Saturday, July 14, 2012

சாமானிய இந்தியர்களின் மனோபாவம் சுயமரியாதையே!!!




தமிழ்நாட்டில் புதுக்கோட்டை இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு 12.6.12 அன்று நடந்தது.இதில் போட்டியிடும் முக்கிய கட்சியின் வேட்பாளர் தரப்பில் இருந்து ஓட்டுக்கு ரூ.1000/-தொகுதி முழுக்கவும் இருக்கும் வாக்காளர்களுக்கு கடந்த 8.6.12 அன்று விநியோகிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மச்சுவாடி பகுதியில் உள்ள ராம்நகர் இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் துர்காதேவி.இவரது வயது 26,இவர் ஒரு எம்.பி.ஏ.,பட்டதாரி.இவரது வீட்டில் ஐந்து வாக்குகள்(ஓட்டு) இருக்கின்றன.கடந்த 8.6.12 அன்று மாலை துர்காதேவியின் வீட்டில் அப்பகுதியைச் சேர்ந்த முக்கிய கட்சிப்பிரமுகர்கள் ஒரு வாக்கிற்கு ரூ.1000/-வீதம் ரூ.5000/-ஐ வீட்டில் இருந்தவர்களிடம் வற்புறுத்திக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த துர்காதேவி வாக்குக்கு பணம் கொடுத்ததைக் கேள்விப்பட்டு அந்த பணத்தை அப்படியே கவருடன் கொண்டு சென்று மச்சுவாடியில் உள்ள அந்த முக்கிய கட்சியின் அலுவலகத்தில் உள்ள உள்ளூர் நிர்வாகியிடம் கொடுத்துவிட்டார்.இதைக் கண்டு அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள், இந்தக் காலத்தில் இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா? என்று பெருமையாகப் பேசியுள்ளனர்.


இந்திய ஜனநாயகத்தின் உயிர்த்துடிப்பு இதுபோன்ற துர்காதேவிகளால்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறது.நாமும் இதை விடாப்பிடியாகப் பின்பற்றுவோமா?

No comments:

Post a Comment