Wednesday, January 2, 2013

விஜய வருடத்தின்(14.4.2013 முதல் 13.4.2014 வரை) திருவாதிரை நட்சத்திர நாட்கள்!!!



தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தெய்வீக வாசகங்களுக்கான ஆதாரங்களை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறோம்.
சிவபெருமானது அருளை பெருமளவு பெறவும்,விரைவாக பெறவும் நாம் சிவபெருமானது அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று அண்ணாமலைக்கு வருகை தர வேண்டும்;முடிந்தால் விரதமிருந்து(சாப்பிடாமல்)  திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நேரத்திற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;
விரதமிருக்க இயலாதவர்கள்,சிறிது பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு,கிரிவலம் செல்லலாம்.

அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்திருக்க வேண்டும்;கிரிவலத்தை கிழக்குக் கோபுர வாசலுக்குள் இருக்கும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.பிறகு தேரடி முனீஸ்வரரை வழிபட்டு, அண்ணாமலையாரை கிழக்குக் கோபுர வாசலில் அமைந்திருக்கும் சாலையில் இருந்தவாறே அவரை நோக்கி வழிபட்டுவிட்டு, துவக்கிட வேண்டும்.

அஷ்ட லிங்கங்களும் 14 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.இந்த தூரத்தை கடக்க சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.இந்த 4 முதல் 6 மணி நேரமானது நமக்கு அருணாச்சலேஸ்வரர் வழங்கிய ப்ளாட்டின நேரம் ஆகும்.இந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்றவாறு ஜபித்தவாறே கிரிவலம் செல்ல வேண்டும்.
நாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையில் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் சேமிப்பாகிக்கொண்டே வரும்; (இதை துவைத்தால்,அதுவரையிலும் சேமிப்பாகியிருந்த மந்திர அலைகள் நீரில் கரைந்து போய்விடும்;எனவே,அண்ணாமலை கிரிவலம் வரும் போது மட்டும் அணியும் விதமாக ஒரு மஞ்சள் ஆடையை தனியாக தயார் செய்து வைக்கவும்)

நமது இரண்டு உள்ளங்கைகளில் இருக்கும் இரண்டு ருத்ராட்சங்களிலும் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி சேமிப்பாகிக் கொண்டே வரும்;(நமது ஆயுள் முழுக்க இவ்வாறு ஜபித்த பின்னர்,நமது மூன்றாவது தலை முறை வரையிலும் இவ்வாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்துவிட்டால்,நமது நான்காவது தலைமுறையில் சிவனது கடாட்சம் பெற்ற ஞானி பிறப்பார்.ஒரு குடும்பத்தில் ஞானி பிறந்தால்,அவரோடு முடிவடையும் முந்தைய 71 தலைமுறையினருக்கு முக்தி கிடைக்கும்)
ஒவ்வொரு லிங்கத்தின் சன்னதியிலும் சில நிமிடங்கள் அமர்ந்தும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த அஷ்ட லிங்கங்களின் சன்னதியிலும்,அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மஞ்சள் நிறத் துண்டு விரிக்காமலும்(விரித்தாலும் தப்பில்லை) ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஏனெனில்,மலையே சிவபெருமானாக இருப்பதாலும்,அவரை நாம் வலம் வருவதே கிரிவலம் எனப்படுவதாலும்,இந்த அண்ணாமலையில் மட்டும் ஓம்சிவசிவஓம் எந்த நேரமும் ஜபித்துக்கொண்டே இருக்கலாம்;


நாம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் சூட்சுமமாக கிரிவலம் வரும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அகஸ்தியர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.இதன் மூலமாக நமது கர்மவினைகள் விரைவாக தீர்ந்துவிடும்.

16.4.2013 செவ்வாய் காலை 8.32 முதல் 17.4.2013 புதன் காலை 11.02 வரை;

13.5.2013 திங்கள் மதியம் 3.54 முதல் 14.5.2013 செவ்வாய் மாலை 6.27 வரை;

9.6.2013 ஞாயிறு இரவு 11.14 முதல் 10.6.2013 திங்கள் இரவு 1.48 வரை;

7.7.2013 ஞாயிறு காலை 6.30 முதல் 8.7.2013 திங்கள் காலை 9.05 வரை;(இந்த நாளில் அமாவாசைத் திதியும் சேர்ந்து வருகிறது!)

3.8.2013 சனி மதியம் 1.43 முதல் 4.8.2013 ஞாயிறு மாலை 4.16 வரை;

30.8.2013 வெள்ளி இரவு 8.52 முதல் 31.8.2013 சனி இரவு 11.26 வரை;

27.9.2013 வெள்ளி விடிகாலை 3.57 முதல் 28.9.2013 சனி காலை 6.30 வரை;

24.10.2013 வியாழன் காலை 11.01 முதல் 25.10.2013 வெள்ளி மதியம் 1.32 வரை;

20.10.2013 புதன் மாலை 6.07 முதல் 21.10.2013 வியாழன் இரவு 8.37 வரை;

17.12.2013 செவ்வாய் நள்ளிரவு 1.08 முதல் 18.12.2013 புதன் நள்ளிரவு 3.30 வரை;

14.1.2014 செவ்வாய் காலை 8.19 முதல் 15.1.2014 புதன் இரவு 10.44 வரை;(இன்று பவுர்ணமி திதியும் சேர்ந்தே வருகிறது!!!)

10.2.2014 திங்கள் மதியம் 3.36 முதல் 11.2.2014 செவ்வாய் மாலை 5.58 வரை;

9.3.2014 ஞாயிறு இரவு 10.58 முதல் 10.3.2014 திங்கள் நள்ளிரவு 1.17 வரை;

6.4.2014 ஞாயிறு காலை 6.23 முதல் 7.4.2014 திங்கள் காலை 8.40 வரை;

இது தவிர,இந்த வருடத்தில் வர இருக்கும் சனிப்பிரதோஷ நாட்கள் வருமாறு:

20.7.2013
30.11.2013
14.12.2013
12.4.2014

விஜய வருடத்தில் வர இருக்கும் சோம வார(திங்கள்) பிரதோஷ நாட்கள் வருமாறு:

2.9.2013
30.12.2013

தொலை தூரத்தில் வாழ்ந்து வருபவர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமாவாசை அல்லது பவுர்ணமி வரும் திருவாதிரை நாளில் கிரிவலம் வந்தாலே போதுமானது;தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் குறைந்தது ஆறு திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலைகிரிவலம் செல்வது அவசியம்; இனி ஒரு போதும் மனிதப்பிறவி எடுக்கவே கூடாது என்ற சங்கல்பம் உடையவர்கள் தொடர்ந்து திருவாதிரை கிரிவலம் சென்றாலே போதும்;பவுர்ணமி கிரிவலத்தை விடவும்பல கோடி மடங்கு உயர்ந்தது இந்த திருவாதிரை கிரிவலம் ஆகும்.சிவ கணம் ஆக விரும்புவோர்,நமது கர்மவினைகளையும்,நமது முன்னோர்களின் கர்மவினைகளையும் இந்த ஜன்மத்திலேயே கரைத்து,பரிபூரணமான புண்ணிய ஆத்மாவாக்கிட விரும்புவோர் இந்த பட்டியலைப் பின்பற்றி அண்ணாமலை கிரிவலம் செல்வது நன்று.வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை;(முடிந்தால்,இந்த கிரிவலத்தோடு சேர்ந்து அன்னதானமும் பல கோடி மடங்கு புண்ணியத்தை தரும்;) டெஸ்ட் செய்து பார்ப்போமா?                                 ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment