Monday, July 30, 2012

ஒரு இளைஞருக்கு ஏற்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவம்




அவர் ஒரு பொறியியல் பட்டதாரி! படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருப்பவர்;சொந்த ஊரில் ஒரு சாதாரண வேலையில் இருக்கும்போது ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை ‘ஆராய்ந்து’பார்க்கலாமே? என்ற எண்ணத்தில் நம்மிடம் ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோவை வாங்கினார்.அதற்கும் முன்பாகவே சுமார் 21 நாட்களாக தனது வீட்டு பூஜை அறையில் ஸ்ரீசொர்ண பைரவரின் மூல மந்திரத்தை தினமும் 1பதினைந்து நிமிடம் வரை ஜபித்து வந்திருக்கிறார்.அந்த 21 நாட்களில் 14 ஆம் நாளிலிருந்தே அவரது சிந்தனையில் தேவையில்லாத விஷயங்கள்(பொறாமை,கோபம்) நீங்கத் துவங்கின.




அதே சமயம்,அவருடைய நட்பு வட்டம் சிறியது;அந்த சிறிய வட்டமும் பாரில்தான் ஒன்று சேருமாம்;அவரே நம்மிடம் சொன்னது.இந்த சூழ்நிலையில் அவருக்கு ஸ்ரீசொர்ண பைரவர் போட்டோ அவருக்கு சென்றடைந்தது.தினமும் காலையில் ஒரு மணி நேரம் மற்றும் இரவு ஒரு மணிநேரம் வீதம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை விடாமல் செய்து வந்திருக்கிறார்.இந்த வழிபாடு துவங்கிய ஒரு  மாதத்தில் இவருக்கு ஒரு புதிய நட்பு உண்டானது.அந்த நட்பும் அவருடைய நட்பு வட்டமும் அந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் காலபைரவரை ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் வழிபடுபவர்கள் ஆவர்.மேலும் தேய்பிறை அஷ்டமியன்று காலபைரவர் சன்னதியில் பலவிதமான சிவத்தொண்டுகள் புரிபவர்கள் ஆவர்.



நமது பொறியியல் பட்டதாரி ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு துவங்கிய காலகட்டத்தில்,அவருக்கும் அவருடைய அப்பாவுக்கும் நல்லுறவு கிடையாது;கிடைக்கும் சொற்ப சம்பளமானது இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதத்தையும்,மனக்கசப்பையும்,கண்ணீரையும் தந்திருக்கிறது.
ஒரு வருடம் வரையிலும் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை தினமும் செய்துவந்தாலும்,நெருங்கிய உறவுகளில் துக்கம்,பிறப்பு போன்ற நிகழ்ச்சிகளுக்குச் செல்லும் சூழ்நிலையும் உண்டானது.அந்த சூழலில் எதற்கும் செல்லாமல் பிடிவாதமாகவே ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டு வந்திருக்கிறார்.சுமார் 9 ஒன்பது மாதங்களுக்குப் பிறகு,நமது பொறியியல் பட்டதாரியின் குடிகார நட்பு வட்டத்தின் விரிசல் உண்டாகி,அவர்களாகவே ஒதுங்கிவிட்டனர்.இவராக போய் அவர்களிடம் பேசினாலும்,அவர்கள் இவரிடம் சரியாகப் பேசுவதில்லை;இதன் மூலமாக வாரம் ஒருமுறை குடிக்கும் பழக்கமானது நிரந்தரமாகவே நின்றுவிட்டது.


11 ஆம் மாதம் ஆனதும்,அப்பாவுக்கும் மகனுக்கும் இடையிலான மனக்கசப்புகள் அடியோடு நீங்கிவிட்டன.எனது மகன் இப்போது குடிப்பதில்லை;அவனுக்கு எப்போ நல்ல வேலை கிடைக்கணுமோ,அப்போது கிடைக்கட்டும்;அதுபற்றி எனக்குக் கவலையில்லை; என்று அவர் தனது நெருங்கிய நண்பரிடம் கூறியது நமது பொறியியல் பட்டதாரிக்கு வந்து சேர ஆனந்தக் கண்ணீர் வந்துவிட்டது.(வீட்டிலேயே நிம்மதி இல்லாவிட்டால் ஒரு இளைஞனுக்கு வேறு எங்குதான் நிம்மதி கிடைக்கும்?நம்மில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்ப்பது இதைத் தானே!!!)


தவிர,மகனின் பொறுப்பான ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை வெகுநாட்களாக கூர்ந்து கவனித்து வந்த அவரது அப்பாவானவர்,தானும் தனியாக வீட்டின் பூஜை அறையில் (மகன் வழிபடும் நேரம் தவிர்த்து வேறு ஒரு நேரத்தில்) ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை துவக்கியிருக்கிறார்.தற்போது அந்த பொறியியல் பட்டதாரிக்கு ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் (ஓராண்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாடு செய்த பின்னர்) வேலை கிடைத்துவிட்டது.அவருடைய வார்த்தைகள் அனைத்துமே அவருடைய ஆழ்மனதில் இருந்து உண்டானவை;தவிர,அவர் `12 தேய்பிறை அஷ்டமிகளுக்கு காலபைரவர் வழிபாட்டையும் நிறைவு செய்திருக்கிறார்.


தனது ஒரே மகனுக்கு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தமைக்கு ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரின் வழிபாடுதான் காரணம் என்பதை உணர்ந்த அவருடைய அப்பா இப்போது தனது ஊரில் ஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பரப்ப ஆரம்பித்திருக்கிறார்.(இந்தப் பதிவு அந்த பொறியியல் பட்டதாரியின் அனுமதியோடு வெளியிடப்படுகிறது).அந்த இளைஞர் கடலோர சிவாலய நகரில் பிறந்தவர்!!!


ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. ARPUTHAM .... Sri sri sri swarnakarshnabhairavar thiruvadikal potri....

    ReplyDelete
  2. hai friend very good to hear this .but i need the way to do the pooja for the bairavar .will you how to do this pooja.

    ReplyDelete