Saturday, July 14, 2012

மின்சாரத்தில் தன்னிறைவு பெற்றுள்ள தமிழ்நாட்டு கிராமம்!!!




தூத்துக்குடி மாவட்டம் ஐயனடைப்பு கிராமத்திலுள்ள 35 வீடுகளிலும் மாலை ஐந்து மணியானால் மின் விளக்குகள் தாமாகவே ஒளி சிந்தத் துவங்கிவிடுகின்றன.ஒவ்வொரு வீட்டிலும் சார்ஜர் மின்சாரத்தை உள்வாங்கிக் கொள்ளத்துவங்குகிறது.அதனால் இந்த ஊரில் அரசு மின் வழங்கும் வலையான க்ரிட் இல்லை; ஊர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள 240 வாட்ஸ் சூரிய சக்தி மின் உற்பத்திப்பலகைகளும்,பேட்டரியும் தான் இந்த கைங்கரியத்தில் முனைந்துள்ளன.இரவு 11.30 வரை ஊருக்கு மின்சாரம் கிடைக்கிறது. ‘தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மெண்ட் ஏஜன்ஸி’யும் ஒரு தனியார் நிறுவனமும் கூட்டாக இந்த முன்னோடி மின் வழங்கு திட்டத்தைச் செயல்படுத்தி வருகின்றன.


விரைவில் நமது ஒவ்வொரு தெருவுக்கும் இதே போல சுய மின்சார உற்பத்தி நிலையத்தை உருவாக்குவோமா?
தன்னிறைவு என்பது நம்மிடம் இருந்து உருவாக்குவோம்;நமது மாநிலம் தன்னிறைவை எட்டும்;நமது நாடும் தன்னிறைவை எட்டும்;வல்லரசு நிலையை இப்படித்தான் எட்டிட முடியும்.


(எப்போதுமே குற்றம் கண்டுபிடிக்கும் கம்யூனிஸ்டுகளிடம் எந்த ஒரு மாற்றுத்திட்டமும் இராது;அவர்களால் ஒரு பிரச்னையை வைத்து அதிகாரமையத்தை மிரட்டத்தான் முடியும்.பிரச்னைக்குத் தீர்வு இராது.இருந்திருந்தால் 1980களிலேயே இந்தியாவின் ஆளும் கட்சியாகி இருக்குமே?)

ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment