Wednesday, May 30, 2012

ஆன்மீகக்கடல் ஆசிரியருடன் ஒரு நேர்காணல்:பாகம் 13



கேள்வி:நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப பைரவர் வழிபாடு,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் செய்வதைப்  பற்றி எழுதிக்கொண்டே இருக்கிறீர்கள்.இதனால்,உங்களின் வாசக,வாசகிகளுக்கு போரடிக்காதா?
பதில்:எமக்கு பைரவரைப் பற்றிய பல அரிய ரகசியங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.அவைகள் அனைத்தையும் ஆன்மீகக்கடலில் வெளியிட முடியவில்லை;அவைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கருத்துக்களை மட்டுமே வெளியிட்டுவருகிறோம்;
இன்னும் பைரவரைப் பற்றிய பல்வேறுவிதமான தெய்வீக ரகசியங்கள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன.இருப்பினும்,அவைகளை முடிந்தவரையிலும் பின்பற்றி,அந்த பின்பற்றும் வழிமுறை சுலபமாக இருந்தால் மட்டுமே வெளியிட முடிகிறது.
நேர்மையாளர்களுக்கு உடனடி பாதுகாப்பையும்,உதவியையும் தருவது பைரவர் வழிபாடு மட்டுமே!!!
ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் மகிமைகளை நீங்கள்  உணர வேண்டுமெனில்,ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தது 100 நாட்கள் விடாமல் நீங்களும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர வேண்டும்.அதன் சக்தி என்னவென்பதை அப்போதுதான் உணருவீர்கள்.
கேள்வி:அப்படியா,மிக்க மகிழ்ச்சி!!!
இருப்பினும் ஒரு சந்தேகம்.நீங்கள் கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக பைரவர் வழிபாடு பற்றியும்,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக எழுதி வருகிறீர்கள்.இந்த பதிவுகளை வாசித்துவிட்டு,பலர் பைரவரின் அனுக்கிரகத்தைப் பெற்றிருப்பார்கள். . . பெற்றுக்கொண்டும் இருப்பார்கள். . .
அதே போல ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தை பலர் தினமும் ஜபித்துக்கொண்டிருப்பார்கள்.அதன் மூலமாக பலருக்கு ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியை பலர் பலவிதமாக உணர்ந்திருப்பார்கள்.
இருந்தும் கூட,நீங்கள் ஏன் அந்த அனுபவங்களை இதுவரை பதிவாக எழுதவில்லை?
பதில்:மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய,பெருமை தரக்கூடிய கேள்வியை கேட்டிருக்கிறீர்கள்.
பைரவர் வழிபாட்டின் மூலமாக கோவையில் இருக்கும் நமது வாசகிக்கு ஒருவிதமான அனுபவம் கிட்டியிருக்கும்.சென்னையில் இருக்கும் வாசகர் ஒருவருக்கு வேறுவிதமான அனுபவத்தை உணர்ந்திருப்பார்; நாமக்கல்லில் இருக்கும் நமது வாசகர் இன்னொரு விதமான அனுபவத்தையும் கண்டிருப்பார்.இவைகளை பதிவாக வெளியிட்டால்,அந்த அனுபவம் நமக்கு எப்போது கிட்டும் என்ற எண்ணமே  புதிதாக பைரவ வழிபாடு செய்பவர்களுக்கு வருமே ஒழிய,அவர்களது சொந்த அனுபவத்தை ஏற்கும் மனோபாவம் உருவாகாது.

நாமக்கல் வாசகர் கடந்த சில பிறவிகளாக பைரவ வழிபாடு செய்திருப்பார்;அவரது அனுபவம் மற்றவர்களுக்கு இந்த பிறவியிலேயே கிடைக்கலாம்;கிடைக்காமல் அடுத்த பிறவியில் கிடைக்கலாம்.

இதேபோலத்தான் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியும்!
ஆன்மீகக்கடல் துவங்கிய சில மாதங்களில் எனது ஆன்மீக மற்றும் ஜோதிட குருக்களின் எழுத்துக்களைப்பரப்புவதில் பெருமை கொண்டேன்.


அடுத்த சில வருடங்களில் அந்த எழுத்துக்களைப் பின்பற்றியதால் ஏற்பட்ட அனுபவங்களை கேட்டு நானே பிரமித்துப்போனேன்.அப்போது அடியேன் சீடனாகும் தகுதியைப் பெற்றேன்;எனவே,என்னைத் தேடி எனது குரு வந்தார்.(பழமொழி:சீடன் தயாராக இருக்கும்போது குரு தானாகவே தோன்றுவார்!!!)


கடந்த ஓராண்டாக பைரவர் வழிபாடு,ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் அனுபவம் போன்றவைகளை குருவின் அனுமதியின்றி வெளியிடுவது தவறு என்று புரிந்தது.

மேலும் இந்த தெய்வீக வழிபாட்டின் அனுபவங்களை பதிவாக வெளியிடும் போது,அது ஒரு சில பக்தர்களுக்கு மட்டுமே போய்ச் சேருகிறது.மற்றவர்கள் இதை கேலியும்,கிண்டலும் செய்கிறார்கள்.எனவே,நமது ஆன்மீகக்கடல் நடத்தும் ஆன்மீகப்பயிற்சி வகுப்புகள்,குறிப்பிட்ட கோவில்களில் நமது வாசக,வாசகிகள் வழிபாட்டுக்கு வரும்போது நேரடியாக இந்த அனுபவங்கள் பகிர்ந்துகொண்டுதான் இருக்கிறோம்.


ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்லலாம்:இதுவரை எத்தனையோ பரிகாரங்கள் செய்து களைத்தும்,ஏமாந்தும்போனவர்கள் ஆன்மீகக்கடலில் வெளிவந்திருக்கும் ஏதாவது ஒரே ஒரு பரிகாரம் அல்லது வழிபாட்டை ஓராண்டு வரை பின்பற்றினால்,அதன்பிறகு அவர்களின் பெரும்பாலான கஷ்டங்கள்,சிரமங்கள்,வேதனைகள் அடியோடு தீர்ந்துவிடும் என்பது பல நூறு வாசக,வாசகிகள் கூறும் அனுபவ உண்மைகள் ஆகும்.

யாராக இருந்தாலும் குரு அருளும்,திரு அருளும்,இறை அருளும் இருந்தால் இந்த கொடூரமான கலியுகத்திலும் நிம்மதியாகவும்,செல்வச் செழிப்போடும் வாழலாம் என்பது அனுபவ உண்மை!!!

ஓம்சிவசிவஓம்

1 comment:

  1. u r right boss...i have followed ur suggestion only for two months...it worked..i am in abroad now..Keep ur good work

    ReplyDelete