Thursday, July 5, 2012

மீண்டும் இந்துமயமாகிவரும் நமது பூமி!!!









மனித இனம் குரங்கிலிருந்து மனிதனாக பரிணமித்து 20,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன;ஆதியில் உலகம் முழுவதும் நமது இந்து தர்மமே பரவியிருந்தது.கடந்த 2000 ஆண்டுகளில் வேறு சில மதங்கள் உருவாகி இன்று  போர்,யுத்தம்,கலவரம்,இனவெறி,பொறாமை என்ற பெயர்களாலும்,மூட நம்பிக்கைகளாலும் பல கோடி மக்களை கொன்றுகொண்டே இருக்கிறது.

வெகு விரைவில் இந்த கொடூர சூழ்நிலை மாறப்போகிறது.உலக மயமாக்கல் எனப்படும் உலக வர்த்தக அமைப்பினுள் ஊடுருவிய சி.ஐ.ஏ.,நவீன காலனியாதிக்கத்தை ஏற்படுத்தி இந்த உலகத்தில் இருக்கும் நாடுகளையே அமெரிக்க மயமாக்க திட்டமிட்டது;அதில் ஓரளவே வெற்றி பெற்றது;தொழிலாளித்துவம் எனப்படும் கம்யூனிஸம் சிதைந்து போவதற்கு 70 ஆண்டுகள் ஆயின;ஆமாம்! 1990களின்பிற்பாதியில் கம்யூனிஸ வல்லரசான சோவியத் ரஷ்யா அமெரிக்காவின் நரித்தனத்தால் சிதைக்கப்பட்டது; ஆனால், வரவுக்கு மீறிய செலவு,வெட்டி பந்தா போன்றவற்றால் வெறும் 20 ஆண்டுகளில் முதலாளித்துவத்தைப் பின்பற்றி வந்த நாடுகளான அமெரிக்கா,இங்கிலாந்து,ஜெர்மனி,இத்தாலி,பிரான்ஸ் போன்றவைகள் வீழ்ச்சியடையத் துவங்கியிருக்கின்றன.இந்த  வீழ்ச்சியைத் தாங்கி நிற்பது நமது பாரத அரசு மட்டுமே! சோவியத் வீழ்ச்சிக்குப்பிறகு அந்த இடத்தைப் பிடிக்க சீனா திட்டமிட்டு பணிபுரிந்தாலும் உலக அரசியலையும்,பொருளாதார மாற்றங்களையும் கூர்ந்து கவனிக்கத் தெரியாமல் தடுமாறுகிறது.எனவே,சீனாவும் ஒருபோதும் உலக வல்லரசாக மாற முடியாது.

அணு ஆயுதம்,நவீன ராணுவம்,திறமைவாய்ந்த ஒற்றர் அமைப்பு,மதம் சார்ந்த சர்வதேச அரசியல் பார்வை;பொறாமை பிடித்த குறுகிய முதலாளித்துவ கண்ணோட்டம் போன்றவைகள் இல்லாமலேயே இந்தியா தனது அன்பு,குடும்ப பாரம்பரியம்,விட்டுக்கொடுத்தல்,யோகாசனம்,ஆயுர்வேதம்,
ஜோதிடம்,வர்மசிகிச்சை,தியானம்,பிராணயாமம் போன்ற இந்து தர்மத்து ஆயுதங்களால் உலகை ஆளப்போகிறது.

அதற்கு இந்த படங்களே முதல் ஆரம்ப அடையாளங்கள் ஆகும்.இனி எத்தனை சி.ஐ.ஏக்கள் வந்தாலும்,எத்தனை சீன அரசியல் தந்திரங்கள் செய்தாலும் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவுவதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது.



ஓம்சிவசிவஓம்  ஓம்ஹரிஹரிஓம்



க்ருண் வந்து விஸ்வம் ஆர்யம்
(இந்து தர்மத்தைப் பரப்ப உலகம்முழுக்கவும் பயணிப்போம்!!!)
 படங்கள்:யோகாசனம் செய்யும் அமெரிக்கர்கள்!!!

No comments:

Post a Comment