Monday, October 1, 2012

அவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல் 13.4.13 வரை) மைத்ர முகூர்த்தங்கள்




நாம் வாங்கியிருக்கும் கடன் தொகை எவ்வ்வ்வளவு பெரியதாக இருந்தாலும்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில் ,நாம் வாங்கியிருக்கும் கடனில் அசலில் ஒருபகுதியைத் திருப்பித் தர வேண்டும்.அவ்வாறு திருப்பித்தந்தால்,அதன்பிறகு,அந்த கடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும்,விரைவாக தீர்ந்துவிடும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவில் மைத்ரமுகூர்த்தப்பட்டியலை வெளியிட்டுவருகிறோம்;ஏராளமான ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் இந்த மைத்ர முகூர்த்த நேரப்பட்டியலைப் பயன்படுத்தி,தங்களது கடன்களைத் தீர்த்துவிட்டனர்.இந்த மைத்ர முகூர்த்தப்பட்டியலை கந்துவட்டிக்குப் பயன்படுத்தி,கடனைத் தீர்க்க முடியாது.
பாலன் என்பவர்,சுகுமாரிடம் ரூ.1,00,000/- கடன் வாங்கியிருக்கிறார்.கி.பி.2002 இல் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திணறுகிறார் என்று வைத்துக்கொள்வோம்;பாலன் இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மைத்ரமுகூர்த்த நேரத்தில் ஏதாவது ஒரு நேரத்தைத் தேர்ந்தெடுத்து,ரூ.500/- அல்லது ரூ.1000/-ஐ சுகுமாரிடம் கொடுக்க வேண்டும்.இதை அசலில் வரவு வைத்துக்கொள்ளுங்கள்;மீதிக் கடனை விரைவில் அடைத்துவிடுகிறேன் என்ற அர்த்தம் வருமாறு சொல்ல வேண்டும்.சுகுமார் அதை அசலில் வரவு வைக்க வேண்டும்.அவ்வளவுதான்.இப்படி ஒரே ஒருமுறை செய்தாலே,மீதி ரூ.99,500/- அல்லது ரூ.99,000/-கடனை பாலனால் தீர்த்துவிடமுடியும்.இதேபோல,வங்கிக்கடனுக்கும் முயற்சி செய்துபார்க்கலாம்;ஒன்றுக்கும் மேற்பட்டவர்களிடம் கடன்கள் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்.
கடன் என்பது சிலருக்கு கவனக்குறைவால் ஏற்படும் சுமை;பலருக்கு ஆடம்பரத்தால் உருவாகும் சுருக்குக் கயிறு;எப்படிப் பார்த்தாலும் கடன் என்பது அவரவரின் கர்மவினையின்  விளைவுதான்.இருப்பினும்  இந்த மைத்ர முகூர்த்தத்தைப் பயன்படுத்தி விரைவாக கடனைத் தீர்ப்பதும்,அவரவர்களின் பூர்வபுண்ணியமே!!! சிலருக்கு அவர்களின் பிறந்த ஜாதகப்படி,வாழ்நாள் முழுக்க கடன் இருக்க வேண்டும்.அப்பேர்ப்பட்ட நேரத்தில் பிறந்திருப்பார்கள்;அவர்கள் ஒரு கடனை அடைத்துவிட்டு,அடுத்த கடனை வாங்கிட வேண்டியதுதான்.அப்பேர்ப்பட்ட ஆத்மாக்களை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.

26.2.12 ஞாயிறு காலை 9 முதல் 11 மணிவரை;

27.2.12 திங்கள் காலை 9.04 முதல் 10.04 வரை;

13.3.12 செவ்வாய் இரவு 10.10 முதல் 12.10 வரை;

25.3.12 ஞாயிறு காலை 7.10 முதல் 9.10 வரை;

9.4.12 திங்கள்  இரவு 8.30 முதல் 10.30பத்து முப்பது வரை;

20.4.12 வெள்ளி இரவு 7.35 முதல் 9.35 வரை;

7.5.12 திங்கள் மாலை 6.30 முதல் 8.30 வரை;

18.5.12 வெள்ளி காலை 4.05 முதல் 6.05 வரை;

3.6.12 ஞாயிறு மாலை 4.44 முதல் 6.44 வரை;

14.6.12 வியாழன் காலை 5.49 முதல் 6.49 வரை;

15.6.12 வெள்ளி காலை 5.50 முதல் 7.50 வரை;

30.6.12 சனி மாலை 3.35 முதல் 4.50 வரை;

7.8.12 செவ்வாய் இரவு 10.35 முதல் 12.35 வரை;

8.8.12 புதன் இரவு 10.40 முதல் 11.50 வரை;

24.8.12 வெள்ளி மதியம் 12.30 முதல் 2.30 வரை;

4.9.12 செவ்வாய் இரவு 8.50 முதல் 10.50 வரை;

21.9.12 வெள்ளி காலை 10.15 முதல் மதியம் 12.15 வரை;

1.10.12 திங்கள் இரவு 7.07 முதல் 9.07 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.19 முதல் இரவு 7.19 வரை;

14.11.12 புதன் காலை 7.45 முதல் 8.15 வரை;

15.11.12 வியாழன் காலை 6.05 முதல் 6.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 4.40 முதல் 6.40 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல் 2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் 12.41 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த மைத்ர முகூர்த்த நேரங்களின் மைய பாகத்தைப் பயன்படுத்துதல் நன்று;இந்த மைத்ர முகூர்த்த நேரமானது இந்தியாவில் தமிழ்நாடு,கேரளா,ஆந்திரா,கர்னாடகா,லட்சத்தீவு பகுதிகளுக்கும்; இலங்கை,மாலத்தீவு முழுமைக்கும் பொருந்தும். பிற நாடுகளில் இருப்போர் இந்திய நேரத்துக்கும்,அவர்கள் வாழும் நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை உணர்ந்துகொண்டு பயன்படுத்தலாம்.கடனில்லாமல் வாழ வாழ்த்துகிறேன்.

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. very useful information,can u pls guide me hw to calculate tis timings for further month & years ???

    ReplyDelete