Friday, July 13, 2012

ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சியில் நிகழ்ந்தவை




1.7.2012 ஞாயிறு அன்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ஆத்மபலத்தை அதிகரிக்கும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.இந்த பயிற்சி வகுப்பினை தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற திரு.வெங்கட்ராமன் அவர்கள் தலைமை தாங்கிட,திருக்குறள் நடராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார்.


திரு.வெங்கட்ராமன் அவர்கள் ராஜபாளையத்தில் இருக்கும் என்.ஏ.பாப்புராஜா பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்தவர்;இவர் 2010 ஆம் ஆண்டில் தலைசிறந்த நல்லாசிரியராக தமிழ்நாடு அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்;2011 ஆம் ஆண்டில் தலைசிறந்த நல்லாசிரியராக இந்திய அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.
திரு.திருக்குறள் நடராஜன் அவர்கள் நெல்லை மாவட்டம் இடைகால் என்ற ஊரைச் சேர்ந்தவர்.இவரது அர்ப்பணிப்பு மனப்பான்மையால் பலருக்கு திருக்குறள் மீதும்,தமிழ் மொழி மீதும் அளவற்ற ஆர்வம் பிறந்தது;இரண்டுமுறை இவரை தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.

நமது ஆன்மீக குரு அவர்கள் ஆத்மபலத்தை அதிகரிக்கும் 13 விதமான தெய்வீக வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தார்.இதில் ஏதாவது ஒன்றை மட்டுமே பின்பற்றினாலே,
1.நமது நீண்டகாலப் பிரச்னையான திருமணத்தடை/பூர்வீகச் சொத்துப்பிரச்னை/குழந்தை பாக்கியம் இன்மை போன்றவை நீங்கும்.
2.நீண்டகாலக் கடன்களைத் தீர்க்கும் எளிய வழிபாட்டுமுறை தெரிந்தது.
3.மறைக்கப்பட்ட பல சம்பிரதாயங்களும்,அவற்றின் சூட்சும ரகசியங்களும் போதிக்கப்பட்டது.
4.அன்னதானத்தின் மகிமைகளைப் பற்றி ஏற்கனவே பல ஆன்மீக இதழ்களில் வெளிவந்திருக்கின்றன;எந்த ஒரு ஆன்மீகப்புத்தகத்திலும் வெளிவராத பல மகிமைகள் சொல்லப்பட்டன.
இந்த பயிற்சி வகுப்பின் நிறைவில்,திரு அண்ணாமலையில் நாம் நடத்திய தெய்வீக விபூதிப் பயிற்சி வகுப்பின் பலன்களை சாட்சிகளோடு நிரூபிக்க முடிந்தது.
நமது தெய்வீக விபூதிப்பயிற்சி வகுப்பில் போதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால்,ஒரு ஆன்மீகக்கடல் வாசகருக்கு 90 நாட்களில் அவரது 15,00,000 ரூபாய் கடன் தீர்ந்தது;அந்த வாசகரே நேரடியாக வந்து பேசினார்.வேறு சில வாசக,வாசகிகள் கூச்சத்தினால் மேடைக்கு வரவில்லை;அவர்களில் ஒருவருக்கு 42 நாட்களில் பூர்வீகச் சொத்துப்பிரச்னை முடிவுக்கு வந்து,அவருடைய பங்கு கிடைத்துவிட்டது;ஒரு வாசகிக்கு அவருடைய குலதெய்வம் நேரில் வந்து பேசுகிறது;அதை இன்னும் ரகசியம் காத்து வருகிறார்;அந்த குல தெய்வத்தின் ஆசிப்படி தனது குடும்பப் பிரச்னைகளைத் தீர்த்து வருகிறார்.அதன் பிறகு,ஹீலிங் சக்தியால் நீண்டகால நோய்களைக் குணப்படுத்தும் திரு.ராமச்சந்திரன் அவர்களை நமது ஆன்மீக குரு அறிமுகப்படுத்தி வைத்தார்;இவருக்கு நவகலசயாகம் செய்யும் வரையிலும் பெண்களுக்கான நோய்களை மட்டும் தனது ஹீலிங் சக்தியால் குணப்படுத்திக்கொண்டிருந்தார்;நவகலசயாகம் செய்த பின்னர்,ஆண்களுக்கும் தனது ஹீலிங் சக்தியால் நோய்களை குணப்படுத்த முடிகிறது என்று தெரிவித்தார்.இப்படி ஹீலிங் சக்தியால் குணப்படுத்துவதற்கு இவர் எந்தவிதமான நேரடி மற்றும் மறைமுகக் கட்டணங்களும் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்த நோக்கத்துக்காக ஆன்மீகக்கடல் ஆரம்பிக்கப்பட்டதோ,அந்த நோக்கம் நிறைவேறிக்கொண்டிருக்கிறது;


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment