Wednesday, October 14, 2015

பணம் சம்பாதிப்பது எப்படி?




பள்ளிப்படிப்பு படித்தவர்கள் வேலைக்குத்தான் போகவேண்டும் என்ற சட்டம் இல்லை;தனது திறமையால் எந்த ஒரு தொழிலையும் செய்யலாம்;அப்படி ஜெயித்தவர்களின் நிறுவனங்களில் தான் நாம் ஜவுளிகள் வாங்குகிறோம்;பெட்ரோல் போடுகிறோம்;செல்போன் சேவையைப் பெறுகிறோம்;
பட்டப்படிப்பு படித்தவர்களுக்கும் இதேதான்;

ஒரு ரூபாய் முதலீடு செய்து ஒரு தொழில் ஆரம்பிக்க வேண்டும் எனில்,கையிருப்பாக மூன்று ரூபாய்கள் (அவசர முதலீட்டிற்காக ) வைத்திருக்க வேண்டும்;இந்த சூழ்நிலை 1995 வரை இருந்தது;தற்போது ஒரு ரூபாய் முதலீடு செய்து ஒரு தொழில் ஆரம்பித்தால்,கையிருப்பாக குறைந்தது ரூ.100/-வைத்திருக்கவேண்டும்;கண்டிப்பாக அரசியல் செல்வாக்கு இருக்க வேண்டும்;அப்படி இருந்தால் மட்டுமே செய்யும் தொழிலில் கோடிகளில் லாபம் பார்க்க முடியும்;சில ஆயிரங்கள் லாபம் பார்க்கும் விதமாக சிறுதொழில் செய்தால் அரசியல் பின்னணி தேவைப்படாது;

தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் எந்தத் தொழிலில் வேலை பார்க்கிறீர்களோ,அதை தொழிலாகச் செய்யலாம்;தொழில் என்பது வேறு;நிறுவனம் என்பது வேறு;

தொழில் என்று எடுத்துக்கொண்டால்,ஜவுளித்தொழிலை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்:
இதில் ஜவுளி உற்பத்தி=கைத்தறி,விசைத்தறி என்று இருவிதமான தயாரிப்புகள் இருக்கின்றன;
அடுத்து மொத்த விற்பனை=இந்தியா முழுக்கவும் மொத்த விற்பனையாளர்கள் இருக்கிறார்கள்;
அடுத்தபடியாக இருப்பது சில்லறை விற்பனை=நமது ஊரில் இருக்கும் அத்தனை ஜவுளிக்கடைகளையும் சில்லறை விற்பனை மையங்களாக எடுத்துக் கொள்ளலாம்;
கைத்தறி என்று எடுத்தால் தமிழ்நாட்டில் மட்டும் 50,00,000 பேர்கள் தினக்கூலிகளாக பணிபுரிகிறார்கள்;
நிறுவனம் என்று எடுத்தால்,ஒரு கட்பீஸ் கடையை நிறுவனம் என்று கூறலாம்;

எந்த ஒரு முன் அனுபவம் இன்றியும் சுயதொழில் செய்யத் துவங்கினால்,நஷ்டம் தான் வரும்;கடன் கொடுத்து நொடித்துப் போன தொழில்களை விடவும்,துரோகம் செய்த ஊழியர்களால் அழிந்த நிறுவனங்களே அதிகம்;

நமது நாட்டில் நேர்மையாக தொழில் செய்தே கோடீஸ்வரர் ஆக முடியும்;
சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்றவர்கள்,பல்பொடி தயாரித்து விற்றே கோடீஸ்வரர் ஆனவர்கள் இருக்கிறார்கள்;தற்காலத்தில்,மூலிகை வயாக்ரா தயாரித்து பலகோடிகள் அள்ளுகிறார்கள்;

15 வயது முதல் 25 வயது வரை நூலகங்களில் எப்படி ஜெயித்தார்கள்? என்ற நூலையும்,தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அடிக்கடி வாசிக்க வேண்டும்;வாசிப்புப் பழக்கமே ஒருவரை ஜீனியஸ் ஆக்கும்;தொடர்ந்த வாசிப்புப் பழக்கம் ஒருவரை மாமேதையாக்கும்;

முன் பின் தெரியாத தொழிலில் இறங்குவதால்,கைப்பணத்தை இழக்கிறோம்;பிட்காயின்,ஆன் லைன் வர்த்தகம்(E-trade);முன்பேர வர்த்தகம் (Future Trade);ஆன் லைன் பங்குச் சந்தை   (e-sharemarket);இணைய வழி பொருட்கள் விற்பனை (Commodity Trading) அனைத்தும் நமது செல்வவளத்தை வெளிநாடுகளுக்குத் தாரை வார்க்கவே உருவாக்கப்பட்டவை;
பிட் காயின் தயாரிப்பும் இதே போலத்தான்;போலியான பணத்தில் உண்மையான சொத்துக்களை வாங்கிட வல்லரசுநாடுகளில் பில்ட்-அப் தான் பிட்காயின்;

பணம் சம்பாதிக்க ஒரு மடங்கு திறமை போதுமானது;ஆனால்,சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக மாற்றிட நூறு மடங்கு திறமை தேவை;இதில் தான் நம்மில் பலர் தோல்வியடைந்துவிடுகிறோம்;

ஏனெனில்,இன்று ஏய்த்துப்பிழைப்பவர்கள் எல்லாத் துறையிலும்,எல்லா குடும்பத்திலும் வந்துவிட்டார்கள்;
எனவேதான்,பல குடும்பங்களில் தனது மகனுக்குத் திருமணம் ஆன சில வருடங்களில் தனது சொத்தைத் தராத அப்பாக்களைப் பார்க்கிறோம்;

அது மட்டுமல்ல;பணம் சம்பாதிக்கவும்,சம்பாதித்த பணத்தை சொத்துகளாக மாற்றிடவும் வலுவான ஆன்மீகப்பின்னணி தேவைப்படுகிறது;ஆமாம்! ஏதாவது ஒரு கடவுளை தினமும் ஒரு மணி நேரம் மந்திர ஜபத்தால் வழிபட வேண்டும்;முன்னோர்களுக்கு முறைப்படி திதி மாதம் தோறும்(முடியாதவர்கள் ஆண்டுக்கு மூன்று முறை) கொடுத்து வரவேண்டும்;

பன்னாட்டு நிறுவனங்களை நடத்தும் மேல்நாட்டினர் அவர்களின் மத சம்பிரதாயப்படி,முன்னோர்களுக்கு முறைப்படி தர்ப்பணம் கொடுத்து வருவது எவருமே அறியாத ரகசியம்!!!

வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!










                                                                                                                                                                       

No comments:

Post a Comment