Thursday, July 26, 2012

நாம் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும் தெரியுமா?








நாம் நம்மைப் போலவே இன்னொரு  உயிரை உருவாக்கவே கடவுள்,நமக்கு காம உணர்ச்சியைக் கொடுத்திருக்கிறார்.அதன் மீது அளவற்ற ஆர்வம் வரும்விதமாக நமது மனதை வடிவமைத்திருக்கிறார்.காம ஆசைகளை முழுமையாக அனுபவிக்காமல் ஒருபோதும் ஆன்மீக வாழ்க்கையில் நுழைய முடியாது;(ஆனால்,ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறியது போல நடிக்கலாம்;நடித்து பிறரை ஏமாற்றலாம்)எப்போது நம் ஒவ்வொருவருக்கும் காம ஆசை அற்றுப்போகிறதோ,அப்போதே நாம் ஆன்மீக மலர்ச்சியை நமது மனத்தால் அடைவோம் என்பது அனுபவ உண்மை!!!



நமது பிறந்த ஜாதகப்படி,நாடிப்பொருத்தம் என்ற ஒன்று உண்டு.நாடிப் பொருத்தம் இல்லாவிட்டால்,திருமணமே செய்யக்கூடாது;(இதில் ஒரு சில அபூர்வமான விதிவிலக்குகளும் உண்டு)இதில் தெய்வீக மற்றும் உடலியல் ரகசியம் புதைந்திருக்கிறது.முழுமையாக இதுபற்றி விவரிக்க எனது குரு அனுமதிக்கவில்லை;எனவே,ஓரளவு மட்டுமே விரித்துரைக்கிறேன்.



நாம் இன்று சாப்பிடும் உணவு இன்றிலிருந்து 70 ஆம் நாளில் விந்தாக மாறுகிறது.இந்த விந்து பெண்ணுக்கும் உண்டு;நமது உடலில் இருக்கும் எலும்பு மூட்டுக்களில் இந்த விந்துவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இருக்கின்றன;இந்த விந்துவை அளவோடு செலவழித்தால்,நாம் ஆரோக்கியமாக வாழமுடியும்.நமது வேலை அல்லது தொழிலில் திறமையோடு சாதனைகள் செய்ய முடியும்.நமது வாழ்நாள் முழுக்கவும் மூட்டுவலி வராமல் வாழ முடியும்.நமது உடலுக்கு எடையைத்  தருவது இந்த வெள்ளை அணுக்கள்தான்;இந்த வெள்ளை அணுக்கள்தான் நமது உடலுக்குள் புகும் காய்ச்சல்,தலைவலி முதலான சிறு உபாதைகளை உருவாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடி,அழிக்கிறது.அழித்து நமது உடலில் இருந்து கழிவுகள் மூலமாக வெளியேற்றுகிறது.நமது முகத்தில் தேஜஸ்ஸைத்  தருகிறது.நமது இளமையைப் பாதுகாக்கிறது;நமது ஆரோக்கியத்தோடு,செல்வச் செழிப்பையும் ஈர்த்துத் தருகிறது.
இப்பேர்ப்பட்ட இந்த விந்தின் புராதன இந்துப் பெயர்கள் சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகும்.இதை நாம் எந்த அளவுக்கு அளவாகப் பயன்படுத்துகிறோமோ,அந்த அளவுக்கு நமது உடல்நலம் சிறக்கும்;அதன் மூலமாக நமது மனநலமும் சிறப்பாக இருக்கும்;மன நலம் சிறப்பாக இருப்பின்,நமது குடும்ப நலமும் வலிமையாக இருக்கும்;குடும்ப நலம் சிறப்பாக இருந்தால்,நமது வெளித் தொடர்புகளான பிற குடும்பங்களுடனான உறவுகள் சிறப்பாக மிளிரும்.இப்படியே சங்கிலித் தொடராக வளர்ந்து நமது நாட்டின் நலனும் உயரும்.


இதை அறிவியல்பூர்வமாக ஆராய்ச்சிசெய்து கண்டறிந்த கிறிஸ்தவ மேல்நாடுகள் நமது (ஆசியாவின்) நாட்டு மக்களின் ஒழுக்கத்தைச் சிதைக்கும் விதமாக ஆபாச மற்றும் வக்கிரமான காம எண்ணங்களை உருவாக்கும் விதமான இணையதளங்களை இணைய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே நிறுவியுள்ளன.எந்த ஒரு மின் அஞ்சலையும் ஹேக்கிங் செய்து பார்த்தால்,அதில் காமரீதியான படங்கள்,வீடியோக்கள் ஒன்றாவது நிச்சயம் இருக்கும்.தாம்பத்தியத்தில் கிடைக்கும் மன நிறைவு ஒருபோதும் அதை வீடியோவாகப் பார்ப்பதில் கிடைக்காது என்பது மட்டுமல்ல;தாம்பத்தியத்திலேயே  பேராசையை உருவாக்கிவிடும்.இந்தப் பேராசையால்தான் இன்று தமிழ்நாட்டில்,இந்தியாவில்,ஆசிய நாடுகளில் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது. மேலும்,தாம்பத்திய நடவடிக்கைகள் அதிகபட்சமாக 15 நிமிடங்களில் நிறைவடைந்துவிடும்;அப்படி நிறைவடைந்ததும் ஆழ்ந்த மன நிம்மதியும்,அளவற்ற சுறுசுறுப்பும் கணவனுக்கும்,மனைவிக்கும் உண்டாகும்.


ஆனால்,தாம்பத்தியத்தை விவரிக்கும் வீடியோவில் தாம்பத்தியத்தின் நடவடிக்கை நேரம் 1 மணி நேரமாக காட்டப்படுகிறது.அப்படியெல்லாம் எந்த ஒரு மனிதனும் ஒரு மணி நேரத்துக்கு தாம்பத்தியத்தில் ஈடுபட முடியாது என்பதை நாம் உணர்வதே இல்லை;இங்குதான் குடும்பம் என்ற அமைப்பு சிதைவதற்குரிய கிறிஸ்தவ மேற்குநாடுகள் சமுதாயத்தைக் கெடுக்கும் வைரஸ் போல செயல்படுகின்றன.இதை நம்மில் எத்தனை பேர்கள் உணர்ந்திருக்கிறோம்?(நமக்குத்தான் நாம் ஒரு பெருமைக்குரிய  இந்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே தெரியவில்லையே?)


காமம் என்பது நெருப்பு என்கிறார் நெசவுத்தொழிலாளி இனத்தில் பிறந்த அரசியல் வல்லுநர் சாணக்கியர்.ஒவ்வொரு காம அனுபவமும் நம்மை சராசரி மனிதன் என்ற நிலையிலிருந்து காம வெறிபிடித்த மிருகம் என்ற இழிவான,கீழான நிலைக்குத் தள்ளிவிடும்;இதிலிருந்து மீள்வது மிகவும் கடினம் என்று தனது அர்த்தசாஸ்திரம் என்னும் நூலில் விவரித்திருக்கிறார்.எனவே,
இணையம்,டிவிடி,செல்போன்கள்,டிவிடிக்கள்,செல்போன் கேமிராக்கள் போன்றவை நம் ஒவ்வொருவரையும் மிருக நிலைக்குத்தள்ளுகின்றன என்பதை நினைவுகூறுவோம்.இந்த தொழில்நுட்ப வளர்ச்சி நிஜத்தில் மனிதகுலத்தின் வீழ்ச்சிக்கே வழிவகுத்திருக்கிறது.நாம் முன்னேறிய மனித சமுதாயம் அல்ல;பின் தங்கி வரும் மனித சமுதாயமே!



அளவுக்கு மீறி நமது உடலைப் பாதுகாத்து வரும் வெள்ளை அணுக்களை வீணாக்கினால்,நமக்கு முதலில் ஞாபக மறதி வரத்துவங்கும்;அத்துடன் அடிக்கடி வறட்டு இருமலும் உண்டாகும்;இந்த சூழ்நிலையில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்;இது நமக்கு மறைமுகமாக நமது உடலின் பாதுகாப்பு அமைப்பு விடும் எச்சரிக்கை ஆகும்.இந்த காலகட்டத்தில் அளவற்ற காம இச்சையைத் தூண்டுவிதமான எந்த ஒரு செயலையும் அடியோடு நிறுத்திவிட வேண்டும்;(காம ரீதியான படங்கள் பார்த்தல்,அது பற்றிய பேச்சுக்களை ஆர்வத்துடன் பகிர்ந்து கொள்ளுதல்).இதையும் கண்டுகொள்ளாமல் இருந்து மனம் போல வாழ்ந்துவந்தால்,கடும் அசதி உண்டாகும்;சுறுசுறுப்பாக வேலை செய்ய முடியாது;அடிக்கடி மூச்சு வாங்கும்; இதையும் கவனிக்காமல் விட்டால்,சாப்பிடும் அளவு ஒவ்வொரு தடவையும் குறையத் துவங்கும்;இறுதியில் மூட்டுவலி உண்டாகும்;நடக்க முடியாமல் சிரமப்பட வேண்டியிருக்கும்.இந்த சூழ்நிலையானது 1990 வரையில் 30 வயது முதல் 55 வயது வரையிலும் படிப்படியாக உண்டானது;தற்போதோ 20 வயது முதல் 30 வயதுக்குள் பல ஆண்களும்  பெண்களும் இந்த நிலையை எட்டிவிடுகின்றனர்.குறைந்த வயதிலேயே அனைத்தையும் அனுபவித்துவிட்டு முதுமையை எட்டிவிடுகின்றனர்;மீதி வாழ்கையை நடைபிணமாகக் கழித்துக்கொண்டிருக்கின்றனர்.



ஒருவேளை கொந்தளிக்கும் காம உணர்வுகளால் நமது பாரத நாடு, ஒழுக்கம் கெட்டு போய்விட்டால் என்ன ஆகும்?
ஜெர்மனியில் யுப்பிஸ்(Yuppies) என்ற இனமே உருவாகியிருக்கிறது.இந்த இனத்தைச் சேர்ந்தவர்களின் அப்பா யாரென்றே தெரியாது.அந்த அளவுக்கு ஒழுக்கமின்றி சில தலைமுறைகளுக்கு வாழ்ந்திருக்கிறார்களாம்.இதேபோல நமது இந்துப் பண்பாட்டைச் சீர்குலைத்து இந்தியாவின் முகத்தை,அடையாளத்தை சிதைக்கவே இந்த தொழில்நுட்பம் வந்திருக்கிறது.


இந்தியாவில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டைப் பிரச்சாரம் செய்யும் என்.ஜி.ஓ.க்கள் கூட வஞ்சகத்தோடுதான் பிரச்சாரம் செய்துவருகின்றன.
ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்தால் என்றும் இல்லை எய்ட்ஸ் என்று விளம்பரம் செய்வதில்லை;பிரச்சாரம் செய்வதில்லை;
எய்ட்ஸ் நோயிடமிருந்து உங்களைப் பாதுகாக்க ஆணுறை அணியுங்கள் என்றுதான் விளம்பரம் செய்துவருகின்றன.இதன் அர்த்தம் என்ன? நோயிலிருந்து சிக்காமல் தப்பு செய்யுங்கள் என்றுதான் அர்த்தம்.



மேலும் நமது உடலின் ஆதாரசக்தியான இந்த வெள்ளை அணுக்களில் தான் நாம் ஜபிக்கும் எந்த ஒரு மந்திரஜபமும் சேமிப்பாகி வருகிறது.உதாரணமாக நீங்கள் ஒரு நாளுக்கு  ஒரு மணி நேரம்(அல்லது 10 நிமிடம்) ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறீர்கள் எனில்,அந்த மந்திரஜபத்தின் சக்தியானது இந்த வெள்ளை அணுக்களில் சேமிப்பாகிவரும்;இந்த சேமிப்பு அளவுக்கு மீறும்போதுதான் நமது ஜாதகப்படி இருக்கும் தோஷங்கள்,நவக்கிரகங்களில் ஏற்படும் தடைகள் அனைத்தும் நீங்கத் துவங்கும்.அப்பேர்ப்பட்ட வெள்ளை அணுக்களை அளவுக்கு மீறி வீணடித்தால் நாம் ஜபிக்கும் மந்திரஜபத்தின் சக்தியும் நமக்குள் செயல்படமுடியாமல் போய்விடும்.இந்த பாராவில் சொல்லப்பட்டுள்ள இந்த தகவல் பல ஆண்டுகளாக நமது ஆன்மீக குருபரம்பரையினர் ஆராய்ந்து கண்டுபிடித்த வியக்கத்தக்க உண்மை ஆகும்.


எனவே,ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து வருவதே சிறந்தது;ஒருவனுக்கு ஒருத்தி,ஒருத்திக்கு ஒருவன் என்று வாழ்ந்து வந்து தினமும் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிப்போம்;அளவற்ற தெய்வீக சக்திகளைப் பெறுவோம்;நமது தலையெழுத்தையே இந்த ஒழுக்கத்தாலும் மந்திர ஜபத்தாலும் மாற்றுவோம்!!!

No comments:

Post a Comment