Monday, July 27, 2009

உங்கள் ஊரில் மழை வரவேண்டுமா?


உங்கள் ஊரில் மழை வரவேண்டுமா?

உங்கள் பகுதியில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் குறைந்தது 10 தாய்மார்கள் காலை அல்லது மாலை நேரத்தில் கீழ்க்காணும் திருப்பாவைப்பாடலை ஒரு நாளுக்கு 9 முறை அல்லது 18 முறை வாய்விட்டுப்பாடவேண்டும்.இப்படி தொடர்ந்து 48 நாட்கள் பாடினால் மழை உங்கள் ஊருக்கு வரும்.இது அனுபவ உண்மை.

(ராமனாதபுரம் மாவட்டமாக இருந்தாலும் சரி, ஆப்ரிக்காவில் உள்ள சகாரா பாலைவனமாக இருந்தாலும் சரி।மேலே கூறிய முறையை நாத்திகவாதிகளும் பின்பற்றிப் பார்க்கலாமே!

மரம்தான் வளர்ப்பதில்லை.திருச்சி காவிரி தண்ணீரை ராமேஸ்வரத்திற்குக் கொண்டுவருகிறீர்கள்.ஆனால் இது தற்காலிக ஏற்பாடு என்பதை ஏன் மறந்து விடுகிறீர்கள்.
எந்தப் பிரச்சனைக்கும் நிரந்தரத் தீர்வு காண்பது அவசியம்।அப்படி நிரந்தரத்தீர்வு காண உதவுவதே நம் முன்னோர்கள் நமக்காக உருவாக்கிச் சென்றுள்ள பாரம்பரிய சொத்துக்கள்:ஆன்மீகம்,ஜோதிடம்,மந்திரஜபம்,வேதம் ஓதுதல்,தியானம்,ஸ்தலவிருட்சம் வளர்த்தல்,பாரம்பரிய முறைகளை பராமரித்தல் மற்றும் போற்றுதல்)
மழையைக் கொண்டு வரும் திருப்பாவைப்பாடல்;

ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேறி
பாழியந் தோளுடைப் பற்பநா பன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்
வாழ வுலகினில் பெய்திடாய்,நாங்களும்
மார்கழி நீ ராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்।
ஜோதிட சாஸ்திரத்தில் மழை எப்போது வரும் என்பதை துல்லியமாகக்கூற இயலாது।ஆனால்,மனித பக்தியானது மழையைக் கொண்டு வரும்।தண்ணீர் பஞ்சத்தைப் போக்கும்.

No comments:

Post a Comment