Wednesday, July 20, 2011

ஐந்தே நாளில் அகத்தியர் தரிசனம் பெற வைத்த ஓம்சிவசிவஓம்

சுமார் ஒன்பது ஆண்டுகளாக எனக்கு அந்தக் குடும்பத்தைத் தெரியும்.அந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் மட்டுமே! முதல்மகளின் திருமணம் முடிந்து,சுகமாக வாழ்ந்துவருகையில்,இரண்டாவது மகளுக்கு வரன் தேடிவருகின்றனர்.



எப்போது இரண்டாவது மகளுக்கு திருமணம் செய்யலாம்? என அந்த பெண்ணின் அப்பா என்னிடம் ஜோதிடம் கேட்டார்.2012 இல் பாருங்கள்.அதுவரையிலும் பொறுமையாக இருங்கள்.என்றேன்.



இரண்டாவது மகளும் அப்பாவும் முன்னுதாரணமான தலைமுறையைச் சேர்ந்தவர்கள்.இருவரிடமும் எந்த ஒளிவுமறைவும் இராது.இந்நிலையில் கடந்த ஓராண்டாக என்னிடம் வித்தை கற்க அந்த இரண்டாம் மகள் வந்தார்.



ஆறுமாதத்தில் வித்தை நிறைவடைந்தாலும்,உயர்நிலை வித்தை எனக்கூறி,அந்த இரண்டாம் மகளுக்கு எனது வாழ்க்கை அனுபவங்கள் மூலமாக எப்படியெல்லாம் பிரச்னையை எதிர்கொள்ள வேண்டும்? என்பதைப் புகட்டிக்கொண்டிருக்கிறேன்.ஏனெனில்,மிகவும் அப்பாவியான பெண்மணி அந்தக் கன்னிப்பெண்!



ஒருநாள் தனது வாழ்க்கை சோகத்தைச் சொன்னார் அந்தகன்னி!அந்த சோகம் நீங்கவும்,இனி எப்போதும் நிம்மதியாக வாழவும் ஓம்சிவசிவஓம் எப்படி ஜபிக்க வேண்டும்? என்பதை விவரித்தேன்.அன்றைய பாடம் அது மட்டுமே!கூடவே,இரண்டு ருத்ராட்சங்களைக் கொடுத்து துவங்கிடவும்,ஜபிக்கும்போது எதை எப்படி வேண்டவேண்டும்? என்பதையும் விவரித்தேன்.



முதல் நாள் ஜபித்ததும்,அந்த பெண்ணின் முகத்தில் ஒருவித ஆழ்ந்த அமைதி தெரிந்தது;இரண்டாம் நாள் ஜபித்ததும்,முகத்தில் தெளிவு பிறந்தது.மூன்றாம் நாளில் அவருக்கு இருந்த ஜன்மச்சனியின் சோகங்கள் விலகியிருந்தன.



ஐந்தாம் நாளாக இன்று காலையில் அவர் தூங்கியெழும் முன்பாக,அவருக்கு சித்தர்களின் தலைவர் அகத்தியர் கனவில் வந்தார்;தனது கையால் தன்னருகே வரும்படி சைகை செய்தார்;அவரை அவரது உச்சந்தலையில் வைத்து வாழ்த்தினார்.காலை 4.45 முதல் இதோ இப்போது மணி 9.00 வரையிலும் இனம்புரியாத மகிழ்ச்சி அவரது பேச்சிலும்,செயலிலும் தெரிந்தது.



ஓம்சிவசிவஓம் மந்திரத்தைப் பரப்பும் பாக்கியம் இந்த வீரமுனிக்குக் கிடைத்திருக்கிறது;வெறும் ஐந்தே நாளில் ஓம்சிவசிவஓம் மந்திரத்தால்,அகத்தியரையே சந்திக்கும் பாக்கியம் எனது மாணவிக்குக் கிடைத்திருக்கிறது.இந்த மந்திரத்தை நமக்கு கண்டறிந்து அளித்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்குகூகுள் (1க்குப்பின்னால் 100 சைபர்கள்) நன்றிகள்!!!



ஓம்சிவசிவஓம்

1 comment: