Wednesday, October 17, 2012

மதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து!!!



விநோதமான பிரச்சாரத்தை ஆரம்பித்திருக்கிறார்கள் அவர்கள். அவர்களுடைய இலக்கு அப்பாவி இந்து இல்லத்தரசிகள் தான்!

கிராமங்களில் நடக்கும் இந்த மதப்பிரச்சாரம்,இப்போது நகரங்கள்,மாநகரங்கள் மற்றும் பெருநகரங்களுக்கும் பரவி இந்து தர்மத்தின் வேர்களை வெட்டிக்கூறுபோடத் துவங்கியிருக்கிறது.மாற்று மதத்தைச் சேர்ந்த அவர்கள் தம்பதியாகத் தான் வருகிறார்கள்;ஒன்று அல்லது இரண்டு ஜோடிகள்! அப்பாவியாகத்  தோற்றமளிக்கும் இந்துப் பெண்களை குறிப்பாக இல்லத்தரசிகளைக் கண்டால் அவர்களுக்கு கொண்டாட்டம் ஆகிவிடும்.


மெல்லப் பேச்சுக் கொடுப்பார்கள்; “என்னம்மா,கவலையாக இருக்கிறாயே,என்ன விஷயம்? குடும்பத்தில் பிரச்னையா? பணக்கஷ்டமா? கவலையே வேண்டாம்.உங்கள் வீட்டு ஹாலில் அமர்ந்து நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.எங்கள் மதப் புத்தகங்களைப்படிக்கிறோம்; அப்படிச் செய்தால் உன்னுடைய கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்துவிடும்” என்று அன்பொழுகப் பேசுவார்கள்.இதைப்போல மயக்கிப் பேசி வீட்டுக்குள் நுழைந்து அவர்கள் மதத்தின் பிரச்சாரத்தை ஆரம்பிப்பார்கள்;சமயத்தில் ஆளைப்பார்த்துக்கொண்டு, நம் மதக் கடவுள்கள்  பற்றிக் கிண்டலும் கேலியும் செய்வதுண்டு.

இதை ஒரு தொழிலாகச் செய்யும் அப்படிப்பட்டவர்கள் சமீபத்தில் சென்னையில் என் நண்பரின் வீட்டுக்கு வந்தார்கள்;அப்போது நண்பர் வீட்டில்  இல்லை; நண்பரின் மனைவியிடம் நைசாகப்பேசி, இருபது நிமிடங்கள் எங்கள் பிரார்த்தனையைச் செய்கிறோம் என்று வீட்டுக்குள் சுமார் ஒரு மணி நேரம் பிரச்சாரத்தை பண்ண ஆரம்பித்துவிட்டார்கள்.நண்பர் சிறந்த தெய்வ பக்தி உடையவர்;அவர் வீட்டு வாசலில் விநாயகர் படம் ஒட்டப்பட்டிருந்தது.அவர் இல்லாத சமயமாகப்பார்த்து, இதெல்லாம் தெரிந்துகொண்டே அந்த கும்பல் உள்ளே நுழைந்து பிரச்சாரம் பண்ணிக்கொண்டிருந்தது.


நண்பரின் மனைவி எவ்வளவோ சொல்லியும் அவர்கள் போதனையை நிறுத்தாமல் தொடர்ந்து கொண்டேயிருந்தார்கள்.தாங்கமுடியாமல் தன் கணவருக்கு எஸ்.எம்.எஸ்.செய்துவிட்டாள் மனைவி.கடும் கோபத்துடன் தன் வீட்டுக்கு விரைந்தார்.மனைவி டென்ஷனுடன் முறையிட,நண்பர் என்ன செய்தார் தெரியுமா?


அவர்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, வாசல் கதவைச்சாத்திவிட்டு வீட்டுக்குள் போனார். திரும்பி வந்தவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது.அது பகவத்கீதை! பாரதியார் அழகான தமிழில் மொழிபெயர்த்த அந்த அற்புதமான புத்தகம், நண்பர் அந்த மாற்று மதக்காரர்கள் முன் உட்கார்ந்தார். “இதோ பாருங்கள்.உங்கள் பிரச்சாரத்தை முடித்துவிட்டீர்களா? ரொம்ப சந்தோஷம்.இப்போது என் முறை. எங்கள் மதத்தின் வேத நூலான பகவத்கீதைக்கு மஹாகவி பாரதியார் அருமையான விளக்க உரை எழுதியிருக்கிறார்.அதை இப்போது படித்துக் காட்டப்போகிறேன்.அருமையான காவியம் இது. படித்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும்.இப்போது நான் படிக்க ஆரம்பிக்கப்போகிறேன்.அசையக்கூடச் செய்யாமல் இதை நீங்கள் கேட்க வேண்டும்.எழுந்தாலோ,வெளியில் செல்லமுற்பட்டாலோ நான் என்ன செய்வேன் என்று எனக்கே தெரியாது” என்று சொல்லி விட்டு, “எல்லாக் கடமைகளையும் பரித்யாகம் பண்ணிவிட்டு என்னையே சரண்புகு.நான் உன்னை எல்லாப் பாவங்களிலிருந்தும் விடுவிக்கிறேன்.துயரப்படாதே!”என்று பாரதியாரின் பகவத்கீதையை சத்தம் போட்டு,உணர்ச்சி பொங்க படிக்க ஆரம்பித்தார்; எதிரில் உள்ளவர்கள் விதிர்விதிர்த்துப் போனார்கள்.


ஒரு மணி நேரம்,கீதையின் கடைசி வார்த்தை வரை சொல்லி முடித்துவிட்டு, “புரியாவிட்டால் சொல்லுங்கள்:இன்னொரு முறை படிக்கிறேன்” என்று சொன்னார் நண்பர். வியர்க்க விறுவிறுக்க அன்று எழுந்துஓடிப்போனவர்கள் தான், அதற்குப்பிறகு அந்த ஏரியாப்  பக்கமே தலைகாட்டவில்லை;
உண்மைச் சம்பவம் இது. 



இது போல மாற்று மதக்காரர்கள்,பிரச்சாரம் செய்ய உங்கள் வீட்டுப் பக்கம் வந்தால்,உடனே கீதையையோ,தேவாரத்தையோ,திருமந்திரத்தையோ கையில் எடுத்துக் கொள்ளுங்கள்.
அப்புறம் பாருங்கள் நடப்பதை!

நன்றி:குமுதம் பக்தி ஸ்பெஷல் செப்டம்பர் 2012

3 comments:

  1. பைபிள் , ஏசு குறித்து நாம் அறிந்து கொள்ளாததால் இவர்களின் ஏமாற்று பிரச்சாரங்களுக்கு நம் சமுதாயம் பலியாகி வருகிறது. பைபிளின் அபத்தங்கள் குறித்து கேள்வி கேட்டால் இந்த அறிவாளிகள் நம் பக்கம் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள்.

    ReplyDelete
  2. குமுதத்தில இப்படி கூட ஒரு கட்டுரை வருதா...

    ஓ... பக்தி ஸ்பெஷலா... இத குமுதம்-ல அவங்களால போட முடியுமா?

    ReplyDelete
  3. time to wake up and make up also. the other thing they do is to arrange for loans through magalir suya udhavi etc., e.g., afro or some thing recently arrested

    ReplyDelete