Wednesday, July 6, 2011

மதுரை கள்ளழகர் கோவில் கும்பாபிஷேகம்

திருமாலிருஞ்சோலை என்றும், தென்திருப்பதி என்றும் போற்றி புகழப்படும் புண்ணியஸ்தலமானது மதுரையை அடுத்த அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலாகும். சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்ததாக கூறப்பட்ட இக்கோவிலில் கடந்த 1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.




பின்னர் அதைத் தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாலாலய பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து பதினெட்டாம்படி கருப்பணசுவாமி கோவில் ராஜகோபுரம், மூலவர் சன்னதி, தங்க விமானம், கல்யாண சுந்தரவல்லி தாயார், ஆண்டாள் மற்றும் உபசன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு அங்குள்ள கோபுரங்கள், சிலைகள் வர்ணம் பூசப்பட்டு முழு வீச்சில் பணிகள் முடிந்தது. பணிகள் நிறைவு பெற்றதையொட்டி அரசு உத்தரவின்பேரில் வருகிற 10-ந்தேதி அன்று மகா கும்பாபிஷேக விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது.





6-ந்தேதி மாலை யாக சாலை பூஜைகள் தொடங்கு கிறது. 7, 8 ஆகிய நாட்களுக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. 10-ந்தேதி காலை 9 மணியில் இருந்து 9.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.



கள்ளழகர் கோவிலில் உள்ளா பள்ளியில் எங்களது "பழமுதிர் சோலை திருவருள்முருகன் பக்த சபை" சார்பில் விருந்து 20000 பேருக்கு அளித்துக்கொண்டு இருக்கின்றாம்.



விருந்துக்கு சேவை செய்யஅழைக்கிறோம் விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்.







We need volunteers for feast service ,if you are interests please register with us.







Pazhamutirsolai Thiruarul Murugan Bhaktha Sabhai



C/o Chamundi Vivekanandan



Chamundi Supari



New 41 old 20/3 West Tower Street ,Madurai -625 001



Cell: 94424 08009,Shop: 0452-2345601



No comments:

Post a Comment