புலத்தை நமது முதல் பிரதமர் நேரு உணரவில்லை;சீனா உணர்ந்து கொண்டது.1967 களில் இதைக்கைப்பற்றிக் கொண்டது.
இந்த திருக்கையிலாயம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை சீனா அதிவேகமாக வளர்ந்து கொண்டே செல்லும்.
மறுபுறம், ஒரு குஷ்வந்த்சிங்கின் ஜோக்கை இங்கு சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.
அமெரிக்கா ஏன் உலக வல்லரசாக இருக்கிறது?
ஏன் எனில் அது உலகின் எல்லா உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட்டுக் கொண்டே இருப்பதால்!!!

சரி! இந்தியா ஏன் இன்னும் வல்லரசாகவில்லை?(இந்த வலைப்பூவை முழுமையாகப் படிக்கவும்.நாம் எவ்வ்வ்வளவு பெருமைகள் வைத்திருக்கிறோம்.இருந்தும் ஏன் வடிவேல் போல உலக அரங்கில் அடிவாங்கிக் கொண்டே இருக்கிறோம்?)
ஏன் எனில் இந்தியா தனது உள் நாட்டு விவகாரங்களில் கூட சிறிதும் தலையிடுவதில்லை.
(எவ்வளவு கேவலமான நிலை.பிறகு எப்படி இந்தியா இலங்கைத் தமிழர்களின் பிரச்னையில் தலையிடும்).
ஆனால்,2009 நவம்பர் 18 முதல் 31.12.2011க்குள் நமது இந்தியாவை ஒரு சர்வாதிகாரி ஆட்சிசெய்யத்துவங்கப் போகிறார்.அது யார்? தெரியாது.
2006 சுனாமியானது ஒரு துக்கமான நிகழ்வு.அதற்குப்பின்னால் ஒரு ஆன்மீக நிகழ்வு இருக்கிறது.கி.பி.2006 வரையிலான 100 ஆண்டுகளில் ஆசியா முழுமைக்குமான கடற்கரையோரங்களில் காமரீதியான குற்றங்கள் சொல்லவே கூச்சப்படும்படியாக அரங்கேறிக்கொண்டே இருந்தன.அந்த காமரீதியான துன்புறுத்தல்களின் எண்ணப்பதிவுகளால் கடலுக்குள் தியானம் செய்துகொண்டிருந்த காகபுசுண்டர் என்ற சித்தர் கோபத்துடன் எழுந்தார்.அவரது கோபமே சுனாமியாகும்.26.12.2006 க்குப்பின்பு வெளிவந்த தினத்தந்தி,ராணி,மங்கையர்மலர் மற்றும் பல தமிழ் தினசரிகளில் இது தொடர்பான கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
இதைத் தொடர்ந்து கி.பி.2010 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள சதுரகிரி யில் சித்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.இந்த சதுரகிரியானது சிவபெருமான் வாழும் பூலோக திருக்கையிலாயம் ஆகும்.சித்தர்கள் வாழும் பூமியாகும்.இதுபற்றி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் தினத்தந்தியுடன் வரும் இலவச இணைப்பான ஆன்மீக மலரைப்படிக்கவும்.அதில் அதிசய சித்தர்கள் என்ற தொடர் சதுரகிரியின் ஆன்மீகமுக்கியத்துவத்தை விவரிக்கிறது.
வடநாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன், தென்னாட்டை ச்சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான் என பல வருடங்களாக குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபால் அவர்கள் கூறிக்கொண்டே இருக்கிறார்.
அந்த மாவீரன் 18.11.2009 அன்று அல்லது அதற்குப்பிறகு இந்தியாவின் தலைமைபீடத்தைக் கைப்பற்றுவான்.அன்று முதல் இந்தியாவுக்கும் உலகத்திற்கும் நல்ல நேரம் தொடங்குகிறது.
கி.பி.2011 முதல் கி.பி.2014 க்குள் இந்துமதத்திற்கு உலகளவில் மாபெரும் ஆதரவு கிடைக்கப்போகிறது.(நான் நினைக்கிறேன்.இந்துமதத்தின் உணர்வுகளைச் சீண்டும் விதமாக சீனா அல்லது சோனியா அல்லது இருவரும் பல காரியங்களைச் செய்வார்கள்.அதை உடனுக்குடன் வெளிப்படுத்தும் விதமான பா.ஜ.க.தலைவன் ஒருவன் அல்லது சிலர் வருவர்.அந்த தலைவர்களில் ஒருவராக நரேந்திர மோடியும் இருக்கலாம்.)
பாபர் மசூதியை இடித்ததற்கு கூச்சல் போட்ட கம்யூனிஸ்டுகளும் பிற கட்சிகளும் காணாமல் போய்விடும்.இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியானது சீனாவின் உளவுப்படையே தான்.அதுதான் இப்போது உலகின் ஒரே இந்து நாடான நேபாளத்தை ஆள்கிறது.அதாவது சீனாவின் மாநிலங்களில் ஒன்றாக நேபாளம் மாறிவிட்டது.

No comments:

Post a Comment