Wednesday, January 30, 2013

சென்னையில் ஐந்து நாட்களுக்கு விவேகானந்த வைபவம்!!!




சுவாமி விவேகானந்தர் பற்றிய சம்பவங்களையும்,சாதனைகளையும் திரு.ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு உரையாற்ற இருக்கிறார்.இவரது பேச்சு அனைவரது மனதையும் கவரும் விதமாக இருக்கும்;சுவாமி விவேகானந்தரைப் பற்றி முழுமையாக அறிய இந்த நிகழ்ச்சியில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களிலிருப்பவர்கள் கலந்து கொள்ளலாம்.

குறிப்பாக உங்கள் குழந்தைகள் பள்ளிப்படிப்பு அல்லது கல்லூரிப் படிப்பு படிப்பவராக இருந்தால்,கண்டிப்பாக இந்த ஆறு நாட்களுக்கும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லுங்கள்;அவர்கள் சிந்திக்க ஆரம்பிப்பார்கள்;இதன் மூலம் அவர்களின் அவநம்பிக்கை தகர்ந்து,தன்னம்பிக்கை உருவாகத் துவங்கும்;இதுபோல அடிக்கடி சிறந்த நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெறுவது அபூர்வம்.

இந்து தர்மம் பற்றிய அடிப்படை ஞானத்தை அறிய விரும்புவோர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும்;இதன் மூலமாக நமது பாரத தேசம்,இந்து தர்மத்தின் சாதனைகளும்,பெருமைகளும் ஒரு தம்ளர் அளவுக்குப்  புரிய ஆரம்பிக்கும்;

உங்களது சிந்தனையை சீராக்கிட விரும்பினாலோ,உங்களுக்குள் இருக்கும் அவநம்பிக்கை,சந்தேக எண்ணங்கள் நீங்கிட விரும்பினால் நிச்சயமாக இந்த ஆறு நாட்கள் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளுங்கள்;

இடம்:டி.ஏ.ஜி.அரங்கம்,ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் பள்ளி,54,பர்கிட் சாலை,(தண்டபாணி தெருமுனையில்), தி.நகர்,சென்னை.17
நாட்கள்;2.2.13 முதல் 6.2.13 வரை தினமும் மாலை 6.30 மணிக்கு(சரியான நேரத்தில் நிகழ்ச்சி துவங்கிவிடும்)

நிகழ்ச்சி நிரல்:

2.2.13 சனி=விவேகானந்தரின் பாரத தரிசனம்
3.2.13 ஞாயிறு= சிகாகோவில் சுவாமி விவேகானந்தர்
4.2.13 திங்கள்=விவேகானந்தரும் தமிழகமும்
5.2.13 செவ்வாய்=விவேகானந்தரும் விடுதலைப் போராட்டமும்
6.2.13 புதன்=இந்து தர்ம எழுச்சிக்கு வித்திட்டவர் விவேகானந்தர்

தலைவி:ஸ்ரீமதி ரமா அவர்கள்
செயலாளர்:மங்கயர்க்கரசி அவர்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: விவேகபாரதி,சென்னை-17.போன்:24321008.

பின் குறிப்பு: யாராவது இந்த  ஆறு நாட்கள் நிகழ்ச்சியையும் வீடியோ எடுத்து யூட்யூப்பில் அப்லோடு செய்தால் ரொம்ப நல்லது.செய்வீங்களா?

             

No comments:

Post a Comment