Friday, August 24, 2012

திருப்பதி வெங்கடாஜபதியின் அரிய புகைப்படங்களைத் தாருங்கள்!!!


நகரி: திருப்பதி வெங்கடேச பெருமாளின் புராணகால வரலாற்றை வெளிப்படுத்தும், அரிய புகைப்படங்களை அனுப்பி வைக்கும்படி திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், பக்தர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. திருமலை வெங்கடேச பெருமாள் கோவில் நிர்வாகத்தை பராமரித்து வரும், திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் ஏற்படுத்தப்பட்டு, 80 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதையொட்டி, வெங்கடேச பெருமாளின் சரித்திர முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும், புகைப்படங்களை வைத்திருக்கும் பக்தர்கள், அவற்றை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரியிடம் ஒப்படைக்கலாம். தபாலில் அனுப்பி வைக்கவும், பக்தர்களுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. திருமலை கோவிலில் விரைவில் நடைபெறும் ஆண்டு பிரம்மோற்சவம், நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, புகைப்பட கண்காட்சி அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அங்கு இந்த அரிய புகைப்படங்கள் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்படும். படங்களை, பக்தர்கள் நன்கொடையாக வழங்க, முன் வர வேண்டும் என, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.
நன்றி:தினமலர் 24.8.12

No comments:

Post a Comment