Saturday, July 21, 2012

ஓரு குடும்பத்தை சீர்திருத்தி,பாதுகாத்துவரும் ஓம்சிவசிவஓம்



ஒரு பட்டதாரி மாணவி என்னிடம் ஆங்கிலம் பயில வந்தாள்.அவளைப் பார்த்தாலே அப்பாவி;(சூது வாது தெரியாது என்பது மட்டுமல்ல;தன்னைப் பாதுகாத்துக்கொள்ளுமளவுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தாலும் கூட புரிந்துகொள்ளும் திறன் அவளுக்கு இல்லை என்று புரிந்தது)என்று உணர்ந்து,2 மாதத்தில் முடிக்க வேண்டிய பயிற்சியை 4 மாதத்துக்கு மெதுவாக நடத்தி அவளை ஆங்கிலத்தில் சரளமாக பேச வைத்துவிட்டேன்;


2வது மாதத்தின் முடிவில் இருந்து அவளுடைய தங்கையும் ஆங்கிலம் கற்க வந்தாள்;3 வது மாதத்தில் இருந்து அந்த அப்பாவிப் பட்டதாரிப்பெண் தனது குடும்ப அந்தரங்கங்களை என்னிடம் பகிர்ந்து கொள்ளுமளவுக்கு சகஜமானாள்;அவளுக்கு என் மீது இருந்த பயம்,கூச்சம் போயிருந்தது;


அவளுக்கு ஒரு அக்கா உண்டாம்;அவளது கணவன் அரசு ஊழியராம்;அவளது அப்பா தனது உறவினர்கள் எவரிடமும் கெட்ட பெயர் வாங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பாராம்;அவரது உறவினர்களோ இவரை தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்வது  தெரிந்தும்,அவர் கவலைப்படுவதில்லை;இந்த சூழ்நிலையில் இந்த அப்பாவிப் பட்டதாரிப்பெண்ணுக்கு ஒரு இளைஞனுடன்  திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு,அது சில மாதங்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் முறிந்தது.இந்த சூழ்நிலையில் இந்த அப்பாவிப் பட்டதாரிப்பெண்ணின் உறவினர்கள் இவளது குடும்பத்தில் அதிகாரம் செய்யத் துவங்கினார்கள்;இவளது அக்காவின் கணவரோ எங்கே தன்னைவிட செல்வாக்கான மாப்பிள்ளையை தனது கொழுந்தியாளுக்கு மணம் முடித்துவிடுவார்களோ? என்று பயந்து, தான் பார்க்கும் பையனைத் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தனது மாமனாரை நச்சரித்திருக்கிறார்.


இந்த அப்பாவிப்பட்டதாரிப்பெண்ணின் சொந்த அத்தையோ தான் பார்க்கும் பையனைத்தான் இந்தப் பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று தனது தம்பிக்கு மன நெருக்கடி கொடுத்திருக்கிறாள்.இந்த தொல்லைகள் சுமாராக நிச்சயதார்த்தம் முறிந்ததில் இருந்தே(சுமார் 1 வருடம்) இருந்திருக்கிறது.இதனால் மனமொடிந்த இந்த அப்பாவிப்பட்டதாரியின் அப்பா தினமும் குடிக்க ஆரம்பித்திருக்கிறார்.நாம் தான் ஜோதிடராச்சே? அதனால் இதற்கு என்ன செய்ய? என்று தனது ஜாதகத்தைக் கொடுக்காமலேயே ஜோதிட ஆலோசனை கேட்டாள்.


இரண்டு நாளில் இதற்கு பதில் சொல்லுவதாக அனுப்பி வைத்துவிட்டேன்.இரண்டாம் நாளன்று அந்த அப்பாவிப்பெண்ணை குரு ஓரையில் வரச் செய்து,ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிப்பது? என்பதை விரிவாக விளக்கினேன்.அவளுக்கு பரம சந்தோஷம்!!! நீங்க சொல்வது போல செய்கிறேன் என்றவாறு போய்விட்டாள்.அவள்தான் அப்பாவியாச்சே!!
சில நாட்கள் கடந்தன.ஒரு வாரம் ஆக 2 நாள் இருக்கும்போது வகுப்புக்கு வந்தாள்.


“சார்,நான் தினமும் காலை 5 மணிக்கு எழுந்து வீட்டு வேலைகள் பார்ப்பேன்.நீங்க சொன்னதிலிருந்து 4 மணிக்கே எழுந்து 4.30க்குள் குளித்து ரெடியாகி,ஓம்சிவசிவஓம் தினமும் 30 நிமிடம் ஜபித்துவருகிறேன்.இன்று காலையில் நான் ஓம்சிவசிவஓம் ஜபிக்க உட்கார்ந்ததும்,ஒரு தாத்தா என் கண்களுக்குள் தெரிந்தார்;அவர் குள்ளமாக இருந்தார்;அவரது தாடி தரையைத் தொட்டது;அவரது உடல் தங்க நிறத்தில் மின்னியது;அவர் என்னைப்  பார்த்து ‘இங்கே வா’ என்றார்.நான் அவர் அருகே சென்றேன்.அவர் என் தலையில் அவரது கையை வைத்து ஆசிர்வாதித்தார்.உடனே நான் கண்விழித்தேன்.மஞ்சள் துண்டில் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருந்தேன்.அது யார் சார்?”

“அவர் உங்களுடைய முன்னோர்களில் இருக்கும் துறவியாக இருக்கணும்;அல்லது அகத்தியராக இருக்கணும்” என்றேன்.

“அவரைப் பார்க்கும் போது எனக்கு அகத்தியர்னு தோணுச்சு” என்றாள்.

எனக்கு மிகுந்த வியப்பு!!! ஆமாம்மா அவரு அகத்தியராகத் தான் இருக்கணும்.நீ விடாமல் தினமும்  ஓம்சிவசிவஓம் ஜபிக்கணும் என்றேன்.

“இனிமே நீங்க சொல்லாட்டியும் நானே தினமும் இந்த மந்திரத்தை ஜபிப்பேன்” என்று உற்சாகமாகப் பேசினாள்.


இது நடந்து ஓராண்டு சென்றது.அன்றோடு அந்த அப்பாவி பட்டதாரிப்பெண் வரவில்லை;ஓராண்டுக்குப் பிறகு ஒரு திருமன நிகழ்ச்சியில் அந்த அப்பாவிப்பட்டதாரிப்பெண் தனது கணவனோடு வந்திருந்தாள்.அப்போது அவள் சொன்ன விஷயங்கள் என்னை மேலும் ஆச்சரியமாக்கின;



தினமும் அதிகாலை 4.30 முதல் 5.30 வரையிலும் ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபித்துக்கொண்டே இருந்ததில்,அவளுடைய அப்பாவின் குடிப்பழக்கம் திடீரென நின்றுவிட்டது.அவளே இதைப் பற்றி தனது அப்பாவிடம் கேட்டிருக்கிறாள். “நான் இப்படிக் குடிச்சே செத்துப்போனால் உன்னை யாரும்மா கவனிப்பாங்க?” என்றாராம்.இருவருக்குமே ஆனந்தக்கண்ணீர் வந்திருக்கிறது.சில மாதங்கள் கடந்தன;முன்பை விடவும் அவளுடைய அப்பா வீட்டு விஷயங்களை வெளிப்படையாகச் சொல்லத் துவங்கியிருக்கிறார்.
அவளுடைய அக்கா மாப்பிள்ளை, ‘உங்களுக்கு யாரைப் பிடிக்குதோ அவரையே மாப்பிள்ளையாக்கிக்குங்க.நான் உங்க (இரண்டாவது) மகள் திருமண விஷயத்தில் தலையிட மாட்டேன்’ என்று ஒரு நாள் அவளுடைய அப்பாவிடம் சொல்லிவிட்டாள்.இந்த விஷயம் அவருக்கு அதிர்ச்சியாகவும்,பெருமையாகவும் இருந்தது;அவளுடைய அத்தையும் இதே போல சொல்லிவிட்டதில் அவருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்திருக்கிறது.


எனவே,முழு மூச்சோடு தனது செல்ல மகளுக்கு தகுந்த வரனை பார்க்க ஆரம்பித்திருக்கிறார்.சரியான வரனும் அமைந்து திருமணமும் சிறப்பாக நடைபெற்றுவிட்டது.இப்போது அவளும் நிம்மதியாக வாழத்துவங்கியிருக்கிறாள்;அவளுடைய அப்பாவின் மனதிலும் ஆழ்ந்த நிம்மதி பரவியிருக்கிறது.இத்தனைக்கும் அந்த அப்பாவிப் பட்டதாரிப் பெண் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது தனக்கு என்று எதுவும் கோரிக்கை வைக்காமலே இருந்திருக்கிறாள்.


எனவே,நாம் ஒவ்வொருவருமே ஓம்சிவசிவஓம் தினமும் ஜபிப்போம்;
ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. Nambinaar keduvathillai!!! Om Siva Siva Om !!!

    ReplyDelete
  2. இக்கட்டுரையை படிக்கும் பொழுது ஒம் சிவ சிவ வழிபாடு மெய் சிலிர்க்க வைக்கிறது.
    இக்கட்டுரையை படிக்கும் பொழுது ஒம் சிவ சிவ வழிபாடு மெய் சிலிர்க்க வைக்கிறது.

    தாங்கள் கூறியுள்ள படி ஸ்வர்ணகர்ஷ்ன பைரவர் வழிபாடு செய்வதால் ஒம் சிவ சிவ ஒம் எப்போது ஜெபிக்கலாம் ?

    ReplyDelete