Sunday, October 25, 2015

சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்திட


சித்தர்கள் சித்தமருத்துவத்தில் அனைத்து நோய்களுக்கும் மருந்துகளுக்கான பார்முலாவை எழுதிவைத்துள்ளனர்;நாம் தான் ஆங்கில மோகத்தினால் நமது பாரம்பரியத்தை கேவலமாக நினைத்து நோயோடும்,மேல்நாட்டு நாகரீகம் என்ற போர்வையில் பிசாசுவாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;மனித வாழ்க்கை வாழ பலருக்குத் தெரியவில்லை;ஆங்கிலம் தெரிந்தால் அனைத்தும் அறிந்தவர் என்ற மாயை தேசிய மயமாகிவிட்டது;

தினமும் கறிவேப்பிலைத் துவையல் சாப்பிட வேண்டும்;
வெந்தய சாம்பார் அல்லது வெந்தயக் கீரைச் சாம்பார் சாப்பிட ரத்தத்தில் சிகப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்;சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்;


முறையான இயற்கை உணவுகளை உண்டாலே சில மாதங்களிலேயே சர்க்கரை நோயை அறவே நீக்கிவிடலாம்;நாம் தான் ருசிக்கும்,மேல்நாட்டு மேனாமினுக்கு நாகரீகத்திற்கும் அடிமையாகிவிட்டோமே?????

1 comment:

  1. அருமையான பதிவு அய்யா.

    ReplyDelete