Wednesday, August 1, 2012

உங்களை தெய்வீக நிலைக்கு உயர்த்தும் ஓம்சிவசிவஓம்!!!



கம்யூட்டர்,இண்டர்நெட்,ஈமெயில்,மொபைல் பேங்கிங்,நெட் பேங்கிங்,ஆன்லைன் ஷேர் டிரேடிங்,கரன்ஸி டிரேடிங் என்று நாம் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறினாலும்,இந்த தொழில் நுட்பத்தை இந்தியா முழுக்கப்  பரப்பி மேல்நாடுகள் தான் நம்மை கொள்ளையடிக்கின்றன.இப்படிக் கொள்ளையடிப்பதை நாம் உணராமல் இருப்பதற்காக இவைகளைப் பயன்படுத்தாதவர்கள் பின் தங்கியவர்கள்,இன்னும் நாகரீகமடையாதவர்கள் என்ற மாயையை உருவாக்கி வைத்திருக்கின்றன.

உலகின் மூத்த சமூதாயமான நமது தமிழ்ச் சமுதாயமும் இந்த முட்டாள்த்தனமான மாயையில் சிக்கியிருப்பதுதான் வெட்கக் கேடான விஷயம்.சரி விஷயத்துக்கு வருவோம்:நீங்கள் எந்த ஊரில் வாழ்ந்து வந்தாலும் சரி,எந்த வேலையில் இருந்தாலும் சரி;அல்லது என்ன தொழிலைப்பார்த்தாலும் சரி;தினசரி வாழ்க்கை சிக்கல் மேல் சிக்கலாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் நிஜம்.இந்த சிக்கல்களைக் களையவே எனது ஆன்மீக குருநாதர்களின் ஆசிப்படியும்,எனது அனுபவப்படியும் தினமும் ஓம்சிவசிவஓம் அல்லது ஓம்ஹரிஹரிஓம் என்ற மந்திரத்தை ஜபிக்கும்படி வேண்டுகிறேன்.


21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்;அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்த வேண்டும்;இந்த இரண்டு  கட்டுப்பாடுகளை யாரால் பின்பற்ற முடியுமோ அவர்கள் தினமும் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்கலாம்.

எப்படி ஜபிப்பது?


ஒரு மஞ்சள் துண்டு வாங்கிக் கொள்ளவும்;இரு ஐந்து முக ருத்ராட்சங்கள் வாங்கிக்கொள்ளவும்;(முடிந்தால்) அருகில் இருக்கும் சிவாலயத்தில் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்த விபூதியை வாங்கி வைத்துக்கொள்ளவும்.


வெகுதூரத்தில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிப்பவர்கள் மஞ்சள் துண்டு மட்டும் வாங்கினால் போதுமானது.


ஒரு அமாவாசையன்று நமது வீட்டில் பூஜை அறையில் அல்லது தனியறையில் மஞ்சள் துண்டை விரித்து,அதன் மீது கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்.நமது உடலின் எந்தப் பகுதியும் மஞ்சள் துண்டினைத் தாண்டி தரையில் படக்கூடாது.

முதலில் நமது குலதெய்வத்தின் பெயரை(ஓம் முனீஸ்வராய நமஹ) என்று ஒருமுறை மனதுக்குள் ஜபிக்க வேண்டும்;அடுத்து ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.(குல தெய்வம் தெரியாதவர்கள் தனது இஷ்ட தெய்வத்தின் பெயரைச் சொல்லலாம்)

பிறகு நமது நியாயமான கோரிக்கை ஏதாவது ஒன்றை மட்டும் நினைத்து(உதாரணமாக எனது கடன்கள் அனைத்தும் இன்னும் ஒரு வருடத்துக்குள் தீர வேண்டும் அல்லது எனது மகள் நன்றாகப் படிக்க வேண்டும் அல்லது எனது மகன் காதலில் சிக்காமல் படிப்பில் முழுக்கவனத்தோடு இருக்க வேண்டும்)ஓம்சிவசிவஓம் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்.


இன்று முதல் ஒரு மாதத்துக்கு ஒரு நாளுக்கு 10 நிமிடம் மட்டும் இவ்வாறு ஜபிக்க வேண்டும்.இரண்டாம் மாதத்தில் இருந்து ஒரு நாளுக்கு 20 நிமிடமாக அதிகரிக்க வேண்டும்.மூன்றாம் மாதத்தில் இருந்து ஒரு நாளுக்கு 40 நிமிடமாக அதிகரிக்க வேண்டும்.நான்காம் மாதத்தில் இருந்து 1 மணி நேரம் வரை ஜபிக்க வேண்டும்.அதை விட அதிக நேரம் ஜபிக்க வேண்டாம்.ஏனெனில் நமது உடலும்,மனமும்,ஆத்மாவும் அதிகமான ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தைத் தாங்காது.

இந்த ஜப நாட்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.ஆனால்,ஜபிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் உடல் சுத்தம் இருக்க வேண்டும்.

துக்க வீடுகளுக்குச் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டால் ஐந்து நாட்கள் ஜபிக்கக் கூடாது.

குழந்தை பிறப்பு,ருது வீடுகளுக்குச் சென்றால் மூன்று நாட்களுக்குச் சென்றால் மூன்று நாட்களுக்கு ஜபிக்கக் கூடாது.

அசைவம் சாப்பிட்டுவிட்டால் ஐந்து நாட்களுக்கு ஜபிக்கக்கூடாது. தொடர்ந்து(அடிக்கடி) அசைவம் சாப்பிட்டால் இந்த மந்திரம் ஜபித்தது வீணாகிவிடும்.எனவே,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும்.

இந்த ஜபம் செய்யும் விஷயத்தை முடிந்தவரையிலும் எவரிடமும் சொல்லாமலிருப்பது அவசியம்.மீறிச் சொன்னால்,அவர்களின் பொறாமை எண்ணங்கள் நம்மை தொடர்ந்து ஜபிக்க விடாமல் தடுத்துவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.



ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது காலையில் 30 நிமிடம்;மாலையில் 30 நிமிடம் என்று பிரித்து ஜபிக்கலாம்;


காலை மதியம் மாலை இரவு நள்ளிரவு அதிகாலை என எந்த நேரத்திலும் ஓம்சிவசிவஓம்/ஹரிஹரிஓம் ஜபிக்கலாம்.

ஜீவசமாதிகள்,புராதனமான சிவாலயங்கள்,மாட்டுத்தொழுவம்,அரசமரம்,மான் தோல்(வனத்துறை அனுமதி தேவை),சித்தர்பீடங்கள்,உயரமான மலைகள் போன்ற இடங்களில் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தால் விரைவான மந்திர ஸித்தி கிடைக்கும் என்பது அனுபவம்!

தினமும் காலை 4.30 முதல் 6 மணிக்குள் நமது வீட்டில் ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபித்தால் விரைவான மந்திர சக்தி கிடைக்கும் என்பது அனுபவ உண்மை!!!

உங்களின் மந்திர ஜப எண்ணிக்கை பத்தாயிரத்தைத் தாண்டியதும்,சில மன மாறுதல்களை அனுபவிக்கத் துவங்குவீர்கள்.
ஐம்பதாயிரத்தைத் தாண்டியதும் பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரிய ஆரம்பிக்கும்.


ஒரு லட்சத்தைத் தாண்டியதும் சில நம்ப முடியாத அதிசயங்களை உணர்வீர்கள்;செய்வீர்கள்.


இரண்டு லட்சத்தைத் தாண்டியதும் நீங்கள் ஒரு புண்ணிய ஆத்மா என்பதையும் எப்பேர்ப்பட்டவர்கள் என்பதையும் புரிந்துகொள்வீர்கள்.


பத்து லட்சத்தைத் தாண்டியதும் அஷ்ட கர்மங்களும் கைகூடத் துவங்கும்.


ஒரு கோடியைத் தாண்டியதும்(இந்த நிலையை எட்டிட ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் முயன்றால் பத்தாண்டுகள் ஆகும்)ஒரே நேரத்தில் பதினெட்டு சித்தர்களும் நேரில் ஒன்றாக காட்சியளித்து ஆசி தருவார்கள்.


ஓம்நமச்சிவாய என்ற மந்திரத்தை ஜபிக்க முறைப்படி தீட்சை வாங்க வேண்டும்;அப்படி தீட்சை வாங்கிட 60 வயதைக் கடந்திருக்க வேண்டும்;60 வயதுக்குள் குடும்பப் பொறுப்புக்களை நிறைவேற்றியிருக்க வேண்டும்;உணவில் பூண்டு,வெங்காயம் சேர்க்கக் கூடாது.பொறாமைப்படக்கூடாது.இப்படிப்பட்டக்      கட்டுப்பாடுகளைப்  பின்பற்றினால் நீங்கள் ஓம்நமச்சிவாய ஜபிக்கத் தகுதியானவர் என்று அர்த்தம்.

ஓம்சிவசிவஓம் ஜபிக்க தீட்சை தேவையில்லை;இரண்டே இரண்டு கட்டுப்பாடுகள் மட்டுமே தேவை;முதலாவது உங்கள் வயது 21 நிரம்பியிருக்க வேண்டும்.இரண்டாவது அசைவம் சாப்பிடக் கூடாது.


தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்கள் தேய்பிறை அஷ்டமியன்று மட்டும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதை நிறுத்திவிட்டு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டு வரலாம்.


மேலும் முழுவிபரமறிய இங்கே சொடுக்கவும்.


ஓம்சிவசிவஓம்

3 comments:

  1. மதிப்பிற்குரிய ஐயா வணக்கம்,

    "ஓம் ஹரிஹரி ஓம்" ஜபிக்க ஆறுமுகம் கொண்ட ருத்ரட்ஷம் உபயோகிக்கலமா? மற்றும் சாதரணமாக ஸ்படிகமணிமாலை அணியலமா அதிலும் பெண்கள் அணியலாமா அதற்கான விதிமுரைகள் என்ன?
    இப்படிக்கு
    சுந்தரம்

    ReplyDelete
  2. ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க ருத்ராட்சம் தேவையில்லை;சாதாரணமாக ஸ்படிகமாலை அணியலாம்; ஆறுமுக ருத்ராட்சம் அணிவதால்,கல்வியில் முன்னேற்றமும்,நினைவுத்திறனும் அதிகரிக்கும்.

    ReplyDelete