Thursday, January 31, 2013

கோரக்கச்சித்தரின் "சந்திரரேகை" (உலக மாற்றம் கலியின் முடிவு)


82,83 கலியுகத்தில் பலவிதமான சாதிபேதங்கள் உண்டாகும். பெண்கள் அதிகமாகவும் ஆண்கள் குறைவாகவும் பிறப்பார்கள்.உறவுமுறை சரியிருக்காது. நல்ல குழந்தைகள் நூற்றுக்கு ஒன்று பிறப்பதே அரிதாகும். கலி் முற்ற முற்ற மனித ஆயுளும் குறைந்து கொண்டே போகும். அந்த சமயத்தில் சம்பலப்பட்டம் என்ற கிராமத்தில் வைவணவத்தன் என்ற அந்தணருக்குப் பிள்ளையாக புன்னை மரத்தின் கீந் கலிபுருஷன் ஜெனிப்பார்.
கலி ஐயாயிரம் ஆண்டு முடிந்து ஆறாயிரம் நடக்கும் பொழுது சாதிமத பேதங்கள் மறையத்தொடங்கும். சந்திரனின் குளிர்ச்சி குறையாது. அதே சமயம் சூரியனின் தகிப்பு அதிகமாகும். வேதங்களை அறியாத பொய்யான அந்தணர்களின் கொட்டம் ஒழியும். சத்தியம் நிலைக்கும். மனுக்களும், ஞானியும் தோன்றுவார்கள்.
85,88 இதை எனக்கு என் குரு சொன்னார். அதை நான் இங்கு கூறினேன். மேலும் உலகமக்களுக்கு சிவபெருமான் அருள் உண்டாகும். காமம் விலகும். புலியும் பசுவும் ஒரே இடத்தில் வசிக்கும். பகை இருக்காது. மானிடர்கள் நிருவிகற்ப சமாதி கொண்டு வாழ்வார்கள். தத்துவயோகம் பழகுவார்கள். மாந்தர்கள் பலவர்ணமாவார்கள். ஏகசக்கராதிபத்தியம் உண்டாகும். இந்த ஆட்சி 82000 ஆண்டுகள் நடக்கும். நவரத்தினங்கள் அதிகமாக விளையும். எல்லோரும் ககனக்குளிகை செய்து அதைக்கொண்டு ஆகாய சஞ்சாரம் செய்வார்கள். பிற உயிர்களைத் தம் உயிர்போல் எண்ணுவார்கள். சிவபெருமானை வணங்கி ஆயுள்பலம் பெற்று வாழ்வார்கள். பொய்யான வேத கதைகள் ஒழியும். அந்தணர்களின் பெருமை குன்றும். சம்புவர் குலம் தழைத்து ஓங்கும்.
89. சம்புவந்தர் சகல உலகங்களையும் தன் வசப்படுத்தும் ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். தவயோகம் செய்வார்கள். அமிர்தம் உட்கொள்வார்கள். அம்பரத்தின் ஆட்டம் காண்பர். மின்னும்தேகம் உடையவராயிருப்பர். இவர்கள்தான் குருகுலத்தவர்கள் என்ற்றிய வேண்டும்.
90,91 பிரம்மாவின் வலபாகத்தில் சம்புவும் வசிஷ்ட்டரும் உண்டானார்கள். வசிட்டர் அரக்கர் குலத்திற்கு அரசனாகி பிரம்மாவையே இகழ்ந்துபேசி, புராணக் கதைகளை புரட்டி எழுதி காமத்தில் வீழ்ந்து மறையோன் என்ற பட்டமும் பெற்றார். இந்த குலத்தில் பிறந்தவர்களுக்கும் மற்றவர்க்கும் பேதம் உண்டாக்கி உலகத்தை ஏமாற்றி மயக்கி விட்டார். இவருடன் தோன்றிய மற்றொருவரான சம்புவந்தர் தனியே ஓரிடத்தில் வசித்து வந்தார். பொறுமையுடன் இருந்த பிரம்மா கோபம் கொண்டு ஐயாயிரத்து நாற்பதுக்கு அப்பால் (கலியுகம் பிறந்து) வசிட்டர் வழிவந்தவர்களான மறையோர்களின் குலம் பாழாகும் என்று சாபம் அளித்தார்.
92,93 அந்த சமயத்தில் அறிவுடைய சம்புவந்தர் கைலாய மலைக்குச்சென்று சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து கமலாச்சி என்ற பெண்ணை மனம் புரிந்து கொண்டு அதற்குப்பிறகு மீண்டும் தவம் புரிந்து சிவபெருமானிடம் தன் குலமான சம்புவந்தர் குலம் ஐயாயிரத்து நாற்பதுக்கு அப்பால் தழைத்தோங்க வேண்டும் என்ற வரத்தை பெற்றார். பிரம்மாவும், சிவனும் வரமளித்தால் சாதிமத பேதமற்று சம்புவந்தர் குலம் தழைத்தோங்கும் சமயத்தில் அந்தணர் குலம் பாதிப்படையும்.
94,95 அக்காலத்தில் பதவிபெற்று மேல்நிலையிலிருக்கும் அந்தண குலத்தாரிடையே பேதங்கள் அதிகமாகும். ஒருவருக்கொருவர் தாக்கிப் பேசிக்கொண்டு கீழ்மக்களிட்ம் ஊழியம் செய்தும் புலால் உண்டும், மது அருந்தியும் தீய நெறிகளில் உழல்வார்கள். சாதுக்கள் இவர்கள் குற்றங்களைச் சுட்டிக்காட்டி கீழே தள்ளிவிடுவார்கள். அதனால் வறுமை வாய்ப்பட்டு, மேலும் பல தீய பழக்கங்களைக் கைக்கொண்டு, இக்குலப் பெண்கள் இழிகுலத்தாரோடும் விபசாரம் செய்வர். கள்ளும், கஞ்சாவும் அருந்தி நீசஸ்திரிகளுடன் கூடிப் பிள்ளைகள் பெற்றும், தம் குலத்தொழிலைவிட்டு பல இழிவான தொழில்களையும் செய்து பிழைப்பார்கள்.
96, 97 அந்தணர்கள் பல தொழில்களைச் செய்த போதிலும் குலத்தொழிலை செய்பவர்களும் இருப்பார்கள். (ஓதல், ஓதுவித்தல்) சிறுபெண்கள் கணவனை இழப்பார்கள். வேறு சாதியரிடம் சேர்ந்து கருக்கொண்டு யாருக்கும் தெரியாமல் அதை அழிப்பார்கள். பல அநியாயங்கள் செய்வார்கள். இவையெல்லாம் தவறாமல் நடக்கும் பொழுது அந்தண குலம் பாழாகும். இதைத்தவிர உலகத்தில் பல கலகங்கள் ஏற்பட்டு மக்கள் எல்லாம் இடம்விடு இடம் பெயர்ந்து செல்வார்கள். இதனால் பலபேர் மாண்டு போவார்கள்.
98, 99 இழிகுலத்தோர் என்று வழங்கப்படும் பறையர்கள் பாக்கியம் பெற்று சொல்ல முடியாத அளவுக்குப் புகழுடன் வாழ்வார்கள். ஒரு முட்டையில் இரண்டு குஞ்சு பொரிக்கும் மிருகங்களில் பல வினோத வகைகள் உண்டாகும். இவை எல்லாம் அந்தணர்களுக்கு கெட்ட அறிகுறிகளாகும். இந்தக் காலம் அந்தணர்களுக்கு ஆகாத காலமாகும்.
உலகமே பின்னப்படும் மக்களெல்லாம் நாகம்போல் சீறிக்கொண்டு பணக்காரன் ஏழை என்று உயர்வு தாழ்வு பேசி ஒருவரை ஒருவர் அழிக்க முயல்வார்கள். அரசியல்வாதிகளுக்கிடையே பல சங்கங்களும், கோஷ்டிகளும் உண்டாகும். ஆயினும் தெயவ நம்பிக்கை அதிகமாகும். தெய்வ வழிபாடுகள் சிறப்பாக நடைபெறும். நல்ல சமயவாதிகளும் வாழ்வார்கள்.
100. என்குரு எனக்குச் சொன்னதை நான் உலகத்திற்குச்சொன்னேன். மேலும் கெட்ட நடவடிக்கை உள்ள அந்தணர்களின் கொட்டம் ஒழியும். பதினெட்டு சித்தர்களின் பரிபூரண அருள்பெற்றவன் தென்திசையில் வியாபித்து (பிறந்து) திடசித்தத்தோடு பாரக்கத் தெரியும், ஒளிபோல் உலகத்திலுள்ளவர்களை திரட்டிச் சேர்த்து பூமியில் மாயாவிவகாரங்களை விலக்கி சத்தியத்தை நிலைநாட்டி மன்னனென ஒருவர் உலகாள்வார். முற்றே.நன்றி:சித்தர் உலகம் 

No comments:

Post a Comment