Thursday, July 21, 2011

திருமணத்தடையை நீக்கிய ஓம்சிவசிவஓம்



திருமணத்தடையை நீக்கிய ஓம்சிவசிவஓம்

சுமார் 16 ஆண்டுகளாக வரன் பார்த்து சலித்துப்போய் விட்டதால்,அந்த கன்னிப்பெண்ணின் வீட்டில் வருத்தப்படாத நாளே இல்லை;நமது தலைவிதி அவ்வளவுதான் என முடிவு செய்திருந்த வேளையில் எனது நண்பரும்,ஆன்மீகக்கடல் வாசகருமாகிய ஒருவர்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மகிமையையும்,ஜபிக்கும் விதத்தையும்,1,00,000 முறை ஜபிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் விவரித்திருக்கிறார்.

சில நாட்கள் சிந்தித்த அந்த கன்னிப்பெண்,ஒரு அமாவாசையைத் தேர்ந்தெடுத்தாள்.மஞ்சள் நிற விரிப்பு,மூன்று ருத்ராட்சங்கள் வாங்கிக்கொண்டார்.தினமும் காலை 4 மணி முதல் காலை 7 மணி வரையிலும்,இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.கூடவே, தனது ஜப எண்ணிக்கையையும் குறித்துக்கொண்டு வந்திருக்கிறார்.வெறும் 14 நாட்களில் அந்த கன்னியின் ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்கை 1,00,008 ஐக் கடந்துவிட்டது.

15 ஆம் நாள் அதிகாலையில் அந்த கன்னிப்பெண்ணின் வீட்டுவாசலில் ஒரு சிகப்பு நிற பசுவும்,ஒரு வெள்ளை நிறப்பசுவும் வந்து தலையை ஆட்டிக்கொண்டே இருந்ததாம்.அதன் கழுத்துகளில் இருந்த மணிச்சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க,ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டிருந்த அந்த கன்னி,வீட்டுக்கு வெளியே வந்து அந்த பசுக்களை விரட்டியும் அவை போகவில்லை;சுமார் ஒரு மணிநேரம் கழித்தப்பின்னரே,அவை தாமாக புறப்பட்டுச்சென்றன.

16 ஆம் நாள் அந்த கன்னிக்கு திருமணம் நிச்சயமானது.இன்று அந்த கன்னி செல்வச்செழிப்பான,அன்பான கணவனை அடைந்திருக்கிறாள்.மணமாகும்போது அந்தக் கன்னியின் வயது 37!

ஓம்சிவசிவஓம்

2 comments:

  1. வணக்கம்,
    என் சந்தேகத்தை போக்கிட கேட்டுகொள்கிறேன்.
    நம் இரண்டு கைகளிலும் ருத்திரம் வைத்து ஓம் சிவ சிவ ஓம் சொல்லும் பொழுது சிவ மந்திரத்தின் எண்ணிகையை எப்படி கணக்கிட முடியும், அதற்கு ருதிர மாலை அல்லது கையில் வைத்து இயக்கும் counter வேண்டும் அல்லவா? பின் நாம் எப்படி இதை கணக்கிடுவது? நீங்கள் சொல்வது போல தினமும் மஞ்சள் துணியில் மட்டும் அமருந்துதான் செய்யவேண்டும் என்ற விதி இருக்கிறதா? தினமும் இப்படி செய்ய எல்லோராலும் முடியுமா? சிவ நாமம் சொல்ல இது தான் வழியா? நீங்கள் சொல்வது போல கோயில்களிலும் இப்படித்தான் செய்யவேண்டுமா? அலுவலகத்தில் மற்ற இடங்களில் நேரம் கிடைக்கும் பொழுது செய்தால் எதிர்வளை ஆகுமா? இதற்கு தங்களின் விளக்கம் என்ன & எப்படி? நீங்கள் இதை ஒரு எதிர் மறையான கண்ணோட்டத்தில் பார்க்காமல் எல்லோரும் எளிமையாக கடை பிடிக்கும் வழியை தெரிய படுத்தவும்.

    எதிர் பார்ப்புடன்,
    சிவ அன்பன்,
    சுந்தர்

    ReplyDelete
  2. மிக்க மகிழ்ச்சி சுந்தர் அவர்களே! இரு கைகளிலும் ருத்ராட்சம் வைத்து ஜபிக்கும்போது,எண்ணுவது கஷ்டம் அல்லது முடியாததுதான்.ருத்ராட்சம் வைத்து ஒரு முறை ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே பலகோடி மடங்கு பலன்கள் கிடைக்கும்.கவுண்டிங் கருவியை வைத்தும் ஜபிக்கலாம்.அல்லது ருத்ராட்ச மாலை வைத்தும் ஜபிக்கலாம்.ருத்ராட்சமாலை வைத்து ஜபிக்கும் ஆய்வு தொடர்கிறது.அந்த ஆய்வின் முடிவு தெரிந்தப்பின்னரே,ஆன்மீகக்கடலில் வெளியிடமுடியும்.
    மஞ்சள் துண்டில் ஜபிக்கையில் நமது மந்திரஜபம் அந்த மஞ்சள் துண்டில் பதிவாகிக்கொண்டே வரும்.அதை நீரில் நனைக்காத வரையிலும் அந்த மந்திர எண்ணிக்கைக்கேற்ப அது சேகரமாகும்.அந்த மஞ்சள் துண்டை வைத்து ஏராளமான பிரச்னைகளைத் தீர்க்க முடியும்.மஞ்சளைத்தவிர,வேறு நிறங்களுக்கு இந்த சக்தி இல்லை.தரையில் அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,ஜபித்த பலன் பூமிக்குள் போய்விடும்.நமக்கு சிறிதும் பலனில்லை;ஓம்சிவசிவஓம் ஒரு லட்சத்துக்கு மேல் ஜபிக்கும்போது நம்மால் சிவ உலகத்து ரகசியங்களை காண,உணர முடியும்.நமது சாதாரணவாழ்க்கையில் ஏற்படும் மாபெரும் பிரச்னைகள் தீரத்துவங்கும்.ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி ,ஆறாமிடத்து திசைபிரச்னைகள்,வம்பு வழக்குகள் தீரத்துவங்கும்.நமது விதியில் இருக்கும் முன்கர்மாக்களை நாமே நீக்கத்துவங்குகிறோம்.இதற்கு மேல் சுலபமான வழிகள் இல்லை.அலுவலகத்தில் நமது நாற்காலியில் பிறர் அமராதவரையில்,கால்கள் தரையைத் தொடாமல் ஜபிக்கலாம்.ஜபிக்கும்போது எந்த குறுக்கீடும் வராமலிக்க வேண்டும்.இது முக்கியம்.

    ReplyDelete