Monday, August 20, 2012

சகல பிரச்னைகளையும் தீர்க்கும் பைரவர் வழிபாடு!!!



21.12.2011 முதல் டிசம்பர் 2014 வரை கன்னி ராசிக்கு பாத/வாக்குச்சனியும்,துலாம் ராசிக்கு ஜன்மச்சனியும்,விருச்சிக ராசிக்கு விரையச்சனியும்,மீனராசிக்கு அஷ்டமச்சனியும்,மேஷ ராசிக்கு கண்டச்சனியும்(7 ஆம் இடம்) நிகழ்ந்துகொண்டிருக்கிறது.இந்த சனியின் தாக்கமானது நம்மைப் பக்குவப்படுத்தவே செய்யும் என்பதை பலர் உணருவதில்லை;மேலும் இந்த ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் இந்த சனியின் துன்பம் இல்லாத காலத்தில் இந்த ராசிக்காரர்கள் செய்த தவறுகளின் விளைவுகளையும்,அவர்களின் தீய குணங்களின் வெளிப்பாட்டினால் உருவான குற்றங்கள்,பிரச்னைகளின் மறுவடிவமாகவும் வருகின்றன.

ஆனால்,அதே சமயம் தனது வாழ்நாளின் ஒவ்வொரு நொடியும் நீதி ,நேர்மை என்று வாழ்ந்து வந்து அதனாலேயே பலவிதமான கஷ்டங்கள்,சிரமங்கள்,வசதிக்குறைபாடு என்று வாழ்ந்து வருபவர்களுக்கு ஏழரைச்சனியும்,அஷ்டமச்சனியும் வசதிபடைத்தவர்களாக வாழ வைக்கும் என்பது அனுபவ உண்மை.இந்த அனுபவ உண்மையை கண்டுபிடிக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.ஏனெனில்,இப்படிப்பட்டவர்களின் ஜாதகங்களைத் தேட வேண்டியிருந்தது.
சனியின் தாக்கத்தை நிறுத்திட கால பைரவர் வழிபாடே சிறந்தது ஆகும். புதிய நீலத்துணியில் கறுப்பு எள்ளை வைத்து முடிய வேண்டும்;பிறகு அதை நல்லெண்ணெயில் நனைக்க வேண்டும்;பிறகு அதை இரும்புக்கிண்ணத்தினுள் வைக்க வேண்டும்;வைத்தப்பின்னர் அந்த இரும்புக்கிண்ணத்தில் நல்லெண்ணெயை ஊற்ற வேண்டும்;அந்த நல்லெண்ணெயில் நாம் வைத்த நீலத்துணி பொட்டலம் மூழ்கியிருக்க வேண்டும்;அந்த நீலப்பொட்டலத்தில் தீபமேற்ற வேண்டும்;இப்படி 8 தீபங்களை ஏற்ற வேண்டும்;இவ்வாறு 16 சனிக்கிழமைகளுக்கு கால பைரவரின் சன்னதியில் தீபங்களை ஏற்றிவர சனியின் தாக்கம் நின்றுவிடும்.

செல்வச் செழிப்பு பெற உதவும் கால பைரவர் வழிபாடு: 

வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் காலபைரவருக்கு நமது பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்;அவ்வாறு செய்யும் போது சந்தனாதித்தைலம்,அத்தர்,புனுகு,ஜவ்வாது,சிகப்பு அரளிமாலை அல்லது பூக்கள் போன்றவைகளை பூசாரியிடம் பூஜைக்குத் தர வேண்டும்.(ஒரு போதும் மல்லிகைப்பூவைத் தரக்கூடாது;துளுக்கச் சாமந்திப்பூவையும் தரக்கூடாது)இவ்வாறு 62 வெள்ளிக்கிழமைகளுக்கு தொடர்ந்து வழிபாடு செய்து வர வேண்டும்.


இதில் இந்த வழிபாட்டை 31 வெள்ளிக்கிழமைகள் செய்து முடித்தப்பின்னர்,குறைந்தது ஒரு ஏழைப்பெண்ணுக்கு தங்கத்தில் தாலி செய்து கொடுக்க வேண்டும்;அதிகபட்சமாக 3 இன் மடங்குகளில்( 3,6,9,12,15) ஏழைப் பெண்களுக்கு அவர்களின் குல வழக்கப்படி தாலி செய்து தானம் செய்தால்,கால பைரவரின் அருளாசி பெருமளவு கிடைக்கும்;பல மடங்கு செல்வ வளம் உண்டாகும்.அதே சமயம்,இப்படி தாலி தானம் செய்த விஷயத்தை விளம்பரப்படுத்தக் கூடாது.

ஓம்சிவசிவஓம்


No comments:

Post a Comment