Monday, October 1, 2012

முன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹாளய பட்சம்!!!




ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாளிலிருந்து 15 நாட்கள் வரையிலான பட்சத்தை(கால கட்டத்தை) மஹாளய பட்சம் என்று அழைக்கிறோம்;இந்த 15 நாட்களில் நமது முன்னோர்களாகிய தாத்தாக்கள்,பாட்டிகள் மேல் உலகத்தில் இருந்து அனுமதி பெற்று நமது வீடுகளுக்கு வருகை தருகின்றனர்;முதல் யுகமான திரேதாயுகத்தில் அப்படி நமது முன்னோர்கள் வருகை தருவதை கண்களால் பார்க்க முடியும்;நாம் வாழும் கலியுகத்தில் பார்க்க முடியாது;அவ்வளவு பிரகாசமான ஒளி உடலோடு வருகை தருவார்கள்;அப்படி வரும் நமது முன்னோர்கள் நமது வீட்டை ஒட்டி இருக்கும் மரம்,செடி,கொடிகளில் தங்குவார்கள்:அது இல்லாதவீடுகளில் நமது வீட்டின் நீர்நிலைகளில் தங்குவார்கள்;


இந்த நந்தன வருடத்து மஹாளய பட்சமானது 30.9.12 முதல் 15.10.12 வரை வந்திருக்கிறது.இந்த நாட்களில் நாம் செய்ய வேண்டியது என்ன?


தினமும் யாராவது ஒரு ஏழை/துறவி/வறியவருக்கு ஒருவேளை மட்டுமாவது அன்னதானம் செய்ய வேண்டும்.முடிந்தால் மூன்று வேளைகளும் அன்னதானம் செய்யலாம்;இப்படி தினமும் அன்னதானம் செய்ய முடியாதவர்கள் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் புரட்டாசி மாதத்து அமாவாசையான 15.10.2012 அன்று மட்டும் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்யலாம்;எத்தனை பேர்களுக்கு என்பது அவரவரின் பொருளாதார வளத்தைப் பொறுத்தது.குறைந்தது மூன்று பேர்களுக்கு காலையில் ஆறுமணி முதல் எட்டு மணிக்குள்ளும்,மதியம் பனிரண்டு மணி முதல் இரண்டு மணிக்குள்ளும்,மாலை ஏழு மணி முதல் ஒன்பது மணிக்குள்ளும் அன்னதானம் செய்யலாம்.


வசதியிருந்தால் திரு அண்ணாமலை அல்லது திருஆனைக்கா அல்லது சிதம்பரம் அல்லது காசி அல்லது கயா அல்லது ராமேஸ்வரம் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒரு ஆலயத்தில் அன்னதானம் செய்யலாம்.


இப்படி அன்னதானம் செய்ய முடியாதவர்கள் தினமும் அருகில் இருக்கும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது ஆறு நாட்டுவாழைப்பழங்கள் வாங்கித் தரலாம்;தினமும் செய்ய முடியாதவர்கள் 15.10.2012  15.101111அக்டோபர் 15,2012 திங்கட்கிழமை காலையில் மட்டுமாவது செய்யலாம்.


இந்த பதினைந்து நாட்களில் (உங்கள் ஊரில் மலைக்கோவில் அல்லது வனாந்திரக் கோவில் இருந்தால்) உங்கள் ஊரில்=வசிக்கும் ஊராக இருந்தாலும் சரி;சொந்த ஊராக இருந்தாலும் சரி=மழை வரும் நாளைக் கவனிக்கவும்;மழை வந்த நாள் முதல் அடுத்த மூன்று நாட்களுக்குள் இந்த மலைக்கோவில் அல்லது வனாந்திரக் கோவிலுக்கு ஒருமுறை செல்லவும்;அப்படிச் செல்லும்போது குறைந்தது  ஐந்து கிலோ நவதானியங்களை வாங்கிக்கொண்டு செல்லவும்;அந்த கோவிலுக்குச் செல்லும் பாதையின் ஓரங்களில் உள்ளடங்கியபகுதியை நோக்கி தூவுங்கள்;அடுத்த ஆறு மாதங்களுக்கு மழை அடிக்கடி வர இருக்கிறது;இந்த ஆறு மாதங்களும் இப்படி அடிக்கடிச் செய்யலாம்;இதன் மூலமாக நவக்கிரகங்களால் ஏற்பட இருக்கும் தோஷங்கள் நம்மைவிட்டு விலகிச்சென்றுவிடும்;


குறிப்பாக மீனம்,மேஷம்,கடகம்,கன்னி,துலாம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் இதைப் பின்பற்றுவது நல்லது;அவசியம்;ஏனெனில்,இவர்களுக்கு சனியின் தொல்லை அதிகமாக இருக்கிறது.எனவே,இவர்களும் இவர்களுக்காக இவர்களின் ரத்த உறவுகளும் இந்த நவதானியங்களை வாங்கித் தூவலாம்;வசதி உள்ளவர்கள் சதுரகிரிக்குச் சென்றும்,திரு அண்ணாமலைக்குச் சென்றும் இதுபோலச் செய்யலாம்.


இந்த மஹாளயபட்சமான பதினைந்து நாட்களில் நாம் செய்யக் கூடாதது என்ன?


காமம் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கையையும் நிறுத்தி வைக்க வேண்டும்;காம உணர்ச்சியைத் தூண்டக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்யாமலிருக்க வேண்டும்;கோபம்,சாபம் போன்றவைகளையும் நமது வீட்டில் மற்றும் நமது ரத்த உறவுகளிடம் காட்டாமலிருக்க வேண்டும்.


ஏதாவது ஒரு மந்திரத்தை தினமும் காலை பிரம்ம முகூர்த்தத்தில் ஜபிக்காமல் இருக்கக் கூடாது;குறிப்பாக ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்காமல் இருக்கக் கூடாது.

ஏதாவது ஒரு இறைவழிபாட்டைச் செய்யாமல் இருக்கக் கூடாது.குறிப்பாக,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டை பிடிவாதமாக செய்யாமல் இருக்கக்கூடாது.


ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment